search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாரமங்கலம் அருகே தறி தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது
    X

    தாரமங்கலம் அருகே தறி தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது

    தாரமங்கலம் அருகே தறி தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த ராமிரெட்டிபட்டி உட்டண்டி வளவு பகுதியை சேர்ந்தவர் சின்னக்கவுண்டர் (வயது 26).

    விசைத்தறி தொழிலாளியான இவர் தனது உறவினரான செல்லத்துரை என்பவருடன் கடந்த 4-ந் தேதி ராமிரெட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா பார்க்க சென்றார். அப்போது அரை டவுசர் அணிந்த படி அங்குள்ள பாலத்தில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார்.

    இதனை பார்த்த 2 பேரும் அந்த வாலிபரை கல்லால் தாக்கியதாக கூறப்படுறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கல்லால் திருப்பி தாக்கினார். இதில் சின்னக்கவுண்டர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.

    தப்பியோடிய அந்த வாலிபரை மடக்கி பிடித்த சின்னக்கவுண்டரின் உறவினர்கள் தாரமங்கலம் போலீசில் அவரை ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்த போது பென்னாகரத்தை அடுத்த மருத்துவம் பட்டியை சேர்ந்த செங்கோட்டையன் (29) என்பதும், உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் சின்னக்வுண்டரை கொலை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×