search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜான்மோசின் 2-ம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிப்பு
    X

    ஜான்மோசின் 2-ம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிப்பு

    • மறைந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஜான்மோசின் 2-ம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
    • ஜான்மோசஸ் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு தையல் எந்திரம், கல்வி நிதிஉதவி, நோட்டு புத்தகங்களை சாலமன் பாப்பையா வழங்கினார்.

    மதுரை

    மதுரையில் மறைந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் ஜான்மோசசின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு, மாநில செயலாளர் செல்லப்பாண்டி தலைமையில் நடந்தது. ஜான்மோசசின் மகன்கள் ஜான்மணிபாரத், ஜான் நோயல் ராஜா, ஜான் இனியன் முன்னிலை வகித்தனர்.

    பேராசிரியர் சாலமன்பாப்பையா நினைவுரை வழங்கினார். கிரம்மர்சுரேஸ், காங்கிரஸ் நிர்வாகி பி.காந்தி, சமூகநீதி கட்சி தலைவர் எஸ்.பால்ராஜ், தி.மு.க பிரமுகர் பொன்.வசந்த், பெரியார் பண்பாட்டு கழக தலைவர் வரதராசன், விக்டோரியா எட்வர்டு மன்றதலைவர் இஸ்மாயில், சிவாஜி மன்ற தலைவர் நாகராஜன், தமிழர்தேசிய முன்னணி நகர தலைவர் கணேசன், சமூகநீதி கட்சி தலைவர் கூடலிங்கம்,வல்லரசு பார்வர்டு பிளாக் தலைவர் அம்மாவாசி, மதசார்பற்ற ஜனதாதளம் நகர செயலாளர் லிங்கம், பழனிகுமார், கவிஞர்கள் பொற்கை பாண்டியன், ரேவதி, பொயட் ரவி, தொல்காப்பியன், துளிர் உள்பட பலர் பேசினர்.

    வைகை ராஜன் எழுதிய புத்தகத்தை ஜான் மணி பாரத் பெற்று கொண்டார். ஜான்மோசஸ் குடும்பத்தினர், சின்மயா பைனான்ஸ் பாக்கியராஜ், குருசாமி மற்றும் ஊழியர்கள் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர். ஜான்மோசஸ் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு தையல் எந்திரம், கல்வி நிதிஉதவி, நோட்டு புத்தகங்களை சாலமன் பாப்பையா வழங்கினார். இதில் ஜனதாதளம் பிரமுகர்கள், முன்னாள் தலைவர் நாகேந்திரன், தொழிலாளர் அணித்தலைவர் ரவீந்திரன், செயலாளர் புதூர் சுகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×