search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army"

    • சுகோய்-34 வகை விமானம் ஒன்று உக்ரைன் எல்லைக்கு தாக்குதல் நடத்த புறப்பட்டு சென்றது.
    • விமானத்தில் இருந்து சீறி பாய்ந்த குண்டுகள் உக்ரைனுக்கு பதில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரேட் நகர் மீது விழுந்தது.

    மாஸ்கோ:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

    உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு கடந்த பின்னரும் இன்னும் ஓயவில்லை. இப்போதும் தினம், தினம் தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது.

    நேற்று உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாவின் அதிநவீன போர் விமானங்கள் சீறி பாய்ந்தன. உக்ரைன் எல்லையில் குண்டு வீசுவதற்காக இந்த விமானங்கள் பறந்து சென்றன.

    இதில் சுகோய்-34 வகை விமானம் ஒன்று உக்ரைன் எல்லைக்கு தாக்குதல் நடத்த புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் உக்ரைன் எல்லையை சென்றடைந்தது.

    எல்லையை நெருங்கியதும் விமானம் தாக்குதலில் ஈடுபட்டது. ஆனால் விமானத்தில் இருந்து சீறி பாய்ந்த குண்டுகள் உக்ரைனுக்கு பதில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரேட் நகர் மீது விழுந்தது.

    இந்த தாக்குதலில் பெல்கோரேட் நகரின் வீதிகளில் சுமார் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள், வீடுகள் இடிந்தது.

    மேலும் தெருக்களில் நடந்து சென்ற 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் பற்றி அறிந்ததும் ரஷிய ராணுவ அதிகாரிகள் விரைந்து சென்று விசாரித்தனர்.

    இதில் ரஷிய நகர் மீது தவறுதலாக தாக்குதல் நடந்து விட்டது தெரியவந்தது. இதனை ரஷிய ராணுவ உயர் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக தெரிவித்தனர்.

    மேலும் தவறு நடந்தது எப்படி? போர் விமானத்தின் குறி தவறியது ஏன்? என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது.
    • நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

    புதுடெல்லி :

    'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு முதலில் உடல் தகுதித்தேர்வு, பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்த இரண்டையும் முடித்த பிறகே எழுத்து தேர்வு எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த முறைக்கு பதிலாக, இனிமேல் முதலில் எழுத்து தேர்வு நடத்த ராணுவம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களில் ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:-

    அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

    ஆனால் இனிமேல் பொதுவான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பின்னர் உடல் தகுதித்தேர்வும், மருத்துவ பரிசோதனைகளும் நடக்கும். இது தேர்வு நடைமுறைகளை எளிதாக்க உதவும்.

    மேலும் வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். மேலும் ஆட்சேர்ப்பு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தைக் குறைத்து, எளிதாக கையாளக்கூடியதாகவும் மாற்றும்.

    இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த முறையில் வருகிற ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

    • ஒரு வருட கட்டாய ராணுவ சேவை 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்.
    • தைவானில் ஆண்கள் 4 மாதங்களுக்கு ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும்.

    தைவானை சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

    சமீபத்தில் தைவானை நோக்கி போர் விமானங்களை சீனா அனுப்பியதால் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்தநிலையில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் தைவான் தனது ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தைவானில் ராணுவத்தில் கட்டாய பணியாற்றும் காலம் ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தைவானில் ஆண்கள் 4 மாதங்களுக்கு ராணுவத்தில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என்ற சட்டம் உள்ளது. தற்போது இந்த கட்டாய ராணுவ சேவை ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஒரு வருட கட்டாய ராணுவ சேவை 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் 2005-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த ஆண்களுக்கு இது பொருந்தும் என்றும் தைவான் அதிபர் சாய் இங்வென் தெரிவித்தார்.

    • ராகுல் காந்தி போகச் சொன்னதால் ராணுவம் அங்கு செல்லவில்லை.
    • பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்த படைக்குவிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி :

    கிழக்கு லடாக்கை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தில் நடந்துள்ள சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இந்தியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் சீனாவுடனான எல்லைப்பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    அத்துடன் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இந்திய ராணுவம் அனுமதிக்காது என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    டெல்லியில் நடந்த இந்தியா-ஜப்பான் கருத்தரங்கில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சீன எல்லையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான ராணுவத்தை குவித்திருக்கிறோம். 2020-ம் ஆண்டு முதல் சீனா குவித்து வரும் படைகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

    பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்த படைக்குவிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாங்கள் சொன்னதால்தான் ராணுவம் அங்கு சென்றிருக்கிறது.

    ராகுல் காந்தி போகச் சொன்னதால் ராணுவம் அங்கு செல்லவில்லை. இந்திய பிரதமர் அவர்களைப் போகச் சொன்னதால் ராணுவம் அங்கு சென்று இருக்கிறது.

    அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் நிலவும் இயல்பு நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்த முயற்சியையும் முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. அங்கு சீனாவின் ஆக்கிரமிப்பை அனுமதிக்கக்கூடாது என்பதில் ராணுவம் உறுதியாக இருக்கிறது.

    எல்லையில் அத்துமீற எந்த நாட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்பது இந்திய அரசின் கடமை மற்றும் இந்திய ராணுவத்தின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகும்.

    இந்த பரபரப்பான சூழலில் சீனாவில் இருந்து ஏன் இறக்குமதிகள் அனுமதிக்கப்படுகின்றன? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் உற்பத்தித் துறையில் போதிய கவனம் செலுத்தாததால் அந்த நாட்டிலிருந்து இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்கிறது.

    30 ஆண்டுகளாக உங்கள் தொழிலுக்கு கொடுக்க வேண்டிய ஆதரவையும், பாதுகாப்பையும் நீங்கள் கொடுக்கவில்லை. இப்போதுதான் நீங்கள் அதைச் செய்யத் தொடங்கி இருக்கிறீர்கள். 30 ஆண்டுகளில் செய்ததை இப்போது 5 அல்லது 10 ஆண்டுகளில் மாற்ற முடியாது

    இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

    • இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையை சீனா கருதுகிறது.
    • முற்றத்தில் மாவீரா்களுக்கு சுடரேந்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவா ய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மற்றும் முற்றத்தின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்திய பிரபாகரனுக்கு எந்த நாடும் உதவி செய்யவில்லை.

    உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் கொடுத்த நிதியின் மூலம் ஆயுதங்களை வாங்கிப் போராடினா். சிங்கள ராணுவத்தை முறியடித்து கைப்பற்றிய ஆயுதங்களும் அவா்களுக்கு உதவின.

    அதை ஒடுக்குவதற்காக சிங்கள அரசுக்கு இந்தியா, சீனா உள்பட 20-க்கும் அதிகமான நாடுகள் ராணுவம் உள்பட அனைத்து உதவிகளையும் செய்தன.

    அதன் விளைவாக, தமிழீழ போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இந்திய விடுதலைப் போராட்டத்திலும்கூட இடையில், பின்னடைவு ஏற்பட்டாலும், பின்னாளில் வெற்றி பெற்றது.

    அதுபோல, தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெற்றி பெறும்.

    இலங்கைக்கு சீனாவும் உதவி செய்கிறது.

    இலங்கை யால் சீனாவுக்கு எந்த லாபமும் கிடையாது ஆனால், இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையை சீனா கருதுகிறதுஎனவே, இலங்கையில்கா லூன்றிய சீனாவால் ஈழத்தமி ழா்களுக்கு அபாயம் அல்ல.

    தென்னிந்தியாவுக்கு த்தான் பேரபாயம். இதை தில்லியில் இருப்பவா்கள் (இந்திய அரசு) உணர வேண்டும். இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து, முற்றத்தில் மாவீரா்களுக்கு சுடரேந்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

    ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ந. ராமச்சந்திரன், உலகத் தமிழா் பேரமைப்புத் துணைத் தலைவா்கள் அய்யனாபுரம் சி.முருகேசன், மணிவண்ணன், துணைச் செயலா் துரை. குபேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளனர்.
    • கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கனடாவில் 1 லட்சம் இந்தியர்கள் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர்.
    • இந்தியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது.

    டொராண்டோ :

    2-ம் உலகப்போர் முடிவில் கனடா நாட்டின் ராணுவம் உலகின் வலுமிக்க படைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது பிற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவின் பாதுகாப்பு படை மிகவும் சிறியது.

    கனடா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக அதற்கு அருகாமையில் இருப்பதாலும், நேட்டோ மற்றும் நோராட் ஆகிய ராணுவ கூட்டமைப்புகளில் உறுப்பினராக இருப்பதாலும் அதன் பாதுகாப்பு படை பெரிதாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்று சொல்லப்படுகிறது.

    இந்த சூழலில் சமீபகாலமாக கனடா ராணுவத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான காலிபணியிடங்கள் இருப்பதாகவும், இந்த ஆண்டில் சுமார் 6 ஆயிரம் உறுப்பினர்களை புதிதாக சேர்க்க இலக்கு வைக்கப்பட்ட நிலையில், அதில் பாதி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் ராணுவத்தில் சேரலாம் என அந்த நாட்டின் ராணுவம் அறிவித்துள்ளது.

    இதுவரையில், கனடாவில் வசித்து வரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ராணுவ வெளிநாட்டு விண்ணப்பத்தாரர் என்கிற நுழைவு திட்டத்தின் கீழ் மட்டுமே ராணுவத்தில் சேர தகுதி பெற்றிருந்தனர். தனிநபர்களுக்கான இந்த திட்டம் பயிற்சி செலவுகளை குறைப்பதோடு, விமானி அல்லது டாக்டர் போன்ற சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும்.

    ஆனால் தற்போது கனடா நாட்டின் குடிமக்களை போலவே 18 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர குடியிருப்பாளர்கள் ராணுவத்தில் எளிதில் சேரலாம். அதேபோல் 16 வயது நிரம்பியவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் ராணுவத்தில் இணையலாம். ராணுவத்தில் அதிகாரியாகும் எண்ணம் இருந்தால் அதற்குரிய கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

    கனடா ராணுவத்தின் இந்த அறிவிப்பால் இந்தியர்கள் அதிகளவில் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது. ஏனெனில் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளனர்.

    கனடாவுக்கு வரும் 5 வெளிநாட்டவர்களில் ஒருவர் இந்தியர் என புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கனடாவில் 1 லட்சம் இந்தியர்கள் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர். 2025-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கனடா அரசு முடிவு செய்திருக்கிறது.

    எனவே ராணுவத்தில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரை அனுமதிப்பதன் மூலம் ராணுவ பலத்தை கணிசமாக அதிகரிக்க முடியும் என கனடா ராணுவம் நம்புகிறது.

    • இது குறித்து கைலாசம் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே வெள்ளக்குடியை சேர்ந்தவர் கைலாசம். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இந்த நிலையில் கைலாசம் தனது பேரக்குழந்தை சர்வேஷை விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் சேர்க்க உள்ளதால் அதற்கு முன்பாக கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மனைவி வளர்மதி, மருமகள் பிரவீனா ஆகியோருடன் சென்றுள்ளார்.

    சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்பக்க கதவு மற்றும் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் வீட்டில் உள்ள ஒரு மர பீரோ மற்றும் இரண்டு ஸ்டீல் பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் நகைகள் திருடு போயிருந்தன.

    இது குறித்து கைலாசம் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வு பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்பட்டு வருகிறது.
    • முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் தங்களது சிறார்களை ராணுவ பணிகளில் சேர்ந்திட ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்திலிருந்து ராணுவப் பணியில் சேர்ந்து பயிற்சி பெறும் முன்னாள்படைவீரர்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் வகையில் தொகுப்பு நிதியிலிருந்து தொகுப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, முப்படையில் நிரந்திர படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப்பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.50000மும் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவிகளின் பணிக்காக தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.25000மும் வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீர ர்கள்மற்றும் கைம்பெண்கள் தங்களது சிறார்களை இந்திய இராணுவ பணிகளில்சேர்ந்திட ஊக்குவிக்குமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறீர்கள்.

    மேலும் விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகதரைத்தளத்தில் அறை எண். 10 மற்றும் 11-ல் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசிமூலமாகவோ (04365-299765) தொடர்பு கொள்ளலாம் எனதெரிவித்துள்ளார்.

    • இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயகத்திற்கு விரோதமாக சர்வதிகார ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது.
    • உற்பத்தி செலவினங்களை கணக்கீட்டு அதனை காட்டிலும் 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசத்தில் நடை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:- இந்திய நாட்டில் மக்கள், ஜனநாய கத்திற்கு விரோதமாக, சர்வதிகாரத்துடன், பாசிச முறையில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. ஆகவே, மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன் வைத்து, வரும் ஆக. மாதம் 6-ம் தேதி் முதல் 9-ம் தேதி வரை திருப்பூரில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் சிபிஐ அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

    மத்திய அரசான பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ், இந்தியாவில் மதக்கலவரங்களை உருவாக்குகிறது. அக்னி பாதை என்ற திட்டத்தை கண்டித்து இளைஞர்கள் கொந்தளித்து போராடி வருகிறார்கள். இந்ததிட்ட த்தை ரத்து செய்ய வேண்டும். ராணுவ தளபதிகள், போராட்ட க்காரர்களுக்கு எதிராக பேட்டியளித்திருப்பது, வரலாற்றில் நடைபெறாத, நடக்ககூடாத சம்பவம். ராணுவத்தை தவறான பாதையில், மத்திய அரசு இட்டுச்செல்கிறது. இதனால் மக்களுக்கும், ராணுவத்திற்கும் மோதலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது ஜனநாயக்கிற்கு நல்லதல்ல.

    நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலை போதுமானதாக இல்லை. பாஜக தேர்தல் வா க்குறுதியில் அறிவித்ததின் படி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியினுடை.ய பரிந்துரை அடிப்படையில் விலையினை தீர்மானிக்க வேண்டும். உற்பத்தி செலவினங்களை கணக்கீட்டு, அதனை காட்டிலும் 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசு, தரமான விதைகள், உரங்களை தட்டுப்பாடின்றி கூட்டுறவுத்துறை மூலம் வழங்க வேண்டும்.

    கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து யஸ்வன்சின்ஹாவை வேட்பாளராக நிறுத்தியு ள்ளோம். இவர் வெற்றி பெறுவதின் மூலமாக நாட்டினுடைய இறையாண்மை காக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ராணுவத்தை வைத்து வாக்கு சேகரிப்பதை மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தின்போது கூறினார். #LokSabhaElections2019 #Vaiko
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

    மக்கள் கலைஞர் இருந்த இடத்தில் தற்போது ஸ்டாலினை வைத்து பார்க்கின்றனர். நல்லாட்சி நடத்த ஸ்டாலின் வந்துள்ளார். ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க. வாக்குறுதியளித்துள்ளது. எனவே மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக்கு அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும்.

    நரேந்திர மோடி, புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் 41 துணை ராணுவனத்தினர் இறந்த சம்பவத்தை வைத்து வாக்கு சேகரித்து வருகிறார். ராணுவம் யாருக்கும் சொந்தமில்லை. எந்தக் கட்சிக்கும் சொந்தமில்லை. ராணுவத்தை வைத்து வாக்கு சேகரிப்பதை மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    முப்படையில் முக்கியமானது விமானப்படை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ரூ.526 கோடிக்கு போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்த மோடி அரசு ரூ.1,670 கோடி மதிப்பில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத அனில் அம்பானிக்கு கொடுத்து உள்ளது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு ஊழல் செய்துள்ளது.

    8 வழி சாலையினால் பல ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாக இருந்தது. இந்தத் திட்டத்தை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. நாட்டில் 83 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என்று மோடி பொய் வாக்குறுதிகளை கொடுத்து உள்ளார். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் முதல் குற்றவாளி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். இவற்றை மனதில் கொண்டு மோடி ஆட்சிக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து ஆரணியில் அவர் பேசியதாவது:-

    நாட்டிற்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து பிரசார பொதுக்கூட்டங்களில் ஆபத்தான கருத்துக்களை சொல்லி வருகிறார். கர்நாடகாவில் கமி‌ஷன் ஆட்சி நடப்பதாக கூறி பிரச்சாரம் செய்கிறார். அது இங்கு பேச வேண்டிய பிரசாரம் ஆகும்.

    இந்த பகுதிக்கு முக்கிய பிரச்சினையாக திண்டிவனம் - ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை செல்லக்கூடிய ரெயில் பாதை திட்டம் கடந்த 10 ஆண்டுகாலமாக கிடப்பில் உள்ளது. நெசவாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் பட்டு ஜவுளி பூங்கா அமைப்பதாக வாக்குறுதி மட்டுமே உள்ளது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. அதில் உதயசூரியன் ஜெயிக்க வேண்டும் அப்போதுதான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளான விவசாயிகள் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, ஏழை எளிய நடுத்தர மக்கள் வங்கிகளில் 5 சவரன் நகை வரை கடன் பெற்றவர்களுக்கு அதனை ரத்து செய்யும் அறிவிப்பு போன்றவற்றை செயல்படுத்த முடியும்.

    மேகதாது அணை கட்டப்பட்டு வருவதால் நம் பகுதிக்கு நீர் ஆதாரங்கள் வெகுவாக குறைந்துவிடும். இதுபோன்ற திட்டங்கள் தடுக்க அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என உள்ளது அதனை மத்திய, மாநில அரசுகள் எந்த முடிவும் எடுக்காது. நாம் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த திட்டங்களை சாத்தியமாக மாற்ற முடியும்.

    எனவே விழிப்பாக இருந்து கை சின்னத்திற்கு வாக்களித்து எம்.கே.விஷ்ணுபிரசாத்தை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #Vaiko

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கிகள் என்ற பெருமையை பெற்ற ‘தனுஷ்’ பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. #Dhanush #ArtilleryGun
    ஜபல்பூர்:

    மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பீரங்கி தொழிற்சாலையில் பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தளவாட தொழிற்சாலை வாரியம் (ஓ.எப்.டி.) இயக்குனர் சவுரவ் குமார் கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.

    ராணுவ தேவைக்காக 114 தனுஷ் பீரங்கிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகமும், தளவாட தொழிற்சாலை வாரியத்துக்கு வழங்கியுள்ளன. அதில் முதல் கட்டமாக 6 பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கிகள் என்ற பெருமையை ‘தனுஷ்’ ரக பீரங்கிகள் பெற்றுள்ளன. இந்த பீரங்கிகள் 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. 
    டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முப்படை தளபதிகள், இந்தியா எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளனர். #IAF #IndianAirForce #Pakistan #Abhinandan #RGKapoor #DSGujral #SurendraSinghMahal
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் முப்படை அதிகாரிகளான ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல் மற்றும் தல்பீர் சிங் ஆகியோர் இன்று கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    விமான தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பல தவறான தகவல்களை கூறிவருகிறது. பிப்ரவரி 27ம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைந்ததை ரேடார் மூலம் அறிந்தோம்.

    காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம் இந்தியாவின் மிக்-21 ரக விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.



    இரு இந்திய விமானிகளை கைது செய்ததாக பாகிஸ்தான் பொய் கூறியது. ஆளில்லா இடங்களில் தான் தாக்குதல் நடத்தியதாக பாக். கூறியது, ஆனால் அவர்கள் இந்திய தளவாடங்களை குறிவைத்து தான் தாக்கியுள்ளனர். மேலும் பாக். எஃப்-16 ரக விமானத்தை பயன்படுத்தவில்லை என்றும் கூறியது. ஆனால் அதைத்தான் நாம் சுட்டு வீழ்த்தினோம். எல்லையில் உள்ள அனைத்துப் படைகளும் தயார் நிலையில் உள்ளது.

    பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கையை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. விமானி அபினந்தன் விடுவிக்கப்படுவது எங்களுக்கு மகிழ்ச்சி..

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்திய படைகள் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானத்தின் பாகங்களை முப்படை அதிகாரிகள் காட்டினர். #IAF #IndianAirForce #Pakistan #Abhinandan #RGKapoor #DSGujral #SurendraSinghMahal
    ×