என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bear"

    • தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட தலமலை இருந்து திம்பம் செல்லும் வனப்பகுதி ரோட்டில் ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி உலாவியது.
    • இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்த்தில் 10 வன சரகங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியான இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வரு கின்றன.

    இந்த வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. அப்போது அந்த வழியாக வரும் லாரிகளை வழிமறித்து அதில் இருந்து கரும்புகளை தின்று வரு கிறது.

    மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து புலி, சிறுத்தைகளும் வெளியே வந்து செல்கிறது. இதே போல் கரடிகளும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை செல்போன்களில் படம் பிடித்தும் செல்கிறார்கள். அப்போது ஒரு சில நேரங்க ளில் வாகன ஓட்டிகளை துரத்துகிறது.

    இந்நிலையில் தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட தலமலை இருந்து திம்பம் செல்லும் வனப்பகுதி ரோட்டில் ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி உலாவியது. இதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறிது தூரத்துக்கு முன்பே வாகனங்களை நிறுத்தி கொண்டனர்.

    இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.தாளவாடி மற்றும் தலமலை வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் வலி யுறுத்தி உள்ளனர்.

    • ஊட்டி அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஹட்டாரி நஞ்சன். நேற்று இவரது வீட்டில் திருமணம் நடைபெற்றது.
    • வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரவில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் கரடி, சிறுத்தை, காட்டெருமை, யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி, மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    இந்த நேற்று நள்ளிரவில் ஊட்டியில் கரடி ஒன்று குடியிருப்புக்குள் வந்து, அங்குள்ள வீட்டில் புகுந்து காபி குடித்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    ஊட்டி அருகே உள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஹட்டாரி நஞ்சன். நேற்று இவரது வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதனால் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. இரவில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.

    நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் இருந்து பாத்திரம் கீழே விழும் சத்தம் கேட்டது. இதனால் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர்.

    சத்தம் வந்த இடம் நோக்கி சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அங்கு கரடி ஒன்று நின்றிருந்தது. கரடி வீட்டில் வைத்திருந்த காபி கேனை கீழே தள்ளி காபியை குடித்து கொண்டிருந்தது.

    இதனை அவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். சிறிது நேரம் அங்கேயே சுற்றிய கரடி, பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.

    இந்த வீடியோவை எடுத்தவர்கள், அதனை தற்போது சமூக வலைதளங்களில் திருமண வீட்டில் புகுந்து காபி குடிக்கும் கரடி என தலைப்பிட்டு பரவ விட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வேகமாக வைரலாகி வருகிறது.

    • எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிகிறது
    • கரடி கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ஊட்டி,

    ஊட்டி - கூடலூா் சாலையில் எச்.பி.எப்.பகுதியில் வளா்ப்பு எருமைைய கடந்த புதன்கிழமை வனவிலங்கு வேட்டையாடி, மீதமுள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப் பகுதியில் விட்டு சென்றது. இதன் பேரில் அங்கு சென்று வனத் துறையினா் ஆய்வு நடத்தினா். பின்னா் கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு எருமையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிவதை அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனா். இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் நடமாட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

    மேலும், அப்பகுதியில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

    ஊட்டி 27-வது வாா்டு தீட்டுக்கல் பகுதியில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கரடி புகுந்து கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனா்.

    • காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
    • காட்டெருமைகள் மெதுவாக சென்று நேரு பூங்காவிற்குள் நுழைந்தது.

    குன்னூர்:

    கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் அந்த சாலையில் காட்டெருமைகள் உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    சில நேரங்களில் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை காட்டெருமைகள் அச்சுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலையில் நேற்று முன்தினம் இரவு காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பின்னர் இந்த காட்டெருமைகள் மெதுவாக சென்று நேரு பூங்காவிற்குள் நுழைந்தது. காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வராத வண்ணம் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாழ்வான மின் கம்பியை தெரியாமல் தொட்டதால் யானை மற்றும் காட்டுப்பன்றி இறந்தது தெரியவந்தது.
    • கரடி தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை மற்றும் காட்டுப்பன்றி அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே மூப்பர்காடு பகுதியில் ஓலேண்டு தனியார் எஸ்டேட்டில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இறந்து கிடப்பதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது மின்கம்பி ஒன்று தாழ்வாக தொங்கிய நிலையில் இருந்தது. பழங்குடியின கிராமமான மானார் முதல் மூப்பர் காலனி வரை செல்லும் தாழ்வான மின் கம்பியை தெரியாமல் தொட்டதால் யானை மற்றும் காட்டுப்பன்றி இறந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் எத்தனை வனவிலங்குகள் இறந்து உள்ளன என்று வனத்துறையினரால் கணக்கிட முடியவில்லை.

    இந்தநிலையில் நேற்று வனத்துறை கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லே, உதவி வன பாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் செல்வகுமார், வனவர் திருமூர்த்தி, வனகாப்பாளகள் லோகேஷ், விக்ரம், வீரமணி மற்றும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது கரடி ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. கரடியின் காலில் மின்கம்பி சுற்றிய நிலையில் இருந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, காட்டு யானை, காட்டுப்பன்றி மற்றும் கரடியின் உடல்களை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடல் உறுப்புகளை சேகரித்துக் கொண்டனர்.

    கரடி தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை மற்றும் காட்டுப்பன்றி அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரடிகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அதனை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

    அரவேணு:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

    நாவல் பழம் சீசன் என்பதால் பழங்களை உண்ண வரும் கரடிகள் சாலைகளில் நடமாடி வருவதுடன் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும் சுற்றி வருகிறது.இதனால் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இந்நிலையில், கோத்தகிரி அரவேனு பகுதியில் வனத்தை விட்டு வெளியே வந்த கரடி ஒன்று வெகுநேரமாக தோட்டங்களிலேயே சுற்றி திரிந்தது. அப்போது அங்கு இருந்த நாவல் பழ மரத்தை பார்த்ததும் கரடி உற்சாகத்துடன் மரத்தின் மீது ஏறியது. பின்னர் அங்கிருந்த நாவல் பழத்தை பறித்து சாப்பிட்டது.

    ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், கரடி அங்கிருந்து தப்பித்து தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்கு ஒடியது. இப்பகுதியில் அடிக்கடி சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடிகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து அதனை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது.
    • கரடி ஒன்று காந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது

    குன்னூர்:

    குன்னூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. இவைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கோவில்களில் வைத்திருக்கும் எண்ணெய் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி சென்று விடுகின்றன.

    குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பொது மக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.

    சம்பவத்தன்று, இரவு கரடி ஒன்று காந்திபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் அங்கிருந்த அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை சேதப்படுத்தி சென்று விட்டது.

    இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த ஒரு வார காலமாக குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

    • முத்தூர் கிராமத்தில் கரடி அட்டகாசம் செய்து வந்தது.
    • கூண்டில் சிக்கிய கரடியை வனப்பகுதியில் விட்டனர்.

    களக்காடு:

    நெல்லை அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் கரடி அட்டகாசம் செய்து வந்தது. அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி முத்தூரில் சுற்றித்திரிந்த கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இந்த கூண்டில் நேற்று கரடி சிக்கியது.

    கூண்டில் சிக்கிய கரடியை நெல்லை வனச்சரகர் சரவணகுமார், வனவர் அழகர்சாமி ஆகியோரின் தலைமையிலான வனத்துறையை சார்ந்த குழுவும், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவும் இணைந்து கரடியை களக்காடு சரணாலயம் முத்தலாறு வனப்பகுதியில் உதவி உயிரின பாதுகாவலர் பயிற்சி மற்றும் களக்காடு வனப்பணியாளர்களின் முன்னிலையில் பாதுகாப்பாக விடப்பட்டது.

    கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நேற்று காலை 7 மணியளவில் ஒரு கரடி புகுந்தது. அந்த கரடி அங்கு ஜாலியாக உலா வந்தது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அங்கிருந்து ஓடி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் மீண்டும் அந்த கரடி ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஊட்டி நகருக்குள் புகுந்த கரடியால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.இதன் காரணமாக தண்ணீர் , உணவு தேடி வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்கிறது.

    இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ஊட்டி நகரில் உள்ள மாரியம்மன் கோவில் வீதிக்கு வந்தது. கரடியை பார்த்த தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டியது.

    நாய்களிடம் இருந்து தப்பிக்க கரடி அந்த பகுதியில் உள்ள வீட்டின் கூரை மீது ஏறியது. பின்னர் அங்குமிங்கும் துள்ளி குதித்து ஓடியது. இதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கரடி ஊருக்குள் நுழைந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் அங்கு ஏராளமானோர் திரண்டனர். பொது மக்கள் சத்தம் எழுப்பி கரடியை விரட்டினர். இதில் பயந்த கரடி கட்டடங்கள் மீது ஏறியும், பொது மக்களை விரட்டியும் அச்சுறுத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுமக்களுக்கு பயந்த கரடி மார்க்கெட் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் பதுங்கி உள்ளது.

    கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை டாக்டர்கள் வராததால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

    மார்க்கெட் பகுதியில் மக்கள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வனத்துறை டாக்டர்கள் வந்த உடன் மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

    கர்நாடக மாநிலம் கானாப்பூர் வனப்பகுதியில் விவசாயியை தாக்க வந்த கரடியிடம் நாய்கள் போராடி விவசாயியை காப்பாற்றியது. #bearattack #dogssavedfarmer

    பெல்காம்:

    கர்நாடக மாநிலம் கானாபூர் தாலுக்காவில் உள்ள மோகிசெட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம் கிரப்பா மிராஷி (51) விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் தனது வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அவர் தன்னுடன் 2 நாய்களையும் அழைத்து வந்தார். கானாப்பூர் வனப்பகுதியில் வந்தபோது அங்கு புதரில் மறைந்திருந்த 2 கரடிகள் மிராஷியை தாக்க பாய்ந்து வந்தன. அதை பார்த்ததும் நாய்கள் குரைத்தன. உடனே சுதாரித்துக்கொண்ட மிராஷி உயிர்பிழைக்க அருகில் இருந்த ஒருமரத்தில் ஏறினார்.

    அப்போது கரடிகள் அவரது காலை கவ்விப்பிடித்து கீழே இழுத்தன. அதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த நாய்கள் கரடி மீது வெறிகொண்டு பாய்ந்து தாக்கியது. அதற்குள் அவர் மரத்தின் மீது பாதுகாப்பாக ஏறினார்.

    அதேநேரத்தில் கரடிகளின் தாக்குதல் நாய்கள் மீது மாறியது. அவை நாய்களை விரட்டி சென்றன. அந்த நேரத்தில் மிராஷா மரத்தில் இருந்து கீழே இறங்கி அருகில் உள்ள தனது வயலில் கட்டப்பட்டுள்ள கொட்டகையில் பாதுகாப்புடன் தங்கினார்.

    சிறுது நேரம் கழித்து பத்திரமாக வீடுதிரும்பினார். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மிராஷியை பார்த்தனர். இரவு நேரத்தில் கிராமமக்கள் கானாபூர் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வலியுறுத்தினர்.

    இந்த சம்பவத்தின் மூலம் “நாய்கள் மனிதர்களின் நண்பன். தனது எஜமானுக்கு ஆபத்து ஏற்பட்டால் போராடி காப்பாற்றும்” என்ற கருத்து நிரூபணமாகி உள்ளது. #bearattack #dogssavedfarmer

    கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் பட்டபகலில் கரடி உலா வருவதால் சுற்றுலா பயணிகள், வாகன ஒட்டுநர்கள் கரடியை பார்த்து ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி கரடியை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையின் இடையே குஞ்சப்பண்னை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

    இக்கிராமம் அடர்ந்த தேயிலை தோட்டம், காபி தோட்டம், வனப்பகுதியை ஒட்டிஅமைந்துள்ளன. இந்நிலையில் உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து பொதுமக்கள் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று குஞ்சப்பண்னை அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் பட்ட பகலில் கரடி ஒன்று உலா வந்தது. அப்போது கோத்தகிரி மேட்டுப்பாளையம் வழியாக வந்த சுற்றுலா பயணிகள், வாகன ஒட்டுநர்கள் கரடியை பார்த்து ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி கரடியை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

    பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் கரடி அங்கிருந்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×