search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bear"

    • வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது, வெளியில் கரடி நடமாடி கொண்டிருந்தது.
    • கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    காட்டெருமை, சிறுத்ைத, யானை உள்ளிட்டவை ஊருக்குள் புகுந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடியே ஊருக்குள் படையெடுத்து வருகின்றன.

    குறிப்பாக கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊருக்குள் புகும் கரடிகள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்துவதுடன் மக்களையும் அச்சுறுறத்தி வருகிறது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் கக்காச்சி குடியிருப்பு பகுதியில் சம்பவத்தன்று ஒற்றை கரடி ஒன்று வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வந்தது.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் பல பகுதிகளிலும் நீண்ட நேரமாக சுற்றி திரிந்தது. இதற்கிடையே வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது, வெளியில் கரடி நடமாடி கொண்டிருந்தது.

    உடனடியாக மக்கள் சம்பவம் குறித்து குந்தா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் கரடியை குடியிருப்பு பகுதிக்குள் இருந்து அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்.

    இதற்கிடையே தங்கள் பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து, வனத்துறையினர் கரடியை பிடிக்க குடியிருப்பு பகுதியில் கூண்டு வைத்துள்ளனர். மேலும் கரடியின் நடமாட்டத்தை இரவு, பகலாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • திருமண வரவேற்பு விழாவிற்குள் கரடி புகுந்து இனிப்புகளை சாப்பிட்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகி வைரலானது.
    • பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து கரடியை விரட்டி உள்ளனர்.

    அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் ஒரு இளம்ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையொட்டி வரவேற்பு விழாவும் தடபுடலாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விருந்தினர்கள் திரளாக வந்திருந்தனர்.

    அவர்களுக்காக பல்வேறு இனிப்பு வகைகள் மற்றும் விதவிதமான உணவு பண்டங்கள் தயார் செய்யப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திருமண வரவேற்பு விழா நடைபெறும் இடத்திற்குள் கரடி புகுந்து விட்டது. இதைப்பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கும் இங்குமாக ஓடி தப்பிய நிலையில் கரடி நேராக அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் மற்றும் உணவு பண்டங்களை எடுத்து சாப்பிட்டுள்ளது.

    பின்னர் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து கரடியை விரட்டி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திருமண வரவேற்பு விழாவிற்குள் கரடி புகுந்து இனிப்புகளை சாப்பிட்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகி வைரலானது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • குன்னூா் கோடேரி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு 5 பெரிய கரடிகள் ஒரே நேரத்தில் வந்தன.
    • கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக நாவல் பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த மரங்களில் தற்போது நாவல்பழம் கனிய தொடங்கி உள்ளது. எனவே நாவல் பழங்களை ருசிப்பதற்காக கரடிகள் கூட்டம், கூட்டமாக தேயிலைத் தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே வரத்தொடங்கி உள்ளன.

    இந்த நிலையில் குன்னூா் கோடேரி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு 5 பெரிய கரடிகள் ஒரே நேரத்தில் வந்தன. அவை அங்கு உள்ள நாவல் மரங்களில் இருந்து கீழே விழுந்து கிடந்த பழங்களை ருசித்து தின்றன.

    அதன்பிறகு நீண்ட நேரம் அந்த பகுதியில் சுற்றி திரிந்தன. இதற்கிடையே கோடேரி கிராமத்தினர் தேயிலை பறிப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் தோட்டத்துக்குள் நின்ற கரடிகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-கோடேரி கிராமத்தில் நாவல்ப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், தற்போது கரடிகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. அங்கு தரையில் விழுந்து கிடக்கும் நாவல் பழத்தை ருசித்து விட்டு செல்கின்றன.

    இது தேயிலை தோட்ட தொழிலாளா்களை அச்சப்பட வைத்து உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக இந்தக் கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என

    வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
    • பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு பஞ்சாயத்து பகுதியில் காபி, அன்னாசி பழம், வாழை, மிளகு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு குரங்குகள், முயல்கள், நரிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்நிலையில் வாழவந்திநாடு பஞ்சாயத்து கரையன்காடுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனிசாமி (51), காளி (70). இவர்கள் இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

    வழக்கம்போல் இருவரும் இன்று காலை 6 மணி அளவில் அப்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் வழியாக தோட்ட வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    காளியம்மன் கோவில் அருகே சென்றபோது மறைந்திருந்த கரடி, அவர்கள் மீது பாய்ந்து தாக்கியது. முகம், கை, கால் , கழுத்து, உடல் உள்ளிட்ட பகுதிகளில் குடித்து குதறியது. இதனால் நிலைகுலைந்த இருவரும் படுகாயங்களுடன் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செம்மேடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவம் நடந்த வனப்பகுதியில் கரடியை பிடிப்பதற்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே இந்த பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தோட்ட வேலைக்கு சென்ற 2 பேரை கரடி கடித்து குதறிய சம்பவத்தால் வாழவந்திநாடு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • யானை, காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகின்றன.
    • தீப்பந்தங்களை காட்டி கிராம மக்கள் கரடியை வனத்திற்குள் விரட்டினர்

    அரவேணு

    கோத்தகிரி பகுதியில் தற்போது வனவி லங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.குறிப்பாக கரடிகள், சிறுத்தை, யானை, காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகின்றன.

    நேற்று விவசாயி ஒருவரை கரடி தாக்கி படுகாயப்படுத்தியது. கோத்தகிரி அருகே உள்ள அரக்கோடு மல்லி க்கொப்பை என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 34). விவசாயி. இவர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர்மறைவில் மறைந்திருந்த ஒரு கரடி, பிரபு மீது ஆக்ரோஷமாக பாய்ந்தது. பிரபுவை கரடி கடித்து குதறியது.

    இதில் பிரபு படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்க த்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் கரடி அங்கிருந்து ஓடியது. பிரபுவை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரபுவை தாக்கிய கரடி அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது.பொதுமக்கள் தீப்பந்த ங்களை காட்டி விரட்டினர் இதையடுத்து கரடி அங்கிருந்து ஓடி மறைந்தது. கிராமத்துக்குள் திரியும் அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து காட்டு ப்பகுதியில் விட வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். காயம் அடைந்த விவசாயி பிரபுவுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ௩ குழந்தைகள் உ ள்ளனர்.

    • பாட்டிஸ்ட் காலனியில் ஒரு கரடி பகல் நேரத்தில் சாலையில் ஓடும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.
    • கரடியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோத்தகிரி, பாட்டிஸ்ட் காலனியில் ஒரு கரடி பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்து சாலையில் ஓடும் காட்சி, அங்கு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்த பகுதியில் தொடர்ந்து உலா வரும் கரடி, பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நேரும்முன்பாக, அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
    • கரடி குட்டிகளுடன் இரவு நேரத்திலும் நடமாடுவதாகக் கூறப்படுகிறது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறும் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவி வருகின்றன.

    இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூா் செல்லும் சாலையில் கன்னிகாதேவி காலனி பகுதியில் பகல் நேரத்தில் இரண்டு குட்டிகளுடன் கரடி உலவி வந்தது. இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அச்சமடைந்தனா். சிலா் கைப்பேசியில் அதை படம் எடுத்தனா்.

    இந்தக் கரடி குட்டிகளுடன் இரவு நேரத்திலும் அப்பகுதியில் நடமாடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். கரடிகளால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் குட்டிகளுடன் திரியும் கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது.
    • அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்துள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது.

    இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கன்னிகாதேவி காலனி பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் குட்டியுடன் கரடி ஒன்று சுற்றி வந்தது.

    இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்துள்ளனர். கரடிகள் பொதுமக்கள் யாரையாவது தாக்கும் முன் வனத்துறையினர் சாலைகளில் சுற்றித்திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து வனபகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நாங்குநேரியில் கடந்த 11-ந் தேதி விளைநிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்jது.
    • மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விளைநிலங்களில் கரடியின் நடமாட்டம் இருந்ததால் அந்த பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    நெல்லை:

    நாங்குநேரியில் கடந்த 11-ந் தேதி விளைநிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்து விட்டதாக கிடைத்த தகவலையடுத்து நெல்லை வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.

    வீடுகளிலேயே முடங்கிய மக்கள்

    நாங்குநேரி பெரியகுளத்தின் கரை, மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விளைநிலங்களில் கரடியின் நடமாட்டம் இருந்ததால் அந்த பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, வாழை வயல்களுக்குள் கரடியின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. கரடியை பிடிக்க 2 கூண்டுகள் வரவழைத்து அதனை 2 இடங்களில் வைத்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    போக்குகாட்டும் கரடி

    4-வது நாளாக இன்றும் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கரடிக்கு பிடித்தமான பழ வகைகளை கூண்டில் வைத்து அதிகாரிகள் காத்திருக்கின்றனர். ஆனால் கரடி கூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.

    இந்நிலையில் நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கரடியை விரைந்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து இன்று வனத்துறை அதிகாரிகள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வைக்கப்பட்டு இருந்த கூண்டை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதூர் பகுதியில் வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கரடியின் நடமாட்டம் புதூர் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கூண்டு வைக்க முடிவெடுத்துள்ளோம். விரைவில் கரடியை பிடித்து விடுவோம்." என்றனர்

    • விவசாயிகள் விவசாய பணிகளில் நேற்று மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
    • பெரியகுளத்தில் இருந்து வெளியேறிய கரடி விளை நிலங்களுக்குள் புகுந்து மறைந்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரியகுளத்தின் கரையில் மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை, நெல் பயிர் செய்து வருகின்றனர்.

    கரடி புகுந்தது

    இந்நிலையில் நேற்று பகலில் விளைநிலங்களில் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கரடி புகுந்தது. வயலில் வாழை இலைகள் அறுத்து கொண்டிருந்த விவசாயியை கரடி ஓட, ஓட விரட்டியுள்ளது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்து விளைநிலங்களில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயிகளும் அச்சத்தில் சிதறி ஓடினர்.

    அதன்பின் கரடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மறுகால்குறிச்சி செல்லும் சாலையை கடந்து, பெரியகுளத்துக்குள் சென்றுள்ளது. அதன் பின் மீண்டும் பெரியகுளத்தில் இருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுந்து மறைந்தது. இந்த சம்பவம் நாங்குநேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கூண்டு வைப்பு

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்குறுங்குடி, நெல்லை வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். கரடி நடமாட்டம் காணப்பட்ட விளைநிலங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் விவசாயிகள் அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கரடியை உயிருடன் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. அதில் கரடி விரும்பி உட்கொள்ளும் பழவகைகள் வைத்து வனத்துறையினர் இன்று 2-ம் நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • வன விலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.
    • கூண்டுக்குள் சிக்கிய கரடியை வனப்பகுதியில் கொண்டுவிடும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் வன விலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.

    இதுபோல வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி ஒன்று களக்காடு அருகே பெருமாள்குளம் கிராமத்திற்குள் சுற்றி திரிந்தது. இதன் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த கிராம மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அதன்படி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் பெருமாள் குளம் கிராமத்தில் கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை கூண்டுக்குள் கரடி சிக்கியது. கூண்டுக்குள் சிக்கிய கரடியை வனப்பகுதியில் கொண்டுவிடும் பணிகளில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட தலமலை இருந்து திம்பம் செல்லும் வனப்பகுதி ரோட்டில் ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி உலாவியது.
    • இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்த்தில் 10 வன சரகங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியான இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வரு கின்றன.

    இந்த வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. அப்போது அந்த வழியாக வரும் லாரிகளை வழிமறித்து அதில் இருந்து கரும்புகளை தின்று வரு கிறது.

    மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து புலி, சிறுத்தைகளும் வெளியே வந்து செல்கிறது. இதே போல் கரடிகளும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை செல்போன்களில் படம் பிடித்தும் செல்கிறார்கள். அப்போது ஒரு சில நேரங்க ளில் வாகன ஓட்டிகளை துரத்துகிறது.

    இந்நிலையில் தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட தலமலை இருந்து திம்பம் செல்லும் வனப்பகுதி ரோட்டில் ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி உலாவியது. இதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறிது தூரத்துக்கு முன்பே வாகனங்களை நிறுத்தி கொண்டனர்.

    இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.தாளவாடி மற்றும் தலமலை வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வலி யுறுத்தி உள்ளனர்.

    ×