search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested youth"

    அரசு ஆஸ்பத்திரியில் ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    காரைக்குடி:

    சிவகங்கை நேரு பஜார் வீதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 40). இவர் சிவகங்கை அரசு மருத்துவ மனையில் மருந்தக பிரிவில் தற்காலிக ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    இன்று காலை தமிழ் செல்வன் வழக்கம் போல் வேலைக்கு வந்தார். மதியம் பணியில் இருந்தபோது ஒக்கூரைச் சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் அங்கு வந்துள்ளார். அவர் தமிழ்செல்வனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது ஆத்திரமடைந்த அருண்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமிழ் செல்வனை சரமாரியாக குத்தினார்.

    இதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சிய டைந்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கிய தமிழ் செல்வனுக்கு உடனே அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே தமிழ்செல்வன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அரசு மருத்துவ மனைக்கு வந்து விசாரணை நடத்தினர். தமிழ்செல்வனை கொலை செய்த அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். எதற்காக கொலை நடந்தது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம் அருகே தறி தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த ராமிரெட்டிபட்டி உட்டண்டி வளவு பகுதியை சேர்ந்தவர் சின்னக்கவுண்டர் (வயது 26).

    விசைத்தறி தொழிலாளியான இவர் தனது உறவினரான செல்லத்துரை என்பவருடன் கடந்த 4-ந் தேதி ராமிரெட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா பார்க்க சென்றார். அப்போது அரை டவுசர் அணிந்த படி அங்குள்ள பாலத்தில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார்.

    இதனை பார்த்த 2 பேரும் அந்த வாலிபரை கல்லால் தாக்கியதாக கூறப்படுறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கல்லால் திருப்பி தாக்கினார். இதில் சின்னக்கவுண்டர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.

    தப்பியோடிய அந்த வாலிபரை மடக்கி பிடித்த சின்னக்கவுண்டரின் உறவினர்கள் தாரமங்கலம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்த போது பென்னாகரத்தை அடுத்த மருத்துவம் பட்டியை சேர்ந்த செங்கோட்டையன் (29) என்பதும், உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் சின்னக்வுண்டரை கொலை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருப்பூரில் முதல் திருமணத்தை மறைத்து 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய தாயார், மாணவியின் புத்தகப்பையை எடுத்து பார்த்தார். அப்போது பைக்குள் மஞ்சள் கயிறுடன் தாலி, மெட்டி இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகளிடம் இதுகுறித்து விசாரித்தார். அப்போது அந்த மாணவி, திருப்பூர் காலேஜ் ரோடு காமராஜர் நகரை சேர்ந்த தினேஷ்(வயது 22) என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தன்னை ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அழைத்துச்சென்று தாலி கட்டி திருமணம் செய்ததாகவும், அந்த தாலியை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். இதனால் மனம் உடைந்த மாணவியின் தாயார், இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

    போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவி 9-ம் வகுப்பு கோடை விடுமுறையில் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு பணியாற்றிய தினேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தினேஷ், அந்த மாணவியை கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அழைத்துச்சென்று அங்குள்ள கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டுக்கு சென்று தனிமையில் இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தினேசை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

    ஏற்கனவே திருமணம் செய்ததை மறைத்து , தன்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தினேஷ் மீது புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், ஏட்டு வனஜா ஆகியோர் தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் இந்தக்கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பேரையூர்:

    சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டியைச் சேர்ந்தவர் அழகுசாமி. இவரது மகன் அழகுபாண்டி (வயது 35). இவர் கப்பலூரில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இதனால் மனைவி மற்றும் மகனுடன் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் வசித்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி அவரை விட்டுச் சென்றார். இதனால் மது பழக்கத்திற்கு அடிமையான அழகுபாண்டி சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தோப்பூர் கண்மாய்க்குள் குப்பை கிடங்கு அருகே அழகுபாண்டி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

    இதுபற்றி ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது அழகுபாண்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்தப்பகுதியில் மது பாட்டில்களும் கிடந்தன.

    இதனால் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதினர். கொலை செய்யப்பட்ட அழகுபாண்டி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தோப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அழகுபாண்டி (32) என்பவர் சம்பவத்தன்று கொலையான அழகுபாண்டியுடன் மது அருந்தியது தெரியவந்தது.

    அவரை பிடித்து விசாரித்தபோது, மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அழகுபாண்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தோப்பூர் அழகுபாண்டியை கைது செய்தனர்.

    பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள எம்.காப்பிளியப்பட்டியைச் சேர்ந்த சிக்கணன் மகன் மணிவேல் (வயது 24). இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்தார். பின்னர் அடிக்கடி சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். சம்பவத்தன்று மாணவியை மணிவேல் கடத்தி சென்று விட்டார். 

    இது குறித்து அவரது பெற்றோர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ் பெக்டர் அழகுபாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    வெளியூரில் தங்கி இருந்த அவர்களை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். அப்போது மாணவி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மணிவேல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள். இதனையடுத்து இவ்வழக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை நடத்தியதில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து மணிவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாணவியை தனியார் காப்பகத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பாகூர் அருகே சொகுசு காரில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பாகூர்:

    பாகூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீஸ் காரர்கள் வீரப்பன், காளியப்பன் ஆகியோர் நேற்று நள்ளிரவு இரவு ஆராய்ச்சிக்குப்பம்- கங்கனாங்குப்பம் சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால், கார் நிற்காமல் சென்றது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பின்னால் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர். 

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் போலீஸ்காரர் வீரப்பனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. எனினும் அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். 

    பின்னர் காரின் டிக்கியை திறந்து பார்த்த போது, அதில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாகூர் புது காமராஜ் நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பதும், இவர் தென்பெண்ணையாற்றில் இருந்து மணலை கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

    இதை தொடர்ந்து சுரேசை கைது செய்த போலீசார் மணல் கடத்தி வந்த காரை பறிமுதல் செய்தனர்.
    சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் புதியதாக ஒரு வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த கட்டுமான பணியில் சேலம் இரும்பாலை அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ் (வயது 25) என்பவர் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது ரமேஷ் பக்கத்து வீட்டில் வசித்து வரும் அந்த சிறுமியை பார்த்தார். அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.

    முதலில் சாதாரணமாக பேச தொடங்கிய அவர் பின்னர் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசினார். வேலைக்கு வரும்போ தெல்லாம் ரமேஷ் அந்த சிறுமியை தவறாமல் சந்தித்து பேசியதாக தெரிகிறது. இந்த பேச்சு நாளுக்கு நாள் அதிகமானது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி ரமேஷ், சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள் என்று கூறினார். அதற்கு அவர் மறுத்தார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ரமேஷ், சிறுமியை மிரட்டியதாக தெரிகிறது.

    கடந்த 8-ந்தேதி வீட்டிற்கு சென்று அந்த சிறுமியை ரமேஷ் கடத்தி சென்று விட்டார். இது குறித்து பெற்றோர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தார்.

    இதற்கிடையே ரமேஷ், சிறுமியை சித்தர் கோவிலுக்கு அழைத்துசென்று திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கேரளாவுக்கு அழைத்து சென்று சொகுசு விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதனை தொடர்ந்து ரமேஷ் தனது நண்பர் மாதேஷ் என்பவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்தும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து 4 நாட்களாக வீட்டிற்குள் அடைத்து வைத்து செக்ஸ் சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மாதேஷ் வீட்டிற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். ரமேசை பிடித்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டம், குழந்தைகள் தடுப்பு திருமணம் சட்டம் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    சிறுமியை கடத்திச் சென்று கொத்தனார் 4 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கருங்கல்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வாலாஜா அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (எ) பாலாஜி (38). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார்.

    மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

    சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வியிடம் புகார் அளித்தனர்.

    போலீசார் பாலாஜி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் வேலூர் ஜெயிலில் பாலாஜி அடைக்கப்பட்டார்.

    இவரை குண்டாசில் கைது செய்ய வேலூர் எஸ்.பி. பிரவேஷ்குமார் கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து பாலாஜியை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். நேற்று மாலை வேலூர் ஜெயிலில் உள்ள பாலாஜியிடம் குண்டர் சட்டத்தின் நகல் வழங்கப்பட்டது.

    திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணத்தை திருடிய டெல்லி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 34). இவர் அனுப்பர்பாளையத்தை அடுத்த திலகர் நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பனியன் நிறுவனத்தில் இருந்த ரூ.18 ஆயிரத்து 800 திருட்டு போனது. 

    இதுகுறித்து பிரான்சிஸ் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த டெல்லி தில்சாத் காலனியை சேர்ந்த மயாங்காபூர் (21) என்பவர் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. 

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருவட்டார் அருகே இளம்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே உள்ள அன்புவிளை குட்டக்குழி பகுதியைச் சேர்ந்தவர் உண்ணி கிருஷ்ணன். இவரது மனைவி ஜினி(வயது29).

    அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி தொழிற்சாலையில் ஜினி வேலை செய்து வருகிறார். தினமும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    நேற்று மாலையும் வழக்கம் போல முந்திரி தொழிற் சாலையில் வேலை முடிந்து ஜினி வீட்டுக்கு நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்(21) என்ற வாலிபர் அங்கு வந்து அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

    அவரை ஜினி கண்டித்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் கட்டையால் ஜினியை தாக்கி உள்ளார். இதற்கு அவரது தந்தை கபிரியேல் உடந்தையாக இருந்து உள்ளார். இதில் காயம் அடைந்த ஜினி திருவட்டாரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தன்னை தாக்கியது பற்றி ஜெயக்குமார் மற்றும் கபிரியேல் மீது திருவட்டார் போலீசிலும் புகார் செய்தார்.

    இது பற்றி 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரது தந்தை கபிரியேலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செஞ்சி அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி அருகே உள்ள பெரும்புகை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி.  இவரது மனைவி குட்டியம்மாள் (வயது 43). இவர்களுக்கு கார்த்தி என்ற மகன் உள்ளான்.

    அதே பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (25), தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் குட்டியம்மாளின் வீட்டுக்கு அடிக்கடி தேவேந்திரன் வந்து சென்றார். அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தேவேந்திரனின் மனைவி கலைச் செல்விக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடும்படி தனது கணவரிடம் கூறினார். ஆனால், தேவேந்திரன் கேட்கவில்லை.

    இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கலைச்செல்வி கோபித்து கொண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 18-ந் தேதி தேவேந்திரன் தனது கள்ளக்காதலி குட்டியம்மாள் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் தனியாக இருந்தார். குட்டியம்மாளை அவர் தனது ஆசைக்கு இணங்கும்படி உல்லாசமாக இருக்க அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தேவேந்திரன் ஆத்திரம் அடைந்து குட்டியம்மாளை சரமாரியாக தாக்கினார். இதில் குட்டியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் குட்டியம்மாளின் உடலை தேவேந்திரன் யாருக்கும் தெரியாத வகையில் தூக்கி சென்று அந்த பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    வீட்டில் இருந்த தனது தாய் குட்டியம்மாளை காணாததை அறிந்த அவரது மகன் கார்த்தி பல இடங்களில் அவரை தேடிபார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று மாலை கார்த்தி ஆடு மேய்பதற்காக அந்த பகுதியில் உள்ள மலையடிவாரத்துக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. அந்த இடத்துக்கு சென்று பார்த்தார். அங்கு அவரது தாய் குட்டியம்மாள் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதைப்பார்த்து கார்த்தி கதறி துடித்தார். உடனே செஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குட்டியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வீமராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    குட்டியம்மாளை கொலை செய்த கள்ளக்காதலன் தேவேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூமியான்பேட்டையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை ஆபாசமாக திட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    பூமியான்பேட் பாவாணர் நகரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 32). இவரது உறவினர் மகள் ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த மெக்கானிக் சூரியா (21) என்பவர் காதலித்து வந்தார்.

    அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கீதா அவர்களை பிரித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சூரியா சங்கீதாவின் வீட்டுக்கு வந்து அவரை ஆபாச வார்த்தைகள் கூறி திட்டினார்.

    இதுபற்றி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் சூரியாவை கைது செய்தனர்.

    ×