search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சோனியா காந்திக்கு அழைப்பு
    X

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சோனியா காந்திக்கு அழைப்பு

    • ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 16-ம் தேதியில் இருந்து ஜனவரி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15-ம் தேதிக்குள் முடிவடைந்து ஜனவரி 16-ம் தேதியில் இருந்து ஜனவரி 22-ம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு

    உள்ளது. இதனால் முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் கூட்டுத் தலைவருமான சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றுள்ளது எனபொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

    மேலும், துறவிகள், விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா மற்றும் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×