search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tea garden"

    • அசாம் மாநிலம் சென்ற பிரதமர் மோடி ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார்.
    • இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    கவுகாத்தி:

    பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலம் சென்றார். அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார். தேயிலை தோட்டத்தில் சிறிது நேரம் தனது நேரத்தைச் செலவிட்டார்.

    இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறுகையில், அசாம் அதன் அற்புதமான தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. அசாம் தேநீர் உலகம் முழுவதும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசாம் செல்லும்போது இந்த தேயிலை தோட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    • சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 33.50-ஐ பெற்றுத்தர மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பசுந்தேயிலைக்கு யதார்த்தமான குறைந்தபட்ச ஆதார விலையை, அதாவது 1 கிலோ பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 33.50-ஐ நிர்ணயம் செய்திட, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாக்குபெட்டா படுகர் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 1.9.2023 முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனவே, தற்போது பசுந்தேயிலையின் விலை மிகவும் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் நாக்குபெட்டா படுகர் நல சங்கத்தின் பிரதிநிதிகளை தி.மு.க. அரசு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, உடனடித் தீர்வாக ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு ரூ. 10 மானியமாக வழங்கிட வேண்டும் என்றும்; மேலும், அவர்களது கோரிக்கையான பசுந்தேயிலை ஒரு கிலோவிற்கு குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 33.50-ஐ பெற்றுத்தர மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை.
    • பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீலகிரி

    கோத்தகிரி அருகே தொட்டனி கிராமத்தில் வசித்து வருபவர் பால்ராஜ் (வயது67). கடந்த ஒரு மாதத்திற்கு முன் வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என செல்வமணி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தொட்டனிலிருந்து கனகாம்பை செல்லும் வழியில் உள்ள தேயிலை தோட்ட முட்புதரில் காணாமல் போன பால்ராஜ் சடலமாக உடல் அழுகிய நிலையில் காணப்பட்டு கிடந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் கோட்ட மேலாளர் பங்களா முன் காட்டு யானை ஒன்று முகாமிட்டிருந்தது
    • யானை அங்கிருந்து குட்டியை அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டம் வழியாக வனத்தை நோக்கி சென்றது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம், கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் கோட்ட மேலாளர் பங்களா முன் காட்டு யானை ஒன்று முகாமிட்டிருந்தது.

    நேற்று காலை, 5:45 மணிக்கு யானை சத்தமிட்டது. கோட்ட மேலாளர் ஸ்ரீதர் ஜன்னலை திறந்து பார்த்தபோது, தேயிலை தோட்டத்தில் யானை குட்டி ஈன்றது தெரியவந்தது.

    உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக்காப்பாளர் காலன் தலைமையில், வன ஊழியர்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்

    . ஒரு மணி நேரத்துக்கு பின், யானை அங்கிருந்து குட்டியை அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டம் வழியாக வனத்தை நோக்கி சென்றது. 2 கி.மீ., துாரம் சென்ற யானை தேயிலை தோட்டம் ஒட்டிய வனப்பகுதியில் குட்டியுடன் முகாமிட்டது.

    வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'யானைக் குட்டி நல்ல நிலையில் உள்ளது. தாய் பால் குடித்து வருகிறது. அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இடையூறு ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்களை அப்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை என்றனர்.

    கோத்தகிரியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி விலை நிலங்களை ஒட்டி குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    இவற்றை சுற்றி வனப்பகுதியும் உள்ளது. இந்த வனபகுதியில் காட்டுயானை, காட்டெருமைகள், மான் சிறுத்தைபுலி உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றிதிரிகின்றன.

    வனப்பகுதியை ஆக்கிரமித்தும் விலை நிலங்களை அழித்தும் சொகுசு விடுதிகள் மற்றும் குடியிருப்புகள், காட்டேஜ்கள், தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றன இதன் காரணமாக வன விலங்குகளின் வழித்தடம் அழிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 மாதங்களாக கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனிப்பொழிவு இருந்து வருகிறது இதனால் வறட்சியான காலநிலை நிலவுகிறது.

    வனப்பகுதியில் மரம் செடி கொடிகள் கருகி விட்டன. மேலும் நீர் நிலைகளும் வறண்டு வருவதால் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுவது அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மனித -வன விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வதும் வாடிக்கையாகிவிட்டது.

    கோத்தகிரி குடியிருப்பு பகுதிகளில் குப்பை தொட்டிகளில் வீசப்படும் மீதமான உணவுகளை சாப்பிடுவதற்கு காட்டுப் பன்றி, கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகள் புகுந்து வருகின்றன. இவை அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.

    இந்த நிலையில் கோத்தகிரி - மேட்டுப் பாளையம் சாலையில் கைத்தளா அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.இதனால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர். #tamilnews
    கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் பட்டபகலில் கரடி உலா வருவதால் சுற்றுலா பயணிகள், வாகன ஒட்டுநர்கள் கரடியை பார்த்து ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி கரடியை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையின் இடையே குஞ்சப்பண்னை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

    இக்கிராமம் அடர்ந்த தேயிலை தோட்டம், காபி தோட்டம், வனப்பகுதியை ஒட்டிஅமைந்துள்ளன. இந்நிலையில் உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து பொதுமக்கள் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று குஞ்சப்பண்னை அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் பட்ட பகலில் கரடி ஒன்று உலா வந்தது. அப்போது கோத்தகிரி மேட்டுப்பாளையம் வழியாக வந்த சுற்றுலா பயணிகள், வாகன ஒட்டுநர்கள் கரடியை பார்த்து ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி கரடியை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

    பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் கரடி அங்கிருந்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கோத்தகிரி அருகே சிறுத்தைப்புலி தாக்கி 2 கன்றுக்குட்டிகள் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தன.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63), விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் தனது பசுமாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை கொணவக்கரை அருகே உள்ள பாத்திமட்டம் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். மாலை நேரமாகியும் 2 கன்றுக்குட்டிகள் திரும்பி வராததால் அந்த பகுதிகளில் தேடி பார்த்துள்ளார். ஆனால் கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து நேற்று காலை மீண்டும் கன்றுக்குட்டிகளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது தேவராஜ் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் 2 கன்றுக்குட்டிகள் இறந்து கிடந்தன.

    இதையடுத்து, கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் வீரமணி மற்றும் தருமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் சிறுத்தைப்புலி தாக்கியதில் கன்றுக்குட்டிகள் இறந்து இருப்பது தெரியவந்தது. 

    இதனையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அந்த கன்றுக்குட்டிகளின் உடல் அப்பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
    ×