search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே கோவில் விளக்கில் தீப்பற்றி சிறுமி உடல் கருகி பலி
    X

    திருவள்ளூர் அருகே கோவில் விளக்கில் தீப்பற்றி சிறுமி உடல் கருகி பலி

    • கோவில் அகல் விளக்கில் இருந்து ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியது.
    • மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த நரசமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 47). இவரது மகள் ஹேமாவதி (15). இவர் கடந்த மே மாதம் 14-ந் தேதி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது கோவில் அகல் விளக்கில் இருந்து ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியது. இதனால் அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சிறுமி ஹேமாவதியை தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    இந்நிலையில் சிறுமி ஹேமாவதி நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி சிறுமி ஹேமாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×