search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl killed"

    • பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
    • வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் நடந்த செல்லக்கூடிய அலிப்பிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டிபாளையத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது 3 வயது மகள் லக்ஷிதாவுடன் சென்றனர்.

    இரவில் மின்விளக்கு வெளிச்சத்தில் பெற்றோரை பிரிந்து சிறுமி படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டிருந்தாள். அப்போது சிறுத்தை சிறுமியை தூக்கி சென்று கடித்துக் கொன்றது.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கின. இதில் குழந்தையை கொன்ற சிறுத்தையை மீண்டும் காட்டிற்கு விடக்கூடாது அது மீண்டும் மனிதர்களை தாக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

    முதற்கட்டமாக 4 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தது. அந்த 4 சிறுத்தைகள் மீண்டும் திருப்பதி வனப்பகுதியில் விடப்பட்டன.

    மேலும் 2 சிறுத்தைகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு பெரிய சிறுத்தை சிறுமியைக் கொன்றது தெரியவந்தது .

    இதனை தொடர்ந்து அந்த சிறுத்தை திருப்பதி பூங்காவில் உள்ள கூண்டில் நிரந்தரமாக அடைக்க முடிவு செய்தனர்.

    மேலும் உள்ள ஒரு சிறுத்தையை காட்டில் விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது ஒரு புறம் இருக்க நேற்று திருப்பதி மலைபாதையில் கரடி ஒன்று நடமாடியது. இதனைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் நேற்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.
    • ஸ்கூட்டரில் இருந்து அவர் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார்.

    விழுப்–பு–ரம்:

    விழுப்–பு–ரம் மாவட்–டம் வானூர் தாலுகா நல்–லா–வூர் கிரா–மத்தைசேர்ந்–த–வர் லோக–நா–தன் (வயது 42). அவ–ரது மனைவி தேவி (38). இவர் கிளி–ய–னூ–ருக்கு சென்று வீட்–டுக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று திரும்பி வந்து கொண்–டி–ருந்–தார்.

    கிளி–ய–னூர் ஏரிக்–கரை சாலை–யில் வந்–தபோது எதிர்–பா–ராத வித–மாக ஸ்கூட்–டரில் இருந்து அவர் நிலைத–டு–மாறி தவறி கீழே விழுந்–தார். இதில் அவருக்கு மூச்–சுத்தி–ண–றல் ஏற்–பட்டு சம்–பவ இடத்–தி–லேயே பரி–தா–ப–மாக இறந்–தார்.

    இது–கு–றித்து தக–வல் அறிந்–த–தும் சம்–பவ இடத்–திற்கு விரைந்து சென்ற கிளியனூர் போலீ–சார் அவ–ரது உடலை கைப்–பற்றி பிரேத பரி–சோதனைக்–காக புதுச்–சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்து வக்கல்லூரி ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்த–னர்.

    • செந்தில் குமாருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார்.
    • மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம் அருகே தட்சூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். ஜெயஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செந்தில் குமார் மற்றும் இவரது மனைவி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டனர். இதனையடுத்து வேலைக்கு சென்ற செந்தில்குமார் மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த மகள் ஜெயஸ்ரீயை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    செந்தில்குமார் அதே பகுதியில் புதியதாக வீடு ஒன்று கட்டிவருகிறார். உடனே அங்கு சென்று ஜெயஸ்ரீயை தேடினார். அப்போது அந்த வீட்டில்கழிவு நீர் தொட்டி கட்டி அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. வீட்டின் அருகே வேலைக்காக மணல் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்து கிடந்தார்.

    இதை பார்த்த ஜெயஸ்ரீயின் தாய் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஜெயஸ்ரீயை மீட்டு தண்ணீரில் விழுந்ததால் மயக்கத்தில் இருக்கலாம் என்று ராமநத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த டாக்டர் ஜெயஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்த ஊா்க்காவல் படையில் பணியாற்றி வரும் வீரசின்னகண்ணன் என்பவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
    • வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து இன்று காலை கைது செய்தனர் .

    திருப்பூர்:

    திருப்பூா் விஜயாபுரம் செந்தில்நகா் பகுதியை சோ்ந்தவா் ஜெயராஜ், இவரது மனைவி ராஜே ஸ்வரி (வயது39). ஜெயராஜ் குவைத் நாட்டில் டெய்லராக பணியாற்றி வருகிறாா். இந்தத் தம்பதியின் மகன் சஞ்சய் (18), மகள் திவ்யதா்ஷினி (8). விஜயாபுரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் திவ்யதா்ஷினி 3-ம் வகுப்பு படித்து வந்தாா்.

    இந்நிலையில் ராஜேஸ்வரி, பள்ளியில் இருந்து திவ்யதா்ஷினியை அழைத்துக் கொண்டு விஜயாபுரத்தில் இருந்து நல்லூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தாா். நல்லூா் காவல் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது பின்னால் வந்த போலீஸ் வாகனம் ராஜேஸ்வரியின் இருசக்கர வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் திவ்யதா்ஷினி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

    ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பாா்த்து அங்கு திரண்ட பொதுமக்கள், காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்த முதலிபாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்த ஊா்க்காவல் படையில் பணியாற்றி வரும் வீரசின்னகண்ணன் (32) என்பவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த நல்லூா் போலீசார் வீரசின்னகண்ணனை பொதுமக்களிடமிருந்து மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

    இந்த சம்பவத்தைக் கண்டித்து காங்கயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கூறுகையில், விபத்தை ஏற்படுத்திய காவல் துறை வாகனத்தை ஓட்டி வந்தவா் வேகமாக வாகனத்தை இயக்கியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, வீரசின்னகண்ணனை கைது செய்வதுடன், சிறுமியின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

    இதனிடையே மாநகர போலீஸ் துணை கமிஷனர் வனிதா தலைமையிலான காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

    இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக வீரசின்ன கண்ணன் மீது 304 ஏ பிரிவின் கீழ் அஜாக்கிரதையாக வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து இன்று காலை கைது செய்தனர் .

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கோவில் அகல் விளக்கில் இருந்து ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியது.
    • மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நரசமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 47). இவரது மகள் ஹேமாவதி (15). இவர் கடந்த மே மாதம் 14-ந் தேதி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது கோவில் அகல் விளக்கில் இருந்து ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியது. இதனால் அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சிறுமி ஹேமாவதியை தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    இந்நிலையில் சிறுமி ஹேமாவதி நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி சிறுமி ஹேமாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூரில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலியை காதலனே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கரூர்:

    கரூர் அருகே வாங்கலில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த கிடந்த பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்து கொன்று வாய்க்காலில் வீசியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கொலை செய்தது யார்? அவரது பெயர், ஊர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூர் சங்கரன்பாளையம் மீனாம் பள்ளி பகுதியை சேர்ந்த பிரேமானந்தம் மகள் பேபி (வயது 21) என்பதும், அவரை கொலை செய்தது அவரது காதலன் நாமக்கல் மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த அன்பரசு (22) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அன்பரசுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பேபியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியானது.

    பேபி நாமக்கல் மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் அன்பரசுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். 

    சம்பவத்தன்று இருவரும் கரூர் வாங்கல் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பகுதிக்கு வந்து அங்கு கரையில் அமர்ந்து பேசியுள்ளனர். அப்போது பேபி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அன்பரசுவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசு , பேபியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். 

    இதையடுத்து என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த அன்பரசு, பேபியின் கழுத்தை சேலையில் இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை வாய்க்காலில் தூக்கி போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்தநிலையில் போலீசார் விசாரணையில் அவர் சிக்கிக்கொண்டார். 

    கைதான அன்பரசுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இந்த கொலை சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. காதலியை காதலனே கொலை செய்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    கிணற்றில் நீச்சல் பழகிய போது பெண் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராசிபுரம்:

    சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் தனது மனைவி கோகிலாவுடன் (வயது 23). இவர் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிராமம் புரசல்பட்டியில் உள்ள அவரது உறவினர் பிரகாஷ் வீட்டுக்கு வந்திருந்தார். 

    நேற்று மதியம் அக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முனியப்பன் கோவில் அருகிலுள்ள விவசாயி ஒருவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் கோகிலா நீச்சல் பழக சென்றார். அவருடன் கணவர் சுப்பராயன் மற்றும் உறவினர்கள் சென்றனர். கிணற்றின் ஆழம் எவ்வளவு என்பது தெரியாமல் கோகிலா கிணற்றில் இறங்கியபோது தவறி விழுந்து கிணற்று தண்ணீரில் மூழ்கினார். 

    கிணற்றில் 35 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. இதனால் மின் மோட்டார் வைத்து தண்ணீரை வெறியேற்றினார்கள். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கோகிலாவை உடனடியாக மீட்க முடியவில்லை. இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் நிலைய பொறுப்பு அதிகாரி குணசேகரன் தலைமையில் விரைந்து சென்றனர்.  

    அவர்கள் 6 மணி நேரம் போராடி கோகிலாவை இன்று விடியற்காலை 2 மணியளவில் சடலமாக மீட்டனர்.  உறவினர் வீட்டுக்கு வந்த கோகிலா கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
    ×