search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sinking"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
    • நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது.

    அபிராமம்

    கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பனைமரங்கள் பரவலாக இருந்தாலும் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் பலவித நன்மை தரும் நுங்கு களை அபிராமம் பகுதி மக்கள் பெரிதும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாத புரம், ராமேசுவரம் பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி கமுதி, அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நுங்கு விற்பனை அமோக மாக நடைபெறுகிறது. அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கோடை வெயிலின் தாக் கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்க நுங்கு களை வாங்கி சாப்பிடுகின்ற னர்

    நுங்க சிறப்பு பற்றி முதியவர் ஒருவர் கூறுகை யில், பனைமரங்களில் பெண்பனை மரங்களில் மட்டும்தான் நுங்குகள் காய்க்கு. ஒரு பனை மரத்துக்கு 10 குலைகள் தள்ளும். நுங்கு உடல்நலத துக்கு நல்லது.

    பெரும்பா லானோர் அதன் வெள்ளைச் சோற்று பகுதியை மட்டுமே பிரித்துச் சாப்பிடுகிறார்கள். மாறாக அதன் மேல் ஒட்டுத் தோலையும் சேர்த்துச் சாப்பிடுவதே மிகமிக நல்லது.

    நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது. நுங்கில் உள்ள நீரானது பசியைத் தூண்டும். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே இது சிறந்த மருந்து. உடல் வெப்பத்தைத் தணிக்க வல்லது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோயினை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடியது. ரத்த சோகை நோய்க்கு நூங்கு இயற்கையான மருந்தாகும்.

    நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன.

    கோடைகாலங்களில் பலருக்கும் வியர்க்குரு மற்றும் வேணல் கட்டிகள் உருவாகும். நுங்குத் தண்ணீ ரும், மேல் ஓட்டுடன் கூடிய நுங்கையும் உடலில் வியர்க் குரு மற்றும் வேனல் கட்டி கள் இருக்கும் இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் என்றார்.

    நெல்லித்துறை பவானி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலிக்கோட்டை கிட்டியா கவுண்டனூரை சேர்ந்தவர் கணேசன் (48). இவரது மனைவி அன்னக்கிளி.இவர்களுக்கு தீபக் கிருஷ்ணன்(21), அன்பு(10) என்ற 2 மகன்கள் உள்ளனர். தீபக் கிருஷ்ணன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3 -ஆம் ஆண்டு படித்து வந்தார். 

    கணேசன் தனது குடும்பத்தினருடன் சோமனூர் கருமத்தம்பட்டியில் உள்ள உறவினர் முத்துசாமி என்பவரது வீட்டிற்கு வந்திருந்தார். தீபக் கிருஷ்ணன் தனது கல்லூரி நண்பர்கள் கூறியதை மனதில் நினைத்து மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையில் உள்ள குண்டுக்கல்துறை பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக தனது தம்பி அன்பு. மற்றும் நண்பர்கள் அருண்(16) ஜேம்ஸ்(19)தினேஸ்(19) ஆகியோருடன் வந்து ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அனைவருக்கும் நீச்சல் தெரியாது. அப்போது திடீரென தீபக்கிருஷ்ணன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். தத்தளித்த அவர் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    கோரையாற்றில் மூழ்கி முதியவர் பலியானார். அவர் தவறி விழுந்து மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கீழவாடியகாடு பகுதியை சேர்ந்தவர் மன்மதன் (வயது 60). இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு செல்வதாக புறப்பட்டு சென்ற மன்மதன் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

    இந்த நிலையில் கோரையாற்று சட்ரசில் ஒரு ஆண் பிணம் இன்று காலை மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதுபற்றி முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தது மன்மதன் என தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோரையாற்று சட்ரசில் மன்மதன் தவறி விழுந்து மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கிணற்றில் நீச்சல் பழகிய போது பெண் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராசிபுரம்:

    சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் தனது மனைவி கோகிலாவுடன் (வயது 23). இவர் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிராமம் புரசல்பட்டியில் உள்ள அவரது உறவினர் பிரகாஷ் வீட்டுக்கு வந்திருந்தார். 

    நேற்று மதியம் அக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முனியப்பன் கோவில் அருகிலுள்ள விவசாயி ஒருவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கோகிலா நீச்சல் பழக சென்றார். அவருடன் கணவர் சுப்பராயன் மற்றும் உறவினர்கள் சென்றனர். கிணற்றின் ஆழம் எவ்வளவு என்பது தெரியாமல் கோகிலா கிணற்றில் இறங்கியபோது தவறி விழுந்து கிணற்று தண்ணீரில் மூழ்கினார். 

    கிணற்றில் 35 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. இதனால் மின் மோட்டார் வைத்து தண்ணீரை வெறியேற்றினார்கள். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கோகிலாவை உடனடியாக மீட்க முடியவில்லை. இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் நிலைய பொறுப்பு அதிகாரி குணசேகரன் தலைமையில் விரைந்து சென்றனர்.  

    அவர்கள் 6 மணி நேரம் போராடி கோகிலாவை இன்று விடியற்காலை 2 மணியளவில் சடலமாக மீட்டனர்.  உறவினர் வீட்டுக்கு வந்த கோகிலா கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    ×