search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு தொகுப்பு மானியம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் அருண்தம்புராஜ்.

    முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு தொகுப்பு மானியம்- கலெக்டர் தகவல்

    • குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வு பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்பட்டு வருகிறது.
    • முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் தங்களது சிறார்களை ராணுவ பணிகளில் சேர்ந்திட ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்திலிருந்து ராணுவப் பணியில் சேர்ந்து பயிற்சி பெறும் முன்னாள்படைவீரர்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் வகையில் தொகுப்பு நிதியிலிருந்து தொகுப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி, முப்படையில் நிரந்திர படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப்பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.50000மும் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவிகளின் பணிக்காக தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.25000மும் வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீர ர்கள்மற்றும் கைம்பெண்கள் தங்களது சிறார்களை இந்திய இராணுவ பணிகளில்சேர்ந்திட ஊக்குவிக்குமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறீர்கள்.

    மேலும் விவரங்கள் அறிய நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகதரைத்தளத்தில் அறை எண். 10 மற்றும் 11-ல் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசிமூலமாகவோ (04365-299765) தொடர்பு கொள்ளலாம் எனதெரிவித்துள்ளார்.

    Next Story
    ×