search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூர் அருகே சொகுசு காரில் மணல் கடத்திய வாலிபர் கைது
    X

    பாகூர் அருகே சொகுசு காரில் மணல் கடத்திய வாலிபர் கைது

    பாகூர் அருகே சொகுசு காரில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பாகூர்:

    பாகூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீஸ் காரர்கள் வீரப்பன், காளியப்பன் ஆகியோர் நேற்று நள்ளிரவு இரவு ஆராய்ச்சிக்குப்பம்- கங்கனாங்குப்பம் சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால், கார் நிற்காமல் சென்றது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பின்னால் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர். 

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் போலீஸ்காரர் வீரப்பனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. எனினும் அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். 

    பின்னர் காரின் டிக்கியை திறந்து பார்த்த போது, அதில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாகூர் புது காமராஜ் நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பதும், இவர் தென்பெண்ணையாற்றில் இருந்து மணலை கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

    இதை தொடர்ந்து சுரேசை கைது செய்த போலீசார் மணல் கடத்தி வந்த காரை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×