search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் பாதிப்பு - விவசாயிகள் முற்றுகை
    X

    சித்தம்பாடி மணல் குவாரியை மூடக்கோரி விவசாய சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் பாதிப்பு - விவசாயிகள் முற்றுகை

    • சட்டவிதிகளை மீறி 20 அடி ஆழத்திற்கும் மேல் மணல் மற்றும் சவுடு மண் தோண்டி எடுப்பதால் அப்பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • குவாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், மருதம்பள்ளம் அருகே சித்தம்பாடி கிராமத்தில் விதிகளை மீறி அதிக அளவு ஆழத்திற்கு மணல் கொள்ளையடிக்கும் மணல்குவாரியை விவசா யிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர்.

    செம்பனார்கோவில் ஒன்றியம், மருதம்பளம் கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம், கிடங்கல், நத்தம் ஆகிய பகுதிகளில் 5 க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகின்றது.சட்டவிதிகளை மீறி 20 அடி ஆழத்திற்கும் மேல் மணல் மற்றும் சவுடு மண் தோண்டி எடுப்பதால் அப்பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குவாரிகளின் நடவடி க்கைகளை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறை மற்றும் கணிமவளத்துறை அதிகாரிகளோ லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.இதனிடையே மருதம்பள்ளம் சித்தம்பாடி கிராமத்தில் சாரங்கம் ஆசாரி என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குவாரியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் எடுத்து செல்லப்படுகிறது.இதுவரை 20 அடி ஆழத்தையும் தாண்டி மண் எடுத்ததால் நீர் சுரந்து ஏரிப்போன்று அப்பகுதி காணப்படுகிறது. அந்த குவாரியை மூடக்கோரி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யூ.சண்முகம், தலைவர் தெட்சிணாமூர்த்தி, பொருளாளர் பன்னீர்செ ல்வம், சிபிஎம் ஓன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் வீ.எம்.சரவணன் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர். சித்தம்பாடி குவாரியால் சுற்றியுள்ள விளைநிலங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், குவாரியை யொட்டியுள்ள பயிரி டப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்கள் முறையாக வளராமல் உள்ளதாகவும்.

    தொடர்ந்து இப்பகுதியில் மணல் குவாரிகள் செயல்ப ட்டால் வழக்கமாக பயிரிட ப்பட்டு வந்த நிலக்கடலை, பருத்தி, நெல் ஆகியவற்றை கைவிட்டு விவசாயிகள் வேறு வேலைக்கு செல்ல வேண்டிய அபாய நிலை ஏற்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் யூ.சண்முகம் கூறியதோடு பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலம் என அறிவித்து விட்டு திரும்பும் திசையெ ல்லாம் குவாரிகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. நான்கு வழிச்சாலை பணிக்காக இப்பகுதியில் ஏராளமான குவாரிகள் செயல்பட அனுமதியளித்துள்ள கணிம வளத்துறை இதைப்ப யன்படுத்தி சட்டவி ரோதமாக செயல்படும் குவாரிகளுக்கும் அனுமதிய ளித்திருக்கிறது.

    இப்பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலை விலேயே கடற்கரை உள்ளதால் மணல் குவாரிகள் அதிகளவு ஆழத்தை தோண்டுவதால் விவசாய பகுதிகளில் உப்புநீர் புகுந்து வருவதால் சுமார் ஆயிரம் ஏக்கம் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் விவசாயம் கடுமையாக பாதிக்கிறது. என்றார். உடனடியாக சித்தம்பாடி குவாரியை மூடவில்லையெனில் போரா ட்டங்களை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×