search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுழைவுத்தேர்வு"

    • பல வருடங்களாக இந்த தேர்வை வருடாவருடம் எழுதிக்கொண்டே, தனது வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
    • மர வியாபாரத்தை தொடங்கிய லியாங், பணக்காரராகி, கட்டுமான பொருட்கள் துறையிலும் கால் பதித்து பெரும் கோடீஸ்வரர் ஆனார்.

    சீன நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவர் லியாங் ஷி (56). இவர் அந்நாட்டின் பல்கலைகழகங்களில் சேருவதற்கான கவ்கவ் என்ற பொது நுழைவுத் தேர்வை தொடர்ந்து பலமுறை எழுதியும் தோல்வியடைந்துள்ளார். எனினும் விடா முயற்சியுடன் மிகக்கடினமான இந்த பொது நுழைவுத் தேர்வை 27வது முறையாக எழுதினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இம்முறையும் லியாங் தோல்வி கண்டிருக்கிறார்.

    மொத்தம் 750 புள்ளிகள் கொண்ட இந்த தேர்வில், தேர்ச்சிக்கு தேவையான குறைந்தளவு புள்ளிகள் 424. இதற்கு 34 புள்ளிகள் குறைவாக எடுத்து லியாங் தோல்வியடைந்தார்.

    லியாங் ஷி, இந்த தேர்வில் வெற்றி பெற 1983ம் ஆண்டிலிருந்து பல முறை முயற்சி செய்து வருகிறார்.

    தனது 16வது வயதில் 1983ம் வருடம் இந்த தேர்வில் முதல் முறையாக தோல்வி கண்ட லியாங், பல வருடங்களாக இந்த தேர்வை வருடாவருடம் எழுதிக்கொண்டே, பல இடங்களில் பல வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

    90களின் மத்தியில் தனது சொந்த மர வியாபாரத்தை தொடங்கிய லியாங், பணக்காரராகி, கட்டுமான பொருட்கள் துறையிலும் கால் பதித்து பெரும் கோடீஸ்வரர் ஆனார்.

    இந்த தேர்வுக்கு தன்னை தயார் செய்து கொள்ளும் காலங்களில், குடிப்பழக்கத்திலிருந்தும், தமக்கு பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடுவதிலிருந்தும் லியாங் விலகி இருப்பாராம்.

    இந்த தோல்வி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை தன்னை பாதித்திருப்பதாகவும், அடுத்த வருடம் மீண்டும் முயற்சிப்பது சந்தேகம் எனவும் லியாங் கூறியுள்ளார்.

    சீனாவில் பள்ளி முடித்து கல்லூரிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கான, பிரபலமான இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். இந்த தேர்வை, இவ்வருடம் கிட்டத்தட்ட 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 2 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.
    • கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 5 இடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    பாரதியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆராய்ச்சி பட்டம் (பி.எச்.டி.) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் எம்.பில்) சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு -2023 நாளை 11-ம்தேதி நடக்கிறது. 51 பாடங்களில் நடைபெறவுள்ள இந்த நுழைவுத்தேர்விற்கு 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தேர்விற்கான நுழைவு ச்சீட்டினை பாரதியார் பல்கலைக்கழக இணையப்பக்கத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 5 இடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் பிஷப் அப்பாசாமி கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி, ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கலை கல்லூரி, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மற்றும் பொள்ளாச்சியில் என்.ஜி.எம்.கல்லூரி ஆகிய 7 கல்லூரிகளில் தேர்வு நடக்கிறது.

    தேர்வு காலை 11மணிக்கு துவங்கி மதியம் 12.30மணிக்கு நிறை வடையும். தேர்வாளர்கள் கடைபிடிக்க ேவண்டிய நெறிமுறைகள் தேர்வு நுழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டு உள்ளது. நுழைவுதேர்விற்கான பணிகளை பொது நுழைவுத்தேர்வு ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறைத்தலை வருமான பரிமேலழகன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். 

    • 1 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு வி.ஐ.டி. ஆந்திர பிரதேசம் மற்றும் போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும்.
    • உணவு மற்றும் விடுதி வசதியுடன் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

    வேலூர்:

    வி.ஐ.டி.யில் பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 22-ந் தேதி வரை வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டிலுமாக 125 மையங்களில் இந்த நுழைவுத்தேர்வு கணினி முறையில் நடைபெறுகிறது.

    நுழைவுத்தேர்வு முடிவுகள் வருகிற 26-ந் தேதி அன்று www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது.

    வி.ஐ.டி. வேலூர் வளாகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வினை வேந்தர் ஜி.விசுவநாதன் பார்வையிட்டார். துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பெங்களூரு மையத்தில் நடைபெற்ற நுழைவுத்தேர்வினை பார்வையிட்டார். முதல்கட்ட கலந்தாய்வு 26-4-2023 முதல் 30-4-2023 ரேங்க் 1 முதல் 20,000 வரை, 2-ம் கட்ட கலந்தாய்வு (9-5-2023-11-5-2023) ரேங்க் 20,001 முதல் 45,000 வரை, 3-ம் கட்ட கலந்தாய்வு (20-5-2023-22-5-2023) ரேங்க் 45,001 முதல் 70,000 வரை, 4-ம் கட்ட கலந்தாய்வு (31-5-2023-2-6-2023) ரேங்க் 70,001 முதல் 1,00,000 வரை, 5-ம் கட்ட கலந்தாய்வு (12-6-2023-14-6-2023) ரேங்க் 1,00,000-க்கு மேல் ரேங்க் வரை நடக்கிறது.

    1 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு வி.ஐ.டி. ஆந்திர பிரதேசம் மற்றும் போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும்.

    மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் ஜி.வி. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பி.டெக். படிப்பு பயிலும் 4 ஆண்டுகாலம் முழுவதும் 100சதவீத படிப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    வி.ஐ.டி நுழைவுத்தேர்வில் 1 முதல் 50 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 75 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 51 முதல் 100 ரேங்குக்குள்ளாக தகுதி பெறுபவர்களுக்கு 50 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 101 முதல் 1,000 ரேங்குக்குள்ளாக தகுதி பெறுபவர்களுக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 4 ஆண்டுகள் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மாணவ, மாணவிகளும் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு 100 சதவீத படிப்பு கட்டண சலுகையுடன், அவர்களுக்கு உணவு மற்றும் விடுதி வசதியுடன் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

    • மாநில பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு-2023 (சி.யு.இ.டி) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
    • இணையவழி விண்ணப்பப்பதிவு நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது.

    சேலம்:

    மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு-2023 (சி.யு.இ.டி) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பப்பதிவு நேற்று இரவு முதல் தொடங்கியுள்ளது. வருகிற மார்ச் மாதம் 12-ந்தேதி வரை இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு வருகிற மே மாதம் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யப்படும் பாடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 3 ஷிப்டுகளாக தேர்வு நடத்தப்படும்.

    சேலம், நாமக்கல்

    தேர்வு நடைபெறும் நகரங்கள் மற்றும் மையங்கள் குறித்த விபரம் ஏப்ரல் மாதம் 30-ந்தேதி அறிவிக்கப்படும். தேர்வறை நுழைவுச்சீட்டை (ஹால்டிக்கெட்) மே மாதம் 2-வது வாரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    யு.ஜி.சி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தன் அடிப்படையில் கடந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிகளில் சேர சி.யு.இ.டி. நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது . கடந்த ஆண்டு இந்த தேர்வை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2 மாணவ- மாணவிகள் ஏராளமானோர் எழுதினர் . இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. 

    • விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது.
    • நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

    புதுடெல்லி :

    'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு முதலில் உடல் தகுதித்தேர்வு, பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இந்த இரண்டையும் முடித்த பிறகே எழுத்து தேர்வு எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த முறைக்கு பதிலாக, இனிமேல் முதலில் எழுத்து தேர்வு நடத்த ராணுவம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களில் ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:-

    அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதித்தேர்வு முதலில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

    ஆனால் இனிமேல் பொதுவான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பின்னர் உடல் தகுதித்தேர்வும், மருத்துவ பரிசோதனைகளும் நடக்கும். இது தேர்வு நடைமுறைகளை எளிதாக்க உதவும்.

    மேலும் வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். மேலும் ஆட்சேர்ப்பு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தைக் குறைத்து, எளிதாக கையாளக்கூடியதாகவும் மாற்றும்.

    இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த முறையில் வருகிற ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் 200 இடங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

    இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

    • தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
    • தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும்

    சென்னை:

    மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழ நுழைவுத் தேர்வுக்கான (கியூட்) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.

    மத்திய பல்கலைக்கழகங்களில் 2023-ம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத்தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    அதன்படி, இளங்கலை படிப்புகளுக்கான கியூட் 2023 தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31-ந்தேதிகள் வரை நடைபெறும் என்றும், விண்ணப்பதிவு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 3-வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் நடைபெறும், நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. https://www.nta.ac.in/cuetexam என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    பொது, ஓ.பி.சி., இ.டபுள்யு.எஸ். பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ. 650, எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.550. தேர்வு கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தவேண்டும்.

    கியூட் நுழைவுத் தேர்வை இந்தியாவிற்கு உள்ளே 259 நகரங்களில் உள்ள 489 தேர்வு மையங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

    • அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை: 

    திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

    இந்தியா முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வு 2023 ஜனவரி 8ந் தேதி நடைபெற உள்ளது. ஆன்லைனில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி நவம்பா் 30ந் தேதி ஆகும். வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் மேலும் முழுமையான விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருச்சியில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் வகையில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு நடந்தது
    • திருச்சியில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் வகையில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு நடந்தது


    திருச்சி:

    இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் 'அக்னி வீரர்கள்' என அழைக்கப்படுவார்கள்.

    இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் ராணுவ பணியில் இருப்பர். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் வரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது

    தமிழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உட்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் என 16 மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு இன்று திருச்சி தேசியக்கல்லூரியில் நடைபெற்றது.

    கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபரில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்றனர்.

    நுழைவுத் தேர்வுக்கு 2,307 இளைஞர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் சோதனைக்கு பிறகு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    இவர்களுக்கான நுழைவுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து இரண்டு மணி வரை சுழற்சி முறையில் நடைபெற்றது.

    இதையொட்டி தேசியக்கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தேர்வில் பங்கேற்றவர்களுக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு இருந்தன.




    • இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ெபாது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.
    • இதில் 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் எழுதுகிறார்கள்.

    சேலம்:

    இந்திய அரசு கல்வித்துறை சார்பாக தேசிய தேர்வு முகமை இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொதுபல்கலைக்கழக நுைழவுத் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது.

    மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்தநிலையில் மாணவ- மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன் கருதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

    இளநிலை பட்டப்படிப்புகளுக்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) -2022 நாடு முழுவதும் 554 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 13 இடங்களிலும் நடைபெற உள்ளது.

    43 மத்திய பல்கலைக்கழகங்கள், 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், 18 தனியார் பல்கலைக்கழகங்கள் என 86 பல்கலைக்கழங்களில் அட்மிஷனுக்கு 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் பதிவு செய்துள்ளனர்.

    வருகிற ஜூலை மாதம் 15-ந்தேதி நுழைவுத் தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து 16-ந்தேதி, 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதியும் மற்றும் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை கம்ப்யூட்டர் வழியாக நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மாணவ- மாணவிகள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதாவது தவறாக பதிவு செய்து இருந்தால் அதனை இன்று முதல் நாளை நள்ளிரவு 11.50 மணி வரை திருத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இந்த இறுதி கட்ட வாய்ப்பை மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

    ×