என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் 2 குட்டிகளுடன் சாலையில் சுற்றிய கரடி

- கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
- கரடி குட்டிகளுடன் இரவு நேரத்திலும் நடமாடுவதாகக் கூறப்படுகிறது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறும் கரடிகள் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவி வருகின்றன.
இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூா் செல்லும் சாலையில் கன்னிகாதேவி காலனி பகுதியில் பகல் நேரத்தில் இரண்டு குட்டிகளுடன் கரடி உலவி வந்தது. இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அச்சமடைந்தனா். சிலா் கைப்பேசியில் அதை படம் எடுத்தனா்.
இந்தக் கரடி குட்டிகளுடன் இரவு நேரத்திலும் அப்பகுதியில் நடமாடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். கரடிகளால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் குட்டிகளுடன் திரியும் கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
