search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anniversary"

    • தெற்குவள்ளியூர் நிர்மலா ஆர்.சி.நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது.
    • டி.டி.என்.கல்விகுழுமத்தின் தலைவரும், பள்ளியின் புரவலருமான டி.லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

    வள்ளியூர்:

    தெற்குவள்ளியூர் நிர்மலா ஆர்.சி.நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. டி.டி.என்.கல்விகுழுமத்தின் தலைவரும், பள்ளியின் புரவலருமான டி.லாரன்ஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் வள்ளியூர் புனித பாத்திமா அன்னை திருத்தல பங்குதந்தையுமான ஆர்.ஜேசுதுரை ஜாண்சன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கிய மேரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக கலந்தபனை அமைதி இல்லம் இயக்குனர் தந்தை ரெக்ஸ், வள்ளியூர் பாத்திமா அன்னை ஆலய உதவி பங்குதந்தை, புனித பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டிசலேத் ஜெயந்தி, திருச்சிலுவை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அக்ஸிலியா, ஊராட்சி மன்ற தலைவி முத்தரசி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி பிரேமா ஆகியோர் பங்கேற்று பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.லாரன்ஸ் பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியை அமலா வரவேற்றார். ஆசிரியை பிரபா நன்றி கூறினார்.

    • சாயல்குடி அருகே மெட்ரிக் பள்ளி ஆண்டுவிழா நடந்தது.
    • விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மலட்டாறு விலக்கு ரோடு பகுதியில் உள்ள வி.வி.எஸ்.எம்.நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 13-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி முன்னாள் பேரூராட்சி தலைவர் முகம்மது ஜின்னா முன்னிலை வகித்தனர். தாளாளர் சந்திரா சத்தியமூர்த்தி வரவேற்றார். முதல்வர் அங்காள ஈஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள் ஒவ்வொரு வகுப்பிலும் 3 பேருக்கு சிறப்பு பரிசுகளை சாயல்குடி ஜமீன்தார் சிவஞானபாண்டியன் வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் பாலமுருகன், சத்தியதேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    • திசையன்விளை ஜெயராஜேஷ் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 32-வது ஆண்டு விழா நடந்தது.
    • விழாவில் அரசு பொதுத்தேர்வில் முதல் இடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை ஜெயராஜேஷ் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 32-வது ஆண்டு விழா நடந்தது. டாக்டர் ஜெகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ராஜேஷ்வரன், பள்ளி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஜய் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி முதல்வர் ராஜேஷ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் அரசு பொதுத்தேர்வில் முதல் இடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளில் பல்வேறு வகையான கலைநிகழ்சிகள் நடந்தது. மாணவி கேத்ரின் ரெஜினா நன்றி கூறினார்.

    • எம்.கே.ஆர். அய்யநாடார் ஜெயலட்சுமி அம்மாள் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    மதுரை

    பாரத பெருந்தலைவர் காமராஜர் அறநிலையம் எம்.கே.ஆர்.அய்ய நாடார் ஜெயலட்சுமி அம்மாள் ஆங்கில பள்ளியின்

    23-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளிதலைவர்ஜெமினிஎஸ்.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி வரவேற்றார். விழாவிற்கு வந்த வாழ்த்து செய்திகளை துணைத்தலைவர் எம். எஸ்.சோமசுந்தரம் வாசித்தார்.

    பொருளாளர் டி.பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் ஆர்.கவுதமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    விழாவில் பள்ளி புரவலர் ஜெயலட்சுமி அம்மாள், தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கியின் சிந்தாமணி கிளை மேலாளர் ஆர்.கண்ணன், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், இணைசெயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் பள்ளி செயலாளர் கே.ஆனந்த் மற்றும் ஆட்சி அவை உறுப்பினர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் எச்.ஆயிஷா நன்றி கூறினார்.

    • அரசு பள்ளி ஆண்டு விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி சுந்தரராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசும்போது, கணபதி சுந்தர நாச்சியார்புரம், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜர் நகர் மற்றும் கோதை நாச்சியார்புரம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுள்ளது என்றார். விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வித்யா, தலைமை ஆசிரியர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன், கிளை செயலாளர்கள் கருணாகரன், பாலமுருகன், கனகராஜ், மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள க.பெருமாள் பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 1972 ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா கள்ளர் சீரமைப்பு துறை கல்வி அலுவலர் ஜவகர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம், ஒன்றிய கவுன்சிலர் செல்வ பாண்டி, மாவட்ட கவுன்சிலர் ரெட் காசிமாயன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சரவண குமார் வரவேற்றார்.ஆண்டுவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.முன்னாள் மாணவர்கள் பிருத்வி, மலைச்சாமி, பிரகாஷ் ஆகியோர் நூலகத்திற்கு தேவையான பொருட்க பொருட்களை வழங்கினர்.

    உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கணேசன் விழாவை தொகுத்து வழங்கினர். முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    • 08 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
    • விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் 10ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்று காலை 9மணிக்கு வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 108 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

    சீரடி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 12 மணிக்கு சிறப்பு ஆரத்தி பூஜையும், தொடர்ந்து சிறப்பு பஜனையும் நடந்தது.அவிநாசி வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி தலைமையிலான குழுவினர் ஆண்டு விழா பூஜைகளை நடத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பூர் ஸ்ரீசீரடி சாய் பீடம் அறக்கட்டளை செய்திருந்தது.  

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது.
    • இந்த விழாவில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் 24-ம் ஆண்டிற்கான முதலா மாண்டு மாணவர்கள் தொடக்க விழா மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தொடக்கவுரை ஆற்றினார். டீன் மாரிச்சாமி வர வேற்றார். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சென்னை உளவியலாளர் ரகுநாத் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    இன்றைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகி நேரத்தையும், ஆரோக்கியத்தையும் வீணாக்குகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு படிப்பில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் மனமுடைந்து தவறான முடிவை எடுக்கின்றனர்.

    பெற்றோர்கள் மாண வர்களை அரவணைத்து அறிவுரை வழங்கி அவர்களுக்கு அன்பான முறையில் அறிவுரையை கூற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரின் உணவு பழக்க வழக்கங்கள் முறையாக இருக்க வேண்டும்.

    மேலும் பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், வாழ சமுதாயத்தில் உயர் இடம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இரு கல்லூ ரிகளின் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்த னர். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் சயின்ஸ் அண்டு ஹிமானிட்டிஸ் துறைத்தலைவர் பேரா சிரியர் சக்திஸ்ரீ நன்றி கூறினார். 

    • காரைக்குடியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு விழா நடந்தது.
    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காரைக்குடி

    அ.தி.மு.க.பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதில் மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திரா தேவி, நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், கவுன்சிலர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா, கனகவள்ளி, ராதா, ராம்குமார், நகர மகளிரணி செயலாளர் சுலோச்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை செயலாளர் பாலா, நிர்வாகிகள் திருஞானம், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், தேவகோட்டை ரவிக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், ரவி, மாவட்ட பிரதிநிதி மகேஷ், இளைஞர் பாசறை கண்ணதாசன், கணேசன், சதீஷ், ரேவதி, கல்லல் கவுன்சிலர் முருகேசன், பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    வெள்ளகோவில் :

    பொது சுகாதாரத்துறை ஆரம்பிக்கப்பட்டு தற்போது 100வது ஆண்டு நடைபெறுவதால், சுகாதாரத் துறை சார்பில் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த வாரத்தில் தினசரி ஒரு நிகழ்வாக மருத்துவர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு கபடி போட்டி, இசை நாற்காலி, பேச்சு போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, ஆரோக்கியமான குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பது ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி மற்றும் மருத்துவர் கார்த்திகா, சுகாதார மேற்பார்வை யாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன், வேல்முருகன் உட்பட வெள்ளகோவில், கம்பளியம்பட்டி, முத்தூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் பிரிவிற்கான 20-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது
    • திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்

    திருச்சி:

    திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பெண்கள் பிரிவிற்கான இருபதாவது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி, முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமை உரையாற்றி வரவேற்புரை நல்கினார்.

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் முதல்வர், சுஜாதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார்.

    விழாவில் 100 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம், மெதுவாக இரு சக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் 1500 க்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரியில் பயிலும் மாணவிகள் தற்காப்பு கலைகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆங்கிலத் துறையும், மாணவியர் படை அணி வகுப்பில் என்எஸ்எஸ் மாணவிகளும், தனிநபர் சாம்பியன் பட்டத்தை, மாணவி ராஜேஸ்வரியும் பெற்றனர்.

    கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜீமுத்தீன், பொருளாளர் ஜமால் முஹம்மது, உதவிச்செயலாளர் அப்துஸ் சமது, கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குநர; அப்துல் காதர் நிஹால், விடுதி நிர்வாக இயக்குநர் முகமது ஃபாசில், பெண்கள் விடுதி இயக்குநர் ஹாஜிரா ஃபாத்திமா, கூடுதல் துணை முதல்வர் முகமது சிஹாபுதீன், கல்லூரியின் தேர்வு நெறியாளர், நிதி ஆளுநர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

    முன்னதாக கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஷாயின்ஷா, உடற்கல்வித் துறையின் ஆண்டு அறிக்கையை சமர்பித்தார். நிறைவாக, துணை முதல்வர் முகமது இப்ராஹிம் நன்றி கூறினார்.

    • மறைந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஜான்மோசின் 2-ம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
    • ஜான்மோசஸ் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு தையல் எந்திரம், கல்வி நிதிஉதவி, நோட்டு புத்தகங்களை சாலமன் பாப்பையா வழங்கினார்.

    மதுரை

    மதுரையில் மறைந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஜான்மோசசின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு, மாநில செயலாளர் செல்லப்பாண்டி தலைமையில் நடந்தது. ஜான்மோசசின் மகன்கள் ஜான்மணிபாரத், ஜான் நோயல் ராஜா, ஜான் இனியன் முன்னிலை வகித்தனர்.

    பேராசிரியர் சாலமன்பாப்பையா நினைவுரை வழங்கினார். கிரம்மர்சுரேஸ், காங்கிரஸ் நிர்வாகி பி.காந்தி, சமூகநீதி கட்சி தலைவர் எஸ்.பால்ராஜ், தி.மு.க பிரமுகர் பொன்.வசந்த், பெரியார் பண்பாட்டு கழக தலைவர் வரதராசன், விக்டோரியா எட்வர்டு மன்றதலைவர் இஸ்மாயில், சிவாஜி மன்ற தலைவர் நாகராஜன், தமிழர்தேசிய முன்னணி நகர தலைவர் கணேசன், சமூகநீதி கட்சி தலைவர் கூடலிங்கம்,வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் அம்மாவாசி, மதசார்பற்ற ஜனதாதளம் நகர செயலாளர் லிங்கம், பழனிகுமார், கவிஞர்கள் பொற்கை பாண்டியன், ரேவதி, பொயட் ரவி, தொல்காப்பியன், துளிர் உள்பட பலர் பேசினர்.

    வைகை ராஜன் எழுதிய புத்தகத்தை ஜான் மணி பாரத் பெற்று கொண்டார். ஜான்மோசஸ் குடும்பத்தினர், சின்மயா பைனான்ஸ் பாக்கியராஜ், குருசாமி மற்றும் ஊழியர்கள் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர். ஜான்மோசஸ் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு தையல் எந்திரம், கல்வி நிதிஉதவி, நோட்டு புத்தகங்களை சாலமன் பாப்பையா வழங்கினார். இதில் ஜனதாதளம் பிரமுகர்கள், முன்னாள் தலைவர் நாகேந்திரன், தொழிலாளர் அணித்தலைவர் ரவீந்திரன், செயலாளர் புதூர் சுகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×