search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saibaba"

    • சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார்.
    • ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், முத்தியாலம் பாடு மாவட்டம், விஜயவாடாவை சேர்ந்தவர் யாதி ரெட்டி.

    இவர் விஜயவாடாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார். பிச்சை எடுத்த ரூ.1 லட்சத்தை சாய்பாபா கோவில் வளர்ச்சிக்கு நிதியாக கோவில் கவுரவ தலைவர் கவுதம் ரெட்டியிடம் வழங்கினார்.

    இது குறித்து கவுதம் ரெட்டி கூறுகையில், யாதி ரெட்டி கோவிலுக்கு நன்கொடை வழங்குவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே பல தவணைகளில் ரூ.8.54 நன்கொடையாக வழங்கி உள்ளார் தற்போது வழங்கியுள்ள ரூ.1 லட்சத்துடன் ரூ.9.54 லட்சம் வழங்கி உள்ளார் என்றார்.

    யாதி ரெட்டி கூறுகையில் கோவில் முன்பாக பிச்சை எடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷீரடி சாயிபாபாவை நினைத்துக் கொள்ளுங்கள்.
    • மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

    மகான் என்பவர் குருவின் அம்சம். குரு என்பவர் ஞானி. ஞானி என்பவர், நம்மைக் கடைத்தேற்றி. அருள் வழங்குபவர். ஷீரடி சாயிபாபா, ஒரு ஞானியாக, குருவாக, ஞான குருவாக, மகானாக... பேசும் தெய்வமாக இருந்து இன்றைக்கும் நமக்கு அருளிக்கொண்டிருக்கிறார்.

    என்னுடைய அன்புக்கு உரிய குழந்தைகளே. இந்த வாழ்க்கை அற்பமானது என்று எண்ணிவிடாதீர்கள். மிக மிக அரிதானது இந்த வாழ்க்கை. இந்த வாழ்க்கைப் பயணத்தை நாம் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவேண்டும். அந்தப் பயணத்துக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையானது, உண்மையில் நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல.

    உங்கள் வாழ்க்கையும் உங்களுக்கான பாதையும் அந்த வாழ்க்கைப் பயணத்துக்கான செயல்களும் நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல. நீங்கள் செயலாற்றுவது அல்ல. இவை அனைத்துமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது.

    அப்படி தீர்மானிக்கப்பட்ட வழியில்தான் நீங்கள் நடந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களின் வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டது என்பதைப் புரிந்து உணர்ந்துகொண்டால், உங்கள் வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதில் உங்களுக்குத் தெளிவு கிடைத்துவிடும்.

    இதில் உங்களுக்குத் தெளிவு வந்துவிட்டால், உங்களுடைய வாழ்க்கை உன்னதமானது என்பதையும் புரிந்துகொள்வீர்கள். ஆனால் பலரும் புரிந்து கொள்வதே இல்லை. சக்தியின் உன்னதங்களைத் தெரிந்துகொள்வதே இல்லை.

    ஏற்கெனவே திட்டமிடப்பட்ட உங்களின் வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் ஏற்படலாம். நிறை குறைகள் ஏற்படலாம். கஷ்ட நஷ்டங்கள் இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால், 'இந்த உலகம் யுத்தகளம் போல் இருக்கிறது' என்று நீங்கள் நினைக்கலாம் .'நம் வாழ்க்கையே யுத்தமாகியிருக்கிறது' என்று வேதனைப்படலாம்.

    கவலையே படாதீர்கள். உங்களையும் உங்களின் வாழ்க்கையையும் என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படுகிற எல்லாக் கவலைகளையும் நான் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் பயணத்தை நான் இலகுவாக்கித் தருகிறேன்'' என்கிறார் சாயிபாபா.

    ''உன்னுடைய தகப்பனாக நானிருக்கிறேன். எதற்கும் துக்கப்படாதே. எதைக் கண்டும் பயப்படாதே. என் திருநாமத்தை யாரெல்லாம் சொல்கிறீர்களோ... அங்கே அவர்களுக்கு அருகில் நான் வந்துவிடுவேன்'' என்பது சாயிபாபா வாக்கு.

    உங்கள் அனைவரையும் ஒரு அம்மாவாக, அப்பாவாக இருந்து காப்பேன்.என் இதயத்தைக் கருவறையாக்கி அதில் உங்களை வைத்து அரவணைப்பேன்'' எனும் சாயிபாபாவின் சத்திய வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். 'சாயிராம்' என்று அவரின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே இருங்கள்.

    பகவான் சாயிபாபா உங்களைக் காப்பார்!

    • சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம்.
    • ஊதுபத்தி ஏற்றி பாபாவின் விரத கதையை படிக்கலாம்.

    சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.

    வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதமிருந்து வருகின்றனர். அவ்வாறு விரதம் இருப்பதையும் சாய்பாபா பக்தர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    அதற்கெல்லாம் காரணம்... பல அதிசயங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்து இருப்பது மட்டுமே. சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.

    அவ்வாறு விரதம் இருக்கும்போது 9 வாரங்கள் வியாழக்கிழமையன்று சாய்பாபாவின் நாமத்தை மனதிற்குள் எண்ணி தாங்கள் நினைக்கும் காரியத்தை நினைவுகூர்ந்து தூய எண்ணங்களுடன் வழிபட்டால் கட்டாயம் நிறைவேறும் என்பது ஐதீகம். அவ்வாறு வழிபாட்டில் ஈடுபடும் போது காலையோ அல்லது மாலையோ சாய்பாபாவின் படத்திற்கு முன் அமர்ந்து ஓர் மஞ்சள் துணியை சுத்தமான ஒரு பலகையில் விரித்து வைத்து, அதன் மீது சாய்பாபா படத்தை வைத்து தூய நீரில் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் மற்றும் திலகமிட வேண்டும்.

    பாபாவிற்கு பிடித்த மஞ்சள் நிற மலர்கள் அணிவித்தால் மிகவும் சிறப்பு. பின்னர் ஊதுபத்தி ஏற்றி பாபாவின் விரத கதையையும் படிக்கலாம். பிறகு பூஜை செய்து நைவேத்தியம் அதாவது கற்கண்டு இனிப்பு பழங்கள் என் சாய் பாபாவிற்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபட்டால் எண்ணிய காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால்தான் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பாபாவின் பக்தர்கள் தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • பாபா அடிக்கடி "சப்கா மாலிக் ஏக்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
    • வியாழக்கிழமை என்றால் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.

    ஓம் சாய்....

    ஸ்ரீ சாய்....

    ஜெய ஜெய சாய்....

    உலகம் முழுக்க வாழும் சீரடி சாய்பாபா பக்தர்கள் தினம் தினம் இந்த மந்திரத்தை உச்சரித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மந்திரத்துக்குள் இருக்கும் மகத்துவத்தை யாராலும் அளவிடவே முடியாது. யார் ஒருவர் தினமும் ஓம் சாய்.... ஸ்ரீ சாய்.... ஜெய ஜெய சாய்.... என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருக்கிறாரோ அவரது மனம் ஆத்மார்த்தமாக அமைதியாகி விடும். நாளடைவில் அவர் பாபாவின் தத்துவங்கள் அனைத்தையும் கொண்ட மாமனிதனாக மாறி விடுவார்.

    இந்த அற்புதம் உலகளவில் ஓசையில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. பொதுவாக இறைவனின் அவதாரங்களாக வருபவர்களால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்த முடியும். அந்த வகையில் மராட்டிய மாநிலம் சீரடி மண்ணில் 60 ஆண்டுகள் வாழ்ந்த சீரடி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்...

    அப்பாவிகளுக்கும், ஏழைகளுக்கும் அவர் கருணைக்கடலாக உள்ளார். ஆன்மீகத்தில் மேம்பட்டவர்களுக்கு அவர் வழிகாட்டியாக உள்ளார். பக்குவம் பெற்றவர்களுக்கு அவர் முக்தி பாதைக்கு வழிகாட்டும் கண்கண்ட தெய்வமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இப்படி பல வடிவங்களில் இருப்பதால்தான் நாட்டில் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் தினமும் சாய் நாமத்தை உச்சரித்துக் கொண்டு அவரை நம்பி அவரது பாதகமலங்களை இறுகப் பற்றியுள்ளனர்.

    மராட்டிய மாநிலத்தில் பாத்ரி என்ற கிராமத்தில் கங்கா-தேவகியம்மா ஆகியோருக்கு மகனாக சாய்பாபா பிறந்தார் என்றும் இஸ்லாமிய பக்தர் ஒருவர் அவரை 4 ஆண்டுகள் வளர்த்தார் என்றும் குறிப்புகள் உள்ளன. ஆனால் அவரை பற்றிய தெளிவான தகவல்களை இதுவரை எந்த ஆராய்ச்சியாளராலும் உறுதிப்பட சொல்ல முடிய வில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

    தத்தாத்ரேயரின் அவதாரமாக அவரை சொல்கிறார்கள். சீரடியில் வாழ்ந்த காலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அவரது திருவடிகளை சரணடைந்தவர்களின் அத்தனை எண்ணங்களையும் அவர் நிறைவேற்றினார். எந்த வடிவத்தில் அவரை பக்தர்கள் பார்க்க நினைத்தார்களோ அதே வடிவத்தில் மாறினார். அவரை நம்பி அடைக்கலம் அடைந்து விட்டால் நமது பாரத்தை சுமக்கும் பாதுகாவலராக மாறினார்.

    ஒவ்வொரு விஷயத்திலும் சாய் நாமத்தை உச்சரிக்கும்போது அனைத்து விதமான பாவங்களையும் நீக்கும் சக்தியை அளித்தார். குறிப்பாக சீரடி மண்ணில் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ அவரது தோஷங்கள் அனைத்தையும் அன்றே விலக செய்வதை அனுபவப்பூர்வ மாக உணர்த்தினார்.

    சீரடியில் துவாரகமாயி தலத்தில் அவர் ஏற்றி வைத்த தீபம் இன்றும் அக்னிகுண்டமாக எரிந்து கொண்டு இருக்கிறது. அதில் இருந்து கிடைக்கும் சாம்பலைதான் சீரடி சாய்பாபாவின் பிரசாதமாக "உதி" என்ற பெயரில் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த "உதி" சக்திவாய்ந்தது. ஊழ் வினைகள் அனைத்தையும் விரட்டும் ஆற்றல் கொண்டது.

    பாபாவை வழிபட்டு உதியை வாங்கி கொண்டாலே போதும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் நழுவி நகர்ந்து விடும். ஆனால் இந்த பலனை பெறுவதற்கு பாபா காட்டிய தத்துவங்களை கடைபிடிக்க வேண்டும். பாபா தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் அந்த தத்துவங்களை வெளிப்படுத்தினார்.

    ஒழுக்கமாக வாழ வேண்டும், தொண்டு செய்ய வேண்டும், அன்னதானம் செய்ய வேண்டும், இரக்க செயல்களில் ஈடுபட வேண்டும், கண்மூடித்தனமாக சடங்குகளை கடைபிடிக்க கூடாது. இப்படி அவர் காட்டி உள்ள தத்துவங்கள் ஏராளம். இந்த தத்துவங்களில் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கலங்காதே... நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன் என்று இன்றும் பாபா ஆசீர்வதித்துக் கொண்டு இருக்கிறார். அவர் சாதி, மதம், இனம் எதையும் பார்த்ததில்லை. அதனால்தான் சீரடி தலத்தில் இன்றும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் என்று அனைத்து தரப்பினரும் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மதங்களை கடந்து அவர் நின்றார் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.

    அவர் சமய சடங்குகள் செய்தது இல்லை. யாகம் நடத்தியது இல்லை. புரியாத மந்திரங்கள் சொல்லி மக்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டது இல்லை. அதனால்தான் சீரடி பூமி இன்றும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு சொர்க்க பூமியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    பாபாவை சீரடிக்கு சென்றுதான் வழிபட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அவரது ஆலயங்கள் தமிழகம் முழுக்க நிரம்ப வந்து விட்டன. அனைத்து ஆலயங்களிலும் சீரடியில் நடப்பது போன்றே ஆரத்திகள் எடுக்கப்படுகின்றன. பாபாவுக்கு உரிய அத்தனை ஆராதனைகளும் சிறப்பாக செய்யப்படுகின்றன.

    இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பாபா ஆலயத்திலும் அவர் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்பதை உறுதியாக நம்பலாம். இந்த பிறவியை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் பாபாவின் கொள்கை கோட்பாடுகளை தாமாகவே கடைபிடித்து கொண்டாலே போதுமானது. பாபாவின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் ஒருநாளும் வீழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.

    அதே சமயத்தில் சாய்பாபாவின் வார்த்தைகளை கடைபிடித்தால் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தி லும் வெற்றி கிடைப்பதை அனு பவப்பூர்வ மாக உணர முடியும். அன்பு காட்டுங்கள் என்பது தான் பாபாவின் அடிப்படை தத்துவம். மனதில் அன்பு வந்து விட்டால் தன்னலமற்ற சேவையை தொடங்கி விடுவீர்கள் என்பது பாபா காட்டிய அடுத்த வழி.

    பாபா அடிக்கடி "சப்கா மாலிக் ஏக்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இதற்கு அனைவரின் கடவுள் ஒருவரே என்று அர்த்தம் ஆகும். இதை உணர்ந்து கொண்டவர்களிடம் நம்பிக்கை மற்றும் பொறுமையை விளக்கி சொன்னார். இவற்றை உணர முடியாத நிலையில் இருந்தவர்களிடம், "நான் இருக்கும் போது பயம் ஏன்" என்று ஆறுதல்படுத்தினார்.

    என்னை நம்புங்கள் உங்கள் பிரார்த்தனைக்கு பதில் கிடைக்கும். உலகம் ஒரு பாலம். அதை கடந்து செல்லுங்கள். அதில் ஒருபோதும் வீடு கட்ட நினைக்காதீர்கள் என்று தன்னை காண வந்த ஒவ்வொருவரிடமும் சீரடி சாய்பாபா வலியுறுத்தி சொல்வது உண்டு. இதை பாபா பக்தர்களில் எத்தனை பேர் ஆத்மார்த்தமாக கடைபிடிக்கிறார்கள் என்று ஆய்வு செய்தால்.... ஒரு சதவீதம் பேர்கூட தேற மாட்டார்கள்.

    அப்படியானால் சீரடி சாய்பாபா ஆலயங்களில் இப்போது என்ன நடக்கிறது என்ற கேள்வி எழலாம். ஆரத்திகள் நடத்து கிறார்கள், அன்னதானம் செய்கிறார்கள், வியாழக்கிழமை என்றால் சிறப்பு பூஜை செய்கிறார்கள். ஆனால் இவை போதுமா? என்றால் நிச்சயம் போதாது.

    சாய்பாபாவின் அருளை உண்மையிலேயே பெற நினைத்தால் என்ன செய்ய வேண்டும். முதலில் பாபாவை நம்ப வேண்டும். அவரிடம் பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவரது போதனைகளை கடைப்பிடிக்க வேண்டும். சத்சரிதம் படித்தால் மட்டும் போதாது. பாபாவின் ஒவ்வொரு வாசகங்களையும் மனதுக்குள் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

    சாய்பாபா ஒருபோதும் தன்னை துதிக்க வேண்டும் என்றோ, மந்திரங்கள் மூலம் ஆராதனைகள் செய்ய வேண்டும் என்றோ, நிறைய படையல்கள் போட்டு வழிபட வேண்டும் என்றோ சொன்னதே கிடையாது. அவர் எதிர்பார்ப்பது எல்லாம் பிறருக்கு தொண்டு செய்யுங்கள், அன்பாக இருங்கள் என்பதுதான்.

    சாய்பாபா நாமத்தை எந்த அளவுக்கு நம்பிக்கையோடு உச்சரிக்கிறோமோ அதே அளவுக்கு அவரது போதனைகளை ஏற்று தன்னலமற்ற வாழ்க்கையை இன்று முதல் தொடங்கி நடத்தி பாருங்கள். இன்று (வியாழக்கிழமை) பாபாவின் ஜெயந்தி தினமாகும். இன்று முதல் பாபா தத்துவத்தை கடைபிடிக்க தொடங்கினால் இன்று முதல் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

    • குருவாரம் என்று வியாழனைச் சொல்லுவார்கள்.
    • நீங்கள் நினைத்த காரியத்தை நடத்தித் தருவார் சாய்பாபா.

    பிரச்சினைகளில் இருந்து விடுபட வேண்டும், சிக்கல்களெல்லாம் தீரவேண்டும், கவலைகள் அனைத்தும் காணாமல் போகவேண்டும் என்று யாருக்குத்தான் ஆசையில்லை? இவை அனைத்தையும் நீக்கியருள்வார் சாயிபாபா.

    'என்னைத் தேடி வந்துவிட்டீர்களென்றால், உங்கள் துக்கங்களையெல்லாம் நான் பார்த்துக்கொள்வேன். அந்த துக்கங்களெல்லாம் என் பொறுப்பு' என அருளியுள்ளார் சாய்பாபா. எனவே, முழுமனதுடன் எவரொருவர் சாயிபாபாவை நம்பி, அவரை சரணடைகிறாரோ, அவர்களின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துத் தருவார் பாபா. கஷ்டங்களையெல்லாம் போக்கிவிடுவார். துக்கங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து அருளுவார் ஷீர்டி சாயிபாபா.

    பாபாவை நம்பி, பாபாவைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கிவிட்டால், வியாழக்கிழமை என்றில்லை. எந்தநாளிலும் பாபாவை வழிபடலாம். குருவாரம் என்று வியாழனைச் சொல்லுவார்கள். ஆனால் எல்லாநாளும் குருவின் நாளே!

    பிரார்த்தனையை வியாழக்கிழமை அன்று தொடங்குவது சிறப்பு வாய்ந்ததுதான் என்றாலும் எந்தநாளிலும் வழிபாட்டைத் தொடங்குவதில் தவறேதுமில்லை என்கிறார்கள் சாயி பக்தர்கள்.

    வீட்டில் பாபாவின் படம் அல்லது சிலையை நன்றாகச் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். படத்துக்கு சந்தனம் குங்குமமிடுங்கள். பாபாவுக்கு பழங்களை நைவேத்தியமாக படைக்கலாம். ஜாங்கிரி, லட்டு முதலான இனிப்புகளை வழங்கலாம். குருவுக்கு உகந்தது மஞ்சள் நிறம் என்பதால், லட்டு முதலான மஞ்சள் நிற இனிப்புகளை வைப்பது இன்னும் சிறப்பு.

    இதேபோல், பாபாவுக்கு மிகப்பிடித்த இன்னொரு இனிப்பு... கற்கண்டு. இனிப்பைக் கொண்டு பாபாவுக்குப் படையலிட்டு, நம் பிரார்த்தனையை வைக்கவேண்டும். பூஜித்து முடித்ததும் பழங்களையும் இனிப்புகளையும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் அக்கம்பக்கத்தாருக்கும் வழங்கவேண்டும்.

    படாடோபத்தை பாபா ஒருபோதும் விரும்புவதில்லை. மிக எளிமையான வழிபாட்டையே விரும்புகிறார் பாபா. பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நம்மால் என்ன முடியுமோ அதை நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை பிறருக்கு விநியோகிக்கலாம். அந்த அன்பையும் பக்தியையும் மட்டுமே பார்த்து, நம் துயரங்களைப் போக்க ஓடிவருகிறார் பாபா.

    இன்னொரு விஷயம்...

    பாபாவை விரதம் இருந்து வழிபடுவது மகத்துவம் வாய்ந்ததுதான். அதேசமயம், பக்தர்களோ... மக்களோ... பசியுடன் இருப்பதை ஷீர்டி நாயகன் விரும்பமாட்டார். வழக்கம் போல் உணவு எடுத்துக் கொள்ளலாம். விரதம் மேற்கொள்ளலாம்.

    காலையும் மாலையும் பாபாவை பூஜித்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும். அந்த நைவேத்திய உணவை, பழங்களை, இனிப்புகளை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு வழங்கவேண்டும். தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமைகள், பாபாவை ஒரு விரதம் போல், காலையும் மாலையும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால், நீங்கள் நினைத்த காரியத்தை நடத்தித் தருவார் சாயிபாபா.

    பூஜை இருக்கும் நாளில், நான்கு பேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்கவேண்டும். பாபாவை நினைத்து, 'சாயிராம்' சொல்லி, அன்னதானம் செய்தால், அங்கே நமக்கு ஏதேனும் ஒரு ரூபத்தில் சுட்சுமமாக வந்து அருளுகிறார் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

    வியாழக்கிழமை என்றில்லாமல், பாபாவை நினைத்து, எந்தநாளில் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யுங்கள். நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். அப்போதெல்லாம் ஏதோவொரு ரூபத்தில் சூட்சுமமாக வந்து உங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து அருளுவார். வேண்டுவதையெல்லாம் தந்தருள்வார்.

    • நாளை இரவு 7.45 மணிக்கு தங்கரத பவனி நடக்கிறது.
    • 83 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டது.

    எனது பக்தர்கள் அனைவரும் என் குழந்தைகள், நான் உங்கள் தந்தை, நீங்கள் வணங்கும் தெய்வம் எதுவோ அதையே எப்போதும் வணங்குங்கள். விரைவில் உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார். இது பல லட்சம் பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கும் ஷீரடி சாயிபாபாவின் ஆசீர்வாத வார்த்தைகள்.

    ஷீரடி சாயிபாபா

    மனித குலம் பல யுகங்களை கடந்து, கடைசியாக கலியுகத்தில் வந்து நிற்கிறது. இந்த கலியுகம் நலமாக வாழ நாமசங்கீர்த்தனமே சிறந்தது என்று யோகிகளும், முனிவர்களும் கூறினர். அந்த வரிசையில் மனிதராய் அவதரித்து, அன்பால் அனைத்து உயிர்களையும் தன் பால் ஈர்த்து, கலியுகத்தின் கருணை கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் ஷீரடி சாயிபாபா.

    கல்லை கரைத்தது, உப்பு தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது, விஷத்தை நீக்கியது என்று சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    முழு உருவ சிலை

    அவ்வளவு மகிமை பொருந்திய ஷீரடி சாயிபாபாவுக்கு, தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் 83 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள ஷீரடி சாயிபாபா கோவிலுக்கு ஸ்ரீ நாகசாயி மந்திர் என்று பெயர் சூட்டப்பட்டது. இக்கோவிலுக்குள் நுழைந்ததுமே நமது மனதில் உள்ள இறுக்கம் விலகி சென்று விடுகிறது. அதன் உச்சமாக முழு உருவ பளிங்கு சிலையில் காட்சி தரும் பாபாவை கண்டவுடன், நம் மனம் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைப்பதையும் உணர முடிகிறது.

    முதல் கும்பாபிஷேகம்

    கோவையில் கடந்த 1943-ம் ஆண்டு ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த நிர்வாகத்தின் கீழ் ஸ்ரீ நாகசாயி மந்திர் (சாயிபாபா கோவில்) உள்ளது. உலகோர் அனைவரும் பாபாவை அறிய வேண்டும். அவரது அருளை பெற வேண்டும் என்பதை குறிக்கோளுடன், பூஜ்ய ஸ்ரீ பி.வி.நரசிம்ம சுவாமிஜி மற்றும் சி.வரதராஜா அய்யா இணைந்து, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாயிபக்தி இயக்க அமைப்பையும், சாயிபாபா மிஷனையும் 1939-ம் ஆண்டு தொடங்கினர். தென்னிந்தியாவின் முதல் ஷீரடி சாயிபாபா கோவில், ஸ்ரீ நாகசாயி மந்திர் ஆகும். இக்கோவிலில் முதல் கும்பாபிஷேகம் 10-10-1946 அன்று நடைபெற்றது.

    தங்கரத பவனி

    ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவிலின் கோபுரம் ஷீரடி சாயிபாபா சமாதி அடைந்த பின்பு, அவருக்காக முதன் முதலாக கட்டப்பட்ட கோபுரம் ஆகும். ஸ்ரீ நாகசாயி மூலவர் சிலையானது உலகிலேயே 2-வது பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்டது. 1943-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி வியாழக்கிழமை சாயிபாபா படத்திற்கு முன் 3 அடி முதல் 4 அடி நீளம் உள்ள நாகரூபத்தில் சாயிபாபா 17 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து காட்சி அளித்தார்.

    ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின்னர், இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. கடந்த 28-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீ நாகசாயி உற்சவ மூர்த்தி வீதி உலாவும், நாளை (வியாழக்கிழமை) இரவு 7.45 மணிக்கு தங்கரத பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் என்.சர்வோத்தமன், அறங்காவலர்கள் ஜி.தியாகராஜன், எஸ்.சந்திரசேகர், ஜி.சுகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    வரலாற்று சின்னம்

    இதுகுறித்து ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறும்போது, அறக்கட்டளையின் கீழ் சாயிபாபா வித்யாலயம் நடுநிலை பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி), சாயிதீப் திருமண மண்டபம், இலவச ஹோமியோபதி கிளினிக் மற்றும் மருத்துவ உதவி, கல்வி உதவித்தொகை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாயிபாபா வித்யாலயம் நடுநிலை பள்ளி 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று வரை கட்டணமில்லா தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவில் கோவை மாநகரத்தின் வரலாற்று சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் தரிசனத்திற்கு தினமும் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர் என்றார்.

    • பல்லக்கு ஊர்வலத்தை மாவட்ட தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
    • பல்லக்கு ஊர்வலத்தின் முன் இலஞ்சி ஓம் பிரணவா ஆசிரம பாலவிகாஸ் குழந்தைகள் சென்றனர்.

    தென்காசி:

    தென்காசியில் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் 47-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் 48-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. காலையில் ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் ஆகியன நடைபெற்றன. பின்னர் பிரசாந்தி கொடி ஏற்றம் நடந்தது. அதைத் தொடர்ந்து சங்கர சதாசிவம் ருத்ரம் பாராயணம் செய்தார். பின்னர் சாய் பஜனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சகஸ்ர நாம அர்ச்சனை மற்றும் மகிளா விபாக் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் சமிதியின் மூத்த நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். சமிதியின் கன்வீனர் பத்மநாபன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    இதைத்தொடர்ந்து பால விகாஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாகி செல்வராஜ் நன்றி கூறினார். பின்னர் மங்கள ஆரத்தியும் அதனை தொடர்ந்து நாராயண சேவையும் நடைபெற்றது. மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான பல்லக்கு ஊர்வலம் நடந்தது. அதனை மாவட்ட தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். பல்லக்கில் சத்ய சாய் பாபா மற்றும் சீரடி சாய்பாபா ஆகியோரது உருவப்படங்கள் வைக்கப்பட்டு அதனை பக்தர்கள் தூக்கி வந்தனர். அப்போது ஊர்வலத்தின் முன் பகுதியில் இலஞ்சி ஓம் பிரணவா ஆசிரம பாலவிகாஸ் குழந்தைகளும் அதனைத் தொடர்ந்து பெண்கள், ஆண்கள் சென்றனர். வான வேடிக்கையுடன் ஊர்வலம் சமிதியில் இருந்து புறப்பட்டு ெரயில்வே பீடர் ரோடு, ரெயில் நிலையம், எல். ஆர். எஸ். பாளையம், கூலக்கடை பஜார் வழியாகச் சென்று இறுதியில் புறப்பட்ட இடத்தை அடைந்தது. ஊர்வலத்தில் பக்தர்கள் சாய் பஜனை பாடல்களை பாடி கொண்டு வந்தனர். அங்கு மங்கள ஆரத்தி மற்றும் நாராயண சேவையுடன் விழா முடிவடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா வீரணம்பா ளையத்தில் உள்ள ஸ்ரீ சீரடி முக்கண் சாய் பாபாவிற்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வீரணம்பா ளையத்தில் உள்ள ஸ்ரீ சீரடி முக்கண் சாய் பாபாவிற்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீரடி முக்கண் சாய்பா பாவுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ முக்கண் சாய்பாபா பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். இதில் நாமக்கல், பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், நன்செய்

    இடையாறு, ஜேடர்பா ளையம், வெங்கரை, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்கள், அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 08 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
    • விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் 10ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்று காலை 9மணிக்கு வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 108 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

    சீரடி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 12 மணிக்கு சிறப்பு ஆரத்தி பூஜையும், தொடர்ந்து சிறப்பு பஜனையும் நடந்தது.அவிநாசி வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி தலைமையிலான குழுவினர் ஆண்டு விழா பூஜைகளை நடத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பூர் ஸ்ரீசீரடி சாய் பீடம் அறக்கட்டளை செய்திருந்தது.  

    • ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளிகள் புகழ் பெற்றவை.
    • தினமும் இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல உங்களுக்குள்ளும் மாற்றம் வருவது நிச்சயம்.

    சமீப காலமாக சாய்பாபாவின் திருநாமத்தை மேம்படுத்தும் வகையில் எத்தனையோ மகத்தான மந்திரங்கள் வந்து விட்டன. நாடு முழுவதும் எண்ணற்றவர்கள் பாபா 108 போற்றி எழுதி புழக்கத்தில் விட்டுள்ளனர். அவை எல்லாமே பாபா பக்தர்களிடம் மிக சிறந்த மந்திரங்களாக பரவி உள்ளன.

    அதுபோல ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளிகள் புகழ் பெற்றவை.

    1. ஓம் சமார்த்த சத்குரு ஸ்ரீ சாயிநாதாய நமஹ

    2.ஓம் குருதேவ தத்தாத்ரேயாய சாயிநாதாய நமஹ

    3. ஓம் விஷ்வப் பிரணாய சாயிநாதாய நமஹ

    4. ஓம் விக்னநிவாராகாய சாயிநாதாய நமஹ

    5. ஓம் ரோக நிவாராகாய சாயிநாதாய நமஹ

    6. ஓம் மஹாபய நிவாராகாய சாயிநாதாய நமஹ

    7. ஓம் சாபவிமோச்சகாய சாயிநாதாய நமஹ

    8. ஓம் அபயப் பிரதாய சாயிநாதாய நமஹ

    9. ஓம் சகல தேவத ஸ்வரூபாய சாயிநாதாய நமஹ

    10. ஓம் சாரங்கதா வாத்சலாய சாயிநாதாய நமஹ

    11. ஓம் ஆயுள் ஆரோக்ய ஐசுவரிய பிரதாய சாயிநாதாய நமஹ

    இப்படி பல்வேறு மந்திரங்கள் இருந்தாலும் பாபாவின் மூல மந்திரமான ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் என்ற மந்திரம் நிகரற்ற மந்திரமாக உலகம் முழுக்க கோடிக்கணக்கான பக்தர்களின் மனதுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. தினமும் பாபா படம் முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல உங்களுக்குள்ளும் மாற்றம் வருவது நிச்சயம்.

    • சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம்.
    • சாய்பாபா படத்திற்கு மஞ்சள் நிற மலர்கள் அணிவித்தால் மிகவும் சிறப்பு.

    வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதமிருந்து வருகின்றனர். அவ்வாறு விரதம் இருப்பதையும் சாய்பாபா பக்தர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    அதற்கெல்லாம் காரணம்... பல அதிசயங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்து இருப்பது மட்டுமே. சாய்பாபாவை குருவாக நினைப்பவர்கள் ஏராளம். அதுவும் வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் ஏன்பதால் வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கின்றனர்.

    அவ்வாறு விரதம் இருக்கும்போது 9 வாரங்கள் வியாழக்கிழமையன்று சாய்பாபாவின் நாமத்தை மனதிற்குள் எண்ணி தாங்கள் நினைக்கும் காரியத்தை நினைவுகூர்ந்து தூய எண்ணங்களுடன் வழிபட்டால் கட்டாயம் நிறைவேறும் என்பது ஐதீகம். அவ்வாறு வழிபாட்டில் ஈடுபடும் போது காலையோ அல்லது மாலையோ சாய்பாபாவின் படத்திற்கு முன் அமர்ந்து ஓர் மஞ்சள் துணியை சுத்தமான ஒரு பலகையில் விரித்து வைத்து, அதன் மீது சாய்பாபா படத்தை வைத்து தூய நீரில் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் மற்றும் திலகமிட வேண்டும்.

    பாபாவிற்கு பிடித்த மஞ்சள் நிற மலர்கள் அணிவித்தால் மிகவும் சிறப்பு. பின்னர் ஊதுபத்தி ஏற்றி பாபாவின் விரத கதையையும் படிக்கலாம். பிறகு பூஜை செய்து நைவேத்தியம் அதாவது கற்கண்டு இனிப்பு பழங்கள் என் சாய்பாபாவிற்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபட்டால் எண்ணிய காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால்தான் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பாபாவின் பக்தர்கள் தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சாய்பாபாவிற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும். இந்த விரதம் ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாய்பாபா படத்திற்கு பூஜை செய்யவும்.

    மஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம் அர்ப்பணம் செய்து, மக்களுக்கு வழங்கி சாய்பாபாவை தியானம் செய்யவும். சாய் விரத கதை, சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.

    ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். ஒன்பதாவது வியாழக்கிழமை இந்த பாபா தொடர்பான புத்தகங்களை இலவசமாக 5, 11, 21 என்ற எண்ணிக்கையில் பலருக்கு வழங்கவும்.

    9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப்பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும்.

    சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும்.

    இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
    ×