என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பண்ண சாமி கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
    X

    உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    கருப்பண்ண சாமி கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

    • பரமத்திவேலூர் தாலுகா, சேளுர் சாணார்பாளையம், கள்ளாங்காடு பகுதியில் கருப்பண்ண சாமி கோவில் உள்ளது.
    • ஒரேநாளில் நடைபெற்ற இந்த உண்டியல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    பரமத்திவேலூர்;

    பரமத்திவேலூர் தாலுகா, சேளுர் சாணார்பாளையம், கள்ளாங்காடு பகுதியில் கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை வழக்கம் போல் பூஜைகள் செய்து விட்டு கோவில் பூசாரி ரங்கசாமி வீட்டிற்கு சென்று விட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது கோவிலில் உள்ள இரும்பாலான உண்டியலின் மேல் பகுதி உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து கோவில் பூசாரி ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடைக்கப்பட்ட உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. இதே போல் சேளுர் சாணார்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுமார் 47 அடி உயரமுள்ள முனியப்பன் சாமி கோயில் உண்டியலையும் மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

    ஆனால் அந்த உண்டியலை உடைக்க முடியாதததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கோவில் முன்பு இருந்த வேல் ஒன்றை உடைத்து விட்டு சென்றுள்ளனர். ஒரேநாளில் நடைபெற்ற இந்த உண்டியல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×