search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayodhya Ram Temple"

    • ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 16-ம் தேதியில் இருந்து ஜனவரி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15-ம் தேதிக்குள் முடிவடைந்து ஜனவரி 16-ம் தேதியில் இருந்து ஜனவரி 22-ம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு

    உள்ளது. இதனால் முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் கூட்டுத் தலைவருமான சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றுள்ளது எனபொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

    மேலும், துறவிகள், விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா மற்றும் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து, ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் கூட்டுத் தலைவருமான சோனியா காந்தி அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுக்க இருக்கிறது.

    மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

    அதேபோல் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, டி ராஜா ஆகியோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சில தினங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவில கட்டப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்திய முக்கிய தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது மூப்பு காரணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களும் அதையும் ஏற்றுக்கொண்டதாக ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

    ஆனால் விஷ்வ இந்து பரிசத், இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

    துறவிகள், விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா மற்றும் பல்வேறு துறையில் சாதனைப் படைத்தவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • அட்சதை கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    திருக்கனூர்:

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமர் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட அட்சதை கலசம் திருக்கனூர் கடைவீதியில் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    ஊர்வலத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, கலசத்தை கையில் ஏந்தியவாறு திருக்கனூர் கடை வீதியில் இருந்து கே.ஆர்.பாளையம் செங்கேணி அம்மன் கோவில் வரை நடந்து சென்றார்.

    அவருடன் ராமர், லட்சுமணன், சீதை வேடம் அணிந்த பக்தர்களும் பஜனை பாடல்களை பாடியவாறு மேளதாளத்துடன் சென்றனர்.

    பின்னர் கோவிலில் வைத்து அட்சதை கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர் மோடி கோவில் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தது முதலே கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

    அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தொழில் அதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, நடிகர்கள் அமிதாப்பச்சன், அக்சய் குமார், பாடகி ஆஷா போன்ஸ்லே, நடிகை கங்கனா ரனாவத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி , பிரபல டி.வி. தொடரான ராமாயணாவில் ராமர் மற்றும் சீதாவாக நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா மற்றும் 3 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும் 1990-ல் இருவேறு போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவங்களில் உயிரிழந்த 50 கர சேவகர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    அவர்களை அழைத்து வருவது, உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை விஸ்வ இந்து பரிஷத் மேற்கொண்டுள்ளது.

    இது தவிர 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய குருமார்கள், மத தலைவர்கள் மற்றும் மிக முக்கிய பிரபலங்கள், எழுத்தாளர்கள், நாட்டின் பல்வேறு துறை நிபுணர்கள், ஓய்வுபெற்ற முக்கிய ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள், இசையமைப்பாளர்கள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் என முக்கிய பிரமுகர்களுக்கும் கோவில் டிரஸ்ட் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • அட்சதை அரிசியை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் பெற்று கொண்டனர்.
    • பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருப்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 24-ந்தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் கும்பாபிஷேக விழாவின் துவக்கத்தை குறிக்கும் வகையில் அட்சத பூஜை பிரமாண்டமாக நடந்தது. அதில் நாடு முழுவதும் உள்ள அதன் 45 பிரிவுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பங்கேற்றனர். பூஜையின் நிறைவில், அட்சதை அரிசி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டு, மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தடைந்த அட்சதை அரிசியை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நிர்வாகிகள் பெற்று கொண்டனர். தொடர்ந்து, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். அடுத்த மாதத்தில் இருந்து இந்து குடும்பங்களுக்கு வழங்க உள்ளனர். இதுகுறித்து திருப்பூர் பகுதி விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூறியதாவது:-

    மாநிலம் வாரியாக ராமர் கோவில் அட்சதை நிர்வாகிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. திருப்பூருக்கு வந்துள்ள அட்சதை அரிசியை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து இந்து குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் அட்சதையுடன் அரிசி கலக்கப்பட உள்ளது. பின் சிறிய பாக்கெட்டில் பேக் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் துவக்கத்தில் இருந்து அட்சதை மற்றும் ஸ்ரீராமர் படத்துடன் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
    • இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்ப ட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறந்து வைக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ம் ஆண்டு இந்த தீப உற்சவ விழாவை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

    அந்த உற்சவத்தின் போது, ராமர் கோவிலில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படும். அந்த வகையில் 2017 ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018 ம் ஆண்டு 3.01 லட்சம் தீபங்களும், 2019 ஆண்டு 4.04 லட்சம் தீபங்களும், 2020ல் 6.06 லட்சம் தீபங்களும், 2021ல் 9.41 லட்சம் தீபங்களும், கடந்தாண்டு 15.76 லட்சம் தீபங்களும் ஏற்றப்பட்டது.

    இந்த ஆண்டு ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் உலக சாதனை நிகழ்ச்சி போல 24 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட உள்ளது. இது ராமர் கோவில் சுற்று பகுதியில் 51 இடங்களில் ஏற்றப்படுகிறது. இந்த பிரம்மாண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.

    இந்தப் பணிக்காக 25 ஆயிரம் தன்னார்வலர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு திரண்டு உள்ளார்கள்.

    இதில் 21 லட்சம் தீபங்கள் ஏற்றுவதே இலக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே 24 லட்சம் தீபங்கள் ஏற்றி அதில் சுமார் 3 லட்சம் தீபங்கள் ஆங்காங்கே அணைந்தாலும் 21 லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் பிரகாசமாக ஜொலிக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தீப உற்சவத்தில் முந்தைய சாதனைகளை முறியடிக்க உத்திர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் லிட்டர் எண்ணெய் மற்றும் திரிகள் பயன்படுத்தப்படஉள்ளது. இதனை லோகியா அவத் பல்கலைக்கழகத்தினர் முன்னின்று கவனித்து வருகின்றனர். இந்த தீப உற்சவத்திற்காக ரூ.3கோடி செலவிடப்படுகிறது.

    இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பிரத்யேக சீருடை வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே இதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கி நடந்து வருகிறது.

    • முதல் தளத்தின் கட்டமைப்பும் வருகிற நாட்களில் தயாராகி விடும்.
    • மீதமுள்ள சிற்ப வேலைகள் 2025-க்குள் முடிவடையும்.

    அயோத்தி :

    அயோத்தி ராமஜென்மபூமியில் ராம பிரானுக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே முடிக்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் கோவில் கருவறையில் ராமபிரான் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் கோவிலை கட்டி வரும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

    இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ராம பிரானின் பிரமாண்ட கோவில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே தயாராகிவிடும். கட்டுமானப்பணி வேகமாக நடந்து வருகிறது. 2024-ம் ஆண்டுக்குள் கோவிலின் கருவறையில் ராம் லல்லா (குழந்தை ராமர்) பிரதிஷ்டை செய்யப்படுவார்' என தெரிவித்தார்.

    அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சவுபா கூறியதாவது:-

    தரைத்தள கட்டமைப்பு தயாராக உள்ளது. தரை தளத்தில் 5 அரங்குகள் உள்ளன. கோவிலின் ஈர்ப்பு மையமாக மண்டபம் இருக்கும். பிரதான மண்டபத்தில் கடவுளின் கொடி எப்போதும் ஏற்றப்பட்டிருக்கும்.

    கோவில் கருவறை சுவர்கள் மற்றும் கூரைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தரை மற்றும் வெளிப்புற வேலைகள் இன்னும் முடிக்கப்படவில்லை. கோவிலின் கீழ் தளத்தில் உள்ள 166 தூண்களில் சிலைகள் வடிக்கும் பணி நடந்து வருகிறது. கருவறையில் உள்ள 6 தூண்கள் வெள்ளை மார்பிள் கற்களாலும், வெளிப்புறத் தூண்கள் இளஞ்சிவப்பு கற்களாலும் கட்டப்பட்டுள்ளன.

    முதல் தளத்தின் கட்டமைப்பும் வருகிற நாட்களில் தயாராகி விடும். மீதமுள்ள சிற்ப வேலைகள் 2025-க்குள் முடிவடையும். 2024-ம் ஆண்டு சித்ரா ராமநவமியின் முதல் நாளில் ராமபிரானின் பிறந்தநாள் கொண்டாடப்படும். அன்று சரியாக 12 மணிக்கு, சூரிய கதிர்கள் ராம்லல்லா சிலையின் மீது சிறிது நேரம் விழும். அது பக்தர்களுக்கு தெய்வீக அனுபவமாக இருக்கும்.

    இவ்வாறு காமேஷ்வர் சவுபா கூறினார்.

    மற்றொரு உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறுகையில், 'மகர சங்கராந்திக்கு பிறகு பக்தர்கள் ராமபிரானை தரிசிக்கலாம். சுமார் 300 முதல் 400 பேர் ஒரே நேரத்தில் ஸ்ரீராமரை தரிசனம் செய்ய முடியும். கோவிலின் தரைத்தளத்தில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்தாலும், தளம், மின்விளக்கு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் செய்ய வேண்டியுள்ளது' என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனவரி 14 முதல் 24-ந் தேதி வரை சிலை பிரதிஷ்டைக்கான 10 நாள் சடங்கு நடைபெறும்.
    • ஜனவரி 24-ந்தேதி பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், அடுத்த ஆண்டு ஜனவரி 24-ந்தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கோவில் கட்டுமான குழுத்தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அயோத்தியில் அவர் நிருபர்களிடம் கூறி இருப்பதாவது:-

    மூன்று அடுக்கு கொண்ட ராமர் கோவிலின் தரைத்தள கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தி பண்டிகை அன்று கோவிலில் குழந்தை ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளைத் தொடங்க கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

    ஜனவரி 14 முதல் 24-ந் தேதி வரை சிலை பிரதிஷ்டைக்கான 10 நாள் சடங்கு நடைபெறும். அதன் பின்னர், ஜனவரி 24-ந்தேதி பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

    ஜனவரி 22-ந்தேதி குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படலாம் எனவும், இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை கோவில் அறக்கட்டளை அதிகாரிகள் அழைப்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • சாளக்கிராம கற்கள் இமயமலை அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே உற்பத்தியாக கூடியவை.
    • ராமர் சிலையானது 5 அடியில் இருந்து 5.5 அடிக்குள் இருக்கும்படி செதுக்கப்படுகிறது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராமர் கோயில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தயாராகிவிடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 சதவீதத்திற்கும் மேலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கோவில் கருவறையில் வைக்கப்படும் ராமர் - சீதை சிலைகளை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    கருவறையில் வைக்கப்படும் சிலைகள் என்பதால்... எதிர்மறை எண்ணங்களை அகற்றி, ஐஸ்வர்யம் பெருக செய்து.. நேர்மறை அதிர்வுகளை தரக்கூடிய புனித கற்களான சாளக்கிராம கற்களில் சாமி சிலைகளை செதுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    இன்னும் சொல்லப்போனால் விஷ்ணுவின் சக்தியை உள்ளிடக்கிய கல் தான் இந்த சாளக்கிராம கல் என நம்புகிறார்கள் இந்துக்கள். பூஜிக்க உகந்த இந்த கற்கள் இமயமலை அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே உற்பத்தியாக கூடியவை. இதனால் தான் அயோத்தி ராமர் சிலையை செதுக்க சாளக்கிராம கற்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    சீதையின் பிறப்பிடமாக அறியப்படும் நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து லாரி மூலம் அயோத்திக்கு புனித கற்கள் கொண்டு வரப்பட்டன. முன்னதாக நேபாள மக்கள் பயபக்தியுடன் கற்களுக்கு பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர். இந்த கற்களில் ஒரு கல் 18 டன் எடையிலும், மற்றொரு கல் 16 டன் எடையிலும் உள்ளன.

    ராமர் சிலையானது 5 அடியில் இருந்து 5.5 அடிக்குள் இருக்கும்படி செதுக்கப்படுகிறது. ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் வகையில் சிலையின் உயரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டுமான பணி நடைபெற்று வரும் அயோத்தியில் சிலைகள் செதுக்கும் பணியும் நடைபெறும்.

    • இந்த பாறைகள் 6 கோடி ஆண்டுகள் பழமையானவை.
    • பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    அயோத்தி :

    அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில் கோவிலை திறக்கும்வகையில், பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

    கோவில் கர்ப்பகிரகத்தில் ராமரின் குழந்தை வடிவ சிலை நிறுவப்பட உள்ளது. அதை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்டம் முக்திநாத் அருகே உள்ள கண்டாகி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன.

    இவை 6 கோடி ஆண்டுகள் பழமையானவை. ஒரு பாறை 26 டன் எடையும், இன்னொரு பாறை 14 டன் எடையும் கொண்டவை.

    இந்த பாறைகள், 2 சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு, கடந்த மாதம் 25-ந் தேதி நேபாளத்தில் இருந்து புறப்பட்டன. விசுவ இந்து பரிஷத் தேசிய செயலாளர் ராஜேந்திரசிங் பங்கஜ் உடன் பயணித்தார்.

    இந்த பாறைகள், நேற்று முன்தினம் இரவு அயோத்திக்கு வந்து சேர்ந்தன. நேற்று பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 51 வேத விற்பன்னர்களும் வழிபட்டனர்.

    நேபாளத்தில் உள்ள ஜானகி கோவில் நிர்வாகி மகந்த் தபேஸ்வர் தாஸ், அந்த பாறைகளை ராமஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் ஒப்படைத்தார்.

    இந்த பாறைகளில் இருந்து செதுக்கப்படும் குழந்தை வடிவ ராமர் சிலை, கோவில் கர்ப்பகிரகத்தில் நிறுவப்படும்.

    • ராமர் கோவில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும்.
    • டிசம்பர் மாதமே கோவில் திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.

    லக்னோ :

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்குள் தயாராகி விடும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்தநிலையில், ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராமர் கோவில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும். வருகிற டிசம்பர் மாதம் பணியை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கோவிலை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தியன்று கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும். அதைத்தொடர்ந்து கோவில் திறக்கப்படும். டிசம்பர் மாதமே கோவில் திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது.
    • திரிபுராவில் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    அகர்தலா :

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    மாநில அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.

    பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

    காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ராமஜென்மபூமி வழக்கை நீண்ட காலமாக கோர்ட்டிலேயே வைத்து இழுத்தடித்தன.

    ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தவுடன் பிரதமர் மோடி பிரமாண்ட ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.

    நான் சொல்வதை ராகுல்காந்தி கேட்டுக் கொள்ளட்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும்.

    பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது. 2019-ம் ஆண்டு, காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 10 நாட்கள் கழித்து, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தினர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×