search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுங்கு விற்பனை ஜோர்
    X

    நுங்கு விற்பனை ஜோர்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
    • நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது.

    அபிராமம்

    கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பனைமரங்கள் பரவலாக இருந்தாலும் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் பலவித நன்மை தரும் நுங்கு களை அபிராமம் பகுதி மக்கள் பெரிதும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாத புரம், ராமேசுவரம் பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி கமுதி, அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நுங்கு விற்பனை அமோக மாக நடைபெறுகிறது. அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கோடை வெயிலின் தாக் கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்க நுங்கு களை வாங்கி சாப்பிடுகின்ற னர்

    நுங்க சிறப்பு பற்றி முதியவர் ஒருவர் கூறுகை யில், பனைமரங்களில் பெண்பனை மரங்களில் மட்டும்தான் நுங்குகள் காய்க்கு. ஒரு பனை மரத்துக்கு 10 குலைகள் தள்ளும். நுங்கு உடல்நலத துக்கு நல்லது.

    பெரும்பா லானோர் அதன் வெள்ளைச் சோற்று பகுதியை மட்டுமே பிரித்துச் சாப்பிடுகிறார்கள். மாறாக அதன் மேல் ஒட்டுத் தோலையும் சேர்த்துச் சாப்பிடுவதே மிகமிக நல்லது.

    நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது. நுங்கில் உள்ள நீரானது பசியைத் தூண்டும். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே இது சிறந்த மருந்து. உடல் வெப்பத்தைத் தணிக்க வல்லது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோயினை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடியது. ரத்த சோகை நோய்க்கு நூங்கு இயற்கையான மருந்தாகும்.

    நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன.

    கோடைகாலங்களில் பலருக்கும் வியர்க்குரு மற்றும் வேணல் கட்டிகள் உருவாகும். நுங்குத் தண்ணீ ரும், மேல் ஓட்டுடன் கூடிய நுங்கையும் உடலில் வியர்க் குரு மற்றும் வேனல் கட்டி கள் இருக்கும் இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் என்றார்.

    Next Story
    ×