search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhavani river"

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் கடந்த 17-ந் தேதி மாலை பவானிசாகர் அணை மீண்டும் 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து அப்படியே 4,700 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    • பவானி பழைய பஸ் நிலையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
    • இந்த பாலத்தில் பவானியில் இருந்து நுழையும் போது ரோட்டின் நடுவே சிறிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது.

    பவானி:

    பவானியில் இருந்து ஈரோடு செல்லும் வகையில் பவானி பழைய பஸ் நிலையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இந்த பாலத்தின் வழியாக தினசரி மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ், லாரி உட்பட கனரக வாகனங்கள் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நடைபெற்ற வண்ணம் இருக்கும்.

    இந்த பாலத்தில் பவானியில் இருந்து நுழையும் போது ரோட்டின் நடுவே சிறிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது. இதனால் பகல் நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுதாரித்து கொள்ளும் நிலையில், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அப்பகுதியில் உள்ள பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக தகவல் வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை அருகில் பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் ஆணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பில்லூர் அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • 3 நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

    சத்தியமங்கலம்:

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 3 நாட்களாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து வாய்க்காலில் வினாடிக்கு 1,600 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 300 கனஅடியும், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனத்துக்கு 800 கன அடியும், பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 6,700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.

    • ஆற்றில் பொதுமக்கள் இறங்வோ துணி துவைக்கவோ கூடாது என ஒலிப்பெருக்கி மூலமும் அறிவிப்பு செய்து வருகின்றனர்.
    • 2-வது நாளாக இன்றும் பில்லூர் அணை திறக்கப்பட்டு 19,000கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டது.

    காரமடை

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து கன மழையாக கொட்டி வருகிறது.இதனால் அங்குள்ள பல்வேறு அணைகளும் நிம்பி தண்ணீர் வெளி–யேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றைய தினம் அணையின் முழு கொள்ளவான 100அடியில் 97அடி எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளும் திறக்கபட்டன.

    நேற்று இரவு முதல் அணையில் இருந்து 12,000கன அடியில் இருந்து 26,000கன அடிவரை பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

    இந்த நிலையில் தற்போது 2-வது நாளாக இன்றும் பில்லூர் அணை திறக்கப்பட்டு 19,000கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் 2-வது நாளாக இன்றும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தாழ்வாக வசிக்கும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டுப்பாளையம் ஆற்று பாலம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு ஆற்றில் பொதுமக்கள் இறங்வோ துணி துவைக்கவோ கூடாது என ஒலிப்பெருக்கி மூலமும் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

    • இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது பில்லூர் அணை. இந்த அணை 100 அடி கொள்ளளவு கொண்டதாகும். நீலகிரி மற்றும் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96 அடியாக இருந்தது. அதன்பின்னர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கும் நீர்வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து, 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு வச்சினம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாசில்தார் மாலதி,மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அடுத்த தொட்டிபாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம். அரசு பஸ் டிரைவர். இவரது மகன் தினேஷ்குமார்(19). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சஞ்சய்(18) வருண்(19) ஸ்ரீஹரி(16) சூரியா(19)ஆகியோருடன் நெல்லித்துறை அடுத்துள்ள விளாமரத்தூர் குண்டுக்கல்துறை பவானி ஆற்றுக்கு குளிக்கச்சென்றார். அவர்கள் 5 பேருக்கும் நீச்சல் தெரியாது. தினேஷ்குமார் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். திடீரென அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீரில் மூழ்கி தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்ன கேசவன், ஏட்டு தங்கவேல், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் அரை மணிநேரம் போராடி தினேஷ்குமார் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி ஆற்றில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பிணமாக மிதந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் அத்தாணியில் உள்ள பவானி ஆற்றில் ஒரு பெண்ணின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் வந்து ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் அப்படி எந்த பெண்ணின் உடலும் இல்லாததால் திரும்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணி மாரியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் பெண்ணின் உடலை கண்ட பொதுமக்கள் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதன் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு ஒரு பெண்ணின் உடல் ஆற்றில் மிதந்ததை கண்டனர். அந்த பெண்ணுக்கு 20 முதல் 25 வயதுக்குள் இருக்கும். சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி உள்ளது. காலில் கொலுசு அணிந்திருந்தார்.

    எனவே அந்த பெண் திருமணமானவர் என்றும் சமீபத்தில் தான் திருமணம் நடந்திருக்க கூடும் எனவும் தெரிகிறது. ஆனால் உடல் தண்ணீரில் மூழ்கி உப்பி போய் காணப்பட்டது. போலீசார் உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.

    அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

    ஆற்றில் இறங்கி குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கி பலியானாரா? அந்த பெண்ணை யாராவது கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றார்களா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லித்துறை பவானி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலிக்கோட்டை கிட்டியா கவுண்டனூரை சேர்ந்தவர் கணேசன் (48). இவரது மனைவி அன்னக்கிளி.இவர்களுக்கு தீபக் கிருஷ்ணன்(21), அன்பு(10) என்ற 2 மகன்கள் உள்ளனர். தீபக் கிருஷ்ணன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3 -ஆம் ஆண்டு படித்து வந்தார். 

    கணேசன் தனது குடும்பத்தினருடன் சோமனூர் கருமத்தம்பட்டியில் உள்ள உறவினர் முத்துசாமி என்பவரது வீட்டிற்கு வந்திருந்தார். தீபக் கிருஷ்ணன் தனது கல்லூரி நண்பர்கள் கூறியதை மனதில் நினைத்து மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையில் உள்ள குண்டுக்கல்துறை பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக தனது தம்பி அன்பு. மற்றும் நண்பர்கள் அருண்(16) ஜேம்ஸ்(19)தினேஸ்(19) ஆகியோருடன் வந்து ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அனைவருக்கும் நீச்சல் தெரியாது. அப்போது திடீரென தீபக்கிருஷ்ணன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். தத்தளித்த அவர் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ரெட் அலர்ட் என்பது ஒரே சமயத்தில் மிக மிக கனமழை பெய்யும். யாரும் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கைதான் இந்த ரெட் அலர்ட்.

    இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதையொட்டி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் உஷாராக இருக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கதிரவன் முடுக்கி விட்டுள்ளார்.

    இது குறித்து கலெக்டர் கதிரவன் இன்று காலை ‘மாலை மலர்’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 113 இடங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக (தாழ்வான பகுதிகள்) அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, ஊரகத்துறை போன்ற அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. வெள்ளம் பாதிக்கப்படும் இடங்களுக்கு இவர்கள் விரைந்து சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

    மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணையான பவானிசாகர் அணை மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது. உபரி நீரை திறக்க வாய்ப்புள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பவானி ஆற்றின் கரையோரம் வருவாய்த்துறையினர் முகாம் அமைத்து நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.
    சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றங்கரையோரம் குளித்தபோது நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    சத்தியமங்கலம்:

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ஆனந்த் (வயது 18). ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் எபின் (23). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இவர்கள் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் கொண்டமுத்தனூர் கிராமத்தை ஒட்டியுள்ள பவானி ஆற்றங்கரைக்கு வந்தனர்.

    அவர்களுடன் நண்பரான அலெக்ஸ் என்பவரும் வந்திருந்தார். ஆனந்தும், எபினும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அலெக்ஸ் ஆற்றங்கரையில் நின்றார்.

    குளித்துக்கொண்டிருந்த ஆனந்தும், எபினும் ஆற்றின் ஆழமாக பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் ஆற்று நீரில் மூழ்கினர். இதை பார்த்த அலெக்ஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆற்றில் இறங்கி 2 வாலிபர்களையும் தேடினர். நேற்று பகலில் நடந்த இந்த தேடுதல் பணியில் அந்த பகுதி மீனவர்களும் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை வரை தேடியும் 2 வாலிபர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் நேற்று தேடும் பணி நிறத்தப்பட்டது.

    இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரர்களும், மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆற்றில் மூழ்கிய ஆனந்த் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அவர் ஆற்றில் மூழ்கிய இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்படாம்பாளையம் பிரிவில் ஆற்றில் மிதந்தது.

    உடலை பார்த்து ஆனந்தின் உறவினர்கள் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆற்றில் மூழ்கிய இன்னொரு வாலிபரான எபினும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்த வருகிறது.
    பவானி ஆற்றை கடக்க முயன்றபோது ஆற்றில் சிக்கிய 10 பெண்களை காப்பாற்றிய விவசாயியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். #BhavaniRiver
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்து கோம்பை கிராமத்தை சேர்ந்த பெண்கள் சத்தி அருகே உள்ள அரியப்பம்பாளையத்துக்குச் சென்று வயலில் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.

    இவர்களின் ஊரின் குறுக்கே பவானி ஆறு செல்கிறது. ஆற்றில் தண்ணீர் குறைவாக செல்வதால் முதல் நாளில் எளிதில் ஆற்றை கடந்து சென்று விட்டனர். நேற்று காலையிலும் 13 பெண்கள் அரியப்பம்பாளையம் வந்து பணி முடித்து ஊருக்கு புறப்பட்டனர்.

    முதல் நாளில் சென்றதுபோல் நேற்று மாலையும் பவானி ஆற்றை கடந்து சென்று விடலாம் என 13 பெண்களும் பவானி ஆற்றில் இறங்கி கடக்க முயன்றனர். ஆற்றின் மத்தி பகுதிக்கு சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    நேற்று பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இது தெரியாமல் ஆற்றைக் கடந்த பெண்கள் தண்ணீரில் சிக்கினர். மத்திய பகுதிக்கு சென்ற அவர்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் அந்த பெண்கள் கூக்குரலிட்டனர் ‘‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’’ என அபயக் குரலிட்டனர். அவர்களின் குரல் கேட்டு ஆலத்துகோம்பை ஊரைச் சேர்ந்த ரஜினி (40) என்ற விவசாயி ஓடி வந்து ஆற்றில் சிக்கிய பெண்களை துணிச்சலுடன் ஆற்றில் குதித்து காப்பாற்றினார். தண்ணீரில் தத்தளித்த 10 பெண்களை தனது உயிரைப் பணயம் வைத்து மீட்டார்.

    மீதமுள்ள 3 பெண்களை தண்ணீர் இழுத்துச் சென்றது. மற்றும் மூன்று பெண்களையும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என ரஜினி வேதனை அடைந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சரசாள் (வயது 25) பெரிய மணி (55) என்ற இரண்டு பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் சத்தியமங்கலம் போலீசாரும் விரைந்து வந்தனர். பிணமாக மீட்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பழனிச்சாமி என்பவரின் மனைவி வசந்தா (45) கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. அவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்க கூடும் என்று கருதப்பட்டது. இன்று காலை 8 மணியிலிருந்து வசந்தா உடலை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடங்கியது. இந்த பணியில் போலீசார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஈடுபட்டனர்.

    செம்படாம்பாளையம் பவானி ஆற்று படித்துறையில் வசந்தா உடல் இன்று காலை 9 மணிக்க கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது.

    பவானி ஆற்றில் சிக்கி தத்தளித்த 13 பெண்களில் 10 பெண்களை தனி ஒரு மனிதராக அந்த பகுதியை சேர்ந்த ரஜினி என்ற விவசாயி காப்பாற்றி உள்ளார்.

    சம்பவத்தன்று ரஜினி ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஆற்றின் மத்தியில் அலறும் சத்தமும் கைகள் மட்டும் வெளியே தெரிந்தது.

    இதை கண்ட ரஜினி ஆற்றில் யாரோ சிக்கி இருப்பதை உறுதி செய்து அடுத்த கணம் ஆற்றில் குதித்தார். நீரின் மத்தி பகுதிக்கு சென்ற அவர் ஒவ்வொரு பெண்ணாக இழுத்து ஆழமான பகுதியில் இருந்து மீட்டார்.

    ஆற்றின் கரையில் ரஜினியின் உறவினர் பெண் (தங்கைமுறை) லதா நின்று இருந்தார். அவரும் உதவி செய்தார். ஒவ்வொரு பெண்ணையும் ஆழமான பகுதியில் இருந்து ரஜினி காப்பாற்ற கரையில் இருந்த லதா கரையில் இருந்த சேலைகளை எல்லாம் கயிறு போல் சேர்த்து கட்டி ஆற்றில் வீசினார். அதை பிடித்து கொண்டு பெண்கள் கரை ஏறினார்கள்.

    கரையேறிய பெண்கள் மற்ற 3 பேரையும் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என வேதனை அடைந்தனர். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தங்களை மீட்ட ரஜினியை சூழ்ந்து கொண்டு 10 பெண்கள் அழுதபடி தங்களை காப்பாற்றியதற்காக நன்றி கூறினர்.

    பெண்களை காப்பாற்றியது குறித்து ரஜினி கூறும்போது, ‘‘நான் ஆற்றின் கரையில் நின்று இருந்தேன். அப்போது ஆற்றின் மத்தி பகுதியில் இருந்து பெண்கள் அலறும் சத்தம் கேட்டது. பார்த்த போது ஆற்றில் கைகள் மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிந்தது.

    அவர்களை காப்பாற்ற ஆற்றில் குதித்தேன். 10 பெண்களை காப்பாற்ற முடிந்தது. மீதி 3 பேர்களை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது என்று கூறினார்.

    தனி ஒரு மனிதனாக ஆற்றில் குதித்து 10 பெண்களை காப்பாற்றிய விவசாயி ரஜினிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.  #BhavaniRiver

    ×