search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salute"

    • வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி.
    • பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட உள்ளன.

    நாகப்பட்டினம்:

    மீட்பு பணிகளில்தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் ஏப்ரல் 14ஆம் நாள் தீ தொண்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    அந்த வகையில் இன்று நாகை தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை அலுலர்கள் மலர்வலையம் வைத்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் 14ஆம் தேதி முதல் 20தேதி வரை பொதுமக்கள் கூடும் இடம், மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏர்படுத்தும் வகையில் நிகழ்சிகள் நடத்தபட உள்ளன.

    • விவசாயிகள் சங்கம் சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் பழனிசாமி, சி.பி.எம். பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    கடந்த 1982 ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி நடைபெற்ற நவீன தாராளமய கொள்கைகளை எதிர்த்தும் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்தும் நடந்த பாரத் பந்த் போராட்டத்தின்போது, தஞ்சாவூரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 19-ந்தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்லடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார்.

    மாநில துணைத்தலைவர் நாமக்கல் பி.பெருமாள், மாவட்ட செயலாளர் ஆர்.குமார், சிஐடியு. மாவட்ட துணைத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சியில்இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜி.சுந்தரம்,சிஐடியு. மாவட்ட பொருளாளர் ஜி.சம்பத், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர் தண்டபாணி, பல்லடம் ஒன்றிய தலைவர் கே.வி.சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, சி.பி.எம். பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையை சீனா கருதுகிறது.
    • முற்றத்தில் மாவீரா்களுக்கு சுடரேந்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவா ய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மற்றும் முற்றத்தின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்திய பிரபாகரனுக்கு எந்த நாடும் உதவி செய்யவில்லை.

    உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் கொடுத்த நிதியின் மூலம் ஆயுதங்களை வாங்கிப் போராடினா். சிங்கள ராணுவத்தை முறியடித்து கைப்பற்றிய ஆயுதங்களும் அவா்களுக்கு உதவின.

    அதை ஒடுக்குவதற்காக சிங்கள அரசுக்கு இந்தியா, சீனா உள்பட 20-க்கும் அதிகமான நாடுகள் ராணுவம் உள்பட அனைத்து உதவிகளையும் செய்தன.

    அதன் விளைவாக, தமிழீழ போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இந்திய விடுதலைப் போராட்டத்திலும்கூட இடையில், பின்னடைவு ஏற்பட்டாலும், பின்னாளில் வெற்றி பெற்றது.

    அதுபோல, தமிழீழ விடுதலைப் போராட்டமும் வெற்றி பெறும்.

    இலங்கைக்கு சீனாவும் உதவி செய்கிறது.

    இலங்கை யால் சீனாவுக்கு எந்த லாபமும் கிடையாது ஆனால், இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையை சீனா கருதுகிறதுஎனவே, இலங்கையில்கா லூன்றிய சீனாவால் ஈழத்தமி ழா்களுக்கு அபாயம் அல்ல.

    தென்னிந்தியாவுக்கு த்தான் பேரபாயம். இதை தில்லியில் இருப்பவா்கள் (இந்திய அரசு) உணர வேண்டும். இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து, முற்றத்தில் மாவீரா்களுக்கு சுடரேந்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

    ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ந. ராமச்சந்திரன், உலகத் தமிழா் பேரமைப்புத் துணைத் தலைவா்கள் அய்யனாபுரம் சி.முருகேசன், மணிவண்ணன், துணைச் செயலா் துரை. குபேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×