search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபாத் திட்டத்தின்கீழ் திருச்சியில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு
    X

    அக்னிபாத் திட்டத்தின்கீழ் திருச்சியில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு

    • திருச்சியில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் வகையில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு நடந்தது
    • திருச்சியில் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் வகையில் இளைஞர்களுக்கு நுழைவுத்தேர்வு நடந்தது


    திருச்சி:

    இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் 'அக்னி வீரர்கள்' என அழைக்கப்படுவார்கள்.

    இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் ராணுவ பணியில் இருப்பர். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் வரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது

    தமிழகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உட்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் என 16 மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களை அக்னி வீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு இன்று திருச்சி தேசியக்கல்லூரியில் நடைபெற்றது.

    கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபரில் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்றனர்.

    நுழைவுத் தேர்வுக்கு 2,307 இளைஞர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் சோதனைக்கு பிறகு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    இவர்களுக்கான நுழைவுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து இரண்டு மணி வரை சுழற்சி முறையில் நடைபெற்றது.

    இதையொட்டி தேசியக்கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தேர்வில் பங்கேற்றவர்களுக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு இருந்தன.




    Next Story
    ×