search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaur"

    கோத்தகிரியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறி விலை நிலங்களை ஒட்டி குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    இவற்றை சுற்றி வனப்பகுதியும் உள்ளது. இந்த வனபகுதியில் காட்டுயானை, காட்டெருமைகள், மான் சிறுத்தைபுலி உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றிதிரிகின்றன.

    வனப்பகுதியை ஆக்கிரமித்தும் விலை நிலங்களை அழித்தும் சொகுசு விடுதிகள் மற்றும் குடியிருப்புகள், காட்டேஜ்கள், தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றன இதன் காரணமாக வன விலங்குகளின் வழித்தடம் அழிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 மாதங்களாக கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனிப்பொழிவு இருந்து வருகிறது இதனால் வறட்சியான காலநிலை நிலவுகிறது.

    வனப்பகுதியில் மரம் செடி கொடிகள் கருகி விட்டன. மேலும் நீர் நிலைகளும் வறண்டு வருவதால் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுவது அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மனித -வன விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வதும் வாடிக்கையாகிவிட்டது.

    கோத்தகிரி குடியிருப்பு பகுதிகளில் குப்பை தொட்டிகளில் வீசப்படும் மீதமான உணவுகளை சாப்பிடுவதற்கு காட்டுப் பன்றி, கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகள் புகுந்து வருகின்றன. இவை அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.

    இந்த நிலையில் கோத்தகிரி - மேட்டுப் பாளையம் சாலையில் கைத்தளா அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.இதனால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர். #tamilnews
    களக்காடு வனப்பகுதியில் செந்நாய்கள் கூட்டம் காட்டெருமைகளை வேட்டையாட விரட்டி செல்லும் காட்சி தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்ற பெருமையை பெற்ற இந்த காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால்குரங்கு, செந்நாய்கள், நீலகிரி வரையாடு, கடமான் உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் வசிக்கின்றன.

    இந்நிலையில் வனப்பகுதியின் பாதுகாப்பை கருதியும், வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து அறியவும், சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளார்களா என்பதை கண்காணிக்கவும் களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் 115 இடங்களில் அதி நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

    இதில் பதிவான படங்களை வனத்துறையினர் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி தற்போதும் தானியங்கி கேமராவில் பதிவான படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது செந்நாய்கள் கூட்டம் காட்டெருமைகளை வேட்டையாட விரட்டி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த செந்நாய்கள் நாய் குடும்பத்தை சேர்ந்த மாமிச உண்ணி ஆகும். அனைத்து பகுதி காடுகளிலும் வாழும் தன்மை கொண்டவை. கூட்டம், கூட்டமாக வாழும் செந்நாய்கள் வேட்டையாடுவதில் வல்லமை கொண்டவைகளாக திகழ்கின்றன. தன்னை விட பத்து மடங்கு எடை கொண்ட விலங்குகளையும் தனது புத்தி கூர்மையால் எளிதில் வேட்டையாடும் செந்நாய்கள் புள்ளிமான், காட்டெருமை, கடமான், காட்டுபன்றி, கோழையாடு, சருகுமான் போன்ற விலங்குகளை விரும்பி உண்ணும்.

    இவைகள் 4 முதல் 10 குட்டிகளை ஈனும். இவைகளின் வாழ்நாள் காலம் 10 ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில் 4,500 முதல் 10 ஆயிரம் வரையிலான செந்நாய்கள் வாழ்வது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் அறிக்கை படி செந்நாய்கள் கூட்டம் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவில் செந்நாய்கள் இருப்பதும், அவைகள் ஆரோக்கியமாக சுற்றி திரிவதும் தானியங்கி கேமரா மூலம் தெரியவருகிறது.

    இத்தகவல்களை களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளனர். #tamilnews
    அரூர் அருகே வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கியால் காட்டெருமையை கொன்று கறியை பங்கு போட்டு எடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை வனச்சரசம் மாம்பாடி பகுதியில் தீர்த்தமலை வனச்சரகர் தண்டபாணி தலைமையில் வனவர் வேலு, வனக்காப்பாளர்கள் முகமது வக்கீல், மணி, ஜான்அந்தோணி ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது மல்லூத்து பகுதியில் சத்தம் கேட்டு சென்று கொண்டிருந்த போது கும்பலாக வந்த சிலர் வனத்துறையினரை பார்த்தவுடன் ஓடி விட்டனர். அதில் 2 பேரை மட்டும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில்  மாம்பாடி நரிமேட்டை பகுதியை சேர்ந்த 12 பேர் அடங்கிய கும்பல் கள்ளத்துப்பாக்கியால் காட்டெருமையை கொன்று கறியை பங்கு போட்டு எடுத்து வந்தது தெரியவந்தது.  

    பிடிப்பட்ட ரத்தினம் (வயது 47), கோவிந்தன் (60) 2 பேரையும் தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அரூர் நீதிமன்ற நடுவர் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தப்பியோடிய 10 பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
    ×