என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை கரடி
- வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது, வெளியில் கரடி நடமாடி கொண்டிருந்தது.
- கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
காட்டெருமை, சிறுத்ைத, யானை உள்ளிட்டவை ஊருக்குள் புகுந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடியே ஊருக்குள் படையெடுத்து வருகின்றன.
குறிப்பாக கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊருக்குள் புகும் கரடிகள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்துவதுடன் மக்களையும் அச்சுறுறத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் கக்காச்சி குடியிருப்பு பகுதியில் சம்பவத்தன்று ஒற்றை கரடி ஒன்று வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வந்தது.
பின்னர் அந்த பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் பல பகுதிகளிலும் நீண்ட நேரமாக சுற்றி திரிந்தது. இதற்கிடையே வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது, வெளியில் கரடி நடமாடி கொண்டிருந்தது.
உடனடியாக மக்கள் சம்பவம் குறித்து குந்தா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் கரடியை குடியிருப்பு பகுதிக்குள் இருந்து அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்.
இதற்கிடையே தங்கள் பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, வனத்துறையினர் கரடியை பிடிக்க குடியிருப்பு பகுதியில் கூண்டு வைத்துள்ளனர். மேலும் கரடியின் நடமாட்டத்தை இரவு, பகலாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்