search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garlanding"

    • கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் குருசுவாமி ரவி குருக்கள் துளசி மாலை அணிவித்தார்.
    • பூஜைப் பொருட்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    சபரிமலை செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். இன்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்குவதற்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் குருசுவாமி ரவி குருக்கள் துளசி மாலை அணிவித்தார். மாலை அணிவதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கியதை தொடர்ந்து நேற்று முதல் பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சந்தனம், துளசி மாலை, காவி, நீலம் மற்றும் கருப்பு நிறத்திலான வேஷ்டி, துண்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இதேபோல் திருவள்ளூர் வல்லபமகா கணபதி கோயில், காக்களூர் சிவாவிஷ்ணு கோயில், திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில், திருத்தணி சுப்ரமணியசுவாமி கோயில், திருத்தணி சுந்தர விநாயகர் கோயில், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில், மப்பேடு சிங்கீஸ்வரர், கூவம் ஒன்றீஸ்வரர், திருமழிசை ஓத்தாண்டீஸ்வரர், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மீஞ்சூரில் உள்ள தர்மசாஸ்தா கோவில், சூரப்பட்டு ஐயப்பன் கோவில்களிலும் இன்று அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோவிலில் பாண்டுரங்க குருசாமி தலைமையில் ஏராளமான மாலை அணிந்து விரதத்தை தொங்கினர். இதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • ஸ்ரீஐயப்ப பூஜையையும் முறையாக செய்ய வேண்டும்.
    • ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்பவர்களுக்கு அனைத்து இன்பமும் கிடைக்கும்.

    நாளை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் தினமாகும். நாளை காலை குரு மூலம் துளசி அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து முறையாக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருப்பார்கள். மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சில அடிப்படையான பழக்க வழக்கங்களை யும் கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு ஜந்துவையும் உடலாலோ மனத்தாலோ துன்புறுத்தக்கூடாது. பேச்சு, எண்ணம், செயல் ஆகியவற்றில் உண்மையாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குச் சேர வேண்டிய பொருளை தான் எடுத்துக் கொள்ளுதல் அல்லது அனுபவிக்கக் கூடாது.

    தினசரி அதிகாலை நேரத்தில் குளித்து தூய ஆடை அணிந்து அவரவர்களுக்கு உண்டான நித்ய கர்மாக்களை செய்து ஸ்ரீஐய்யப்ப பூஜையையும் முறையாக செய்ய வேண்டும். கண்ட காட்சிகளை கண்களால் காணாதிருத்தல், கெட்ட சத்தங்களையே காதால் கேட்காது இருக்க வேண்டும். இவ்வாறு தவம் இருந்து ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்பவர்களுக்கு அனைத்து இன்பமும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை.

    • திருச்சியில் வீரமாமுனிவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
    • கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது

    திருச்சி,

    தமிழறிஞர் வீரமாமுனிவரின் 343-வது பிறந்தநாள் , கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதையொட்டி திருச்சி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் திருச்சி எடத்தெரு பழைய கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன். மத்திய மண்டல செயலாளர் அலெக்ஸ் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். பாதிரியார் தாமஸ், பாதிரியார் விஜய் பெலவேந்திரன் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

    மாநில துணை அமைப்புச் செயலாளர் பாஸ்டர் சாம்ராஜ், மாநில ஆர்.சி துணை அமைப்புச் செயலாளர் வின்சென்ட், மாவட்ட அவைத் தலைவர்கள் ஜேக்கப் ஆண்ட்ரூஸ், மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் தேவராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் பிரான்சிஸ் சேவியர் ,ஆரோக்கியராஜ் ,ஜெரால்ட், எட்வர்ட், மகளிர் அணி நிர்மலா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
    • துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையிலும் மற்றும் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்கம் நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அப்போது மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், மண்டல ஊர்க்காவல் படை தளபதி அரவிந்தன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

    • மாநில செயலாளர்கள் யூ.சி.ஆறுமுகம் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
    • கேசவன், அன்பு, பழனிவேல், மணி கண்டன், வினோத்குமார், சரளா, அமலா, சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு சார்பில் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மாநில செயலாளர்கள் யூ.சி.ஆறுமுகம் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

    நிகழ்ச்சியில் அவைத்தலை வர் அரி கிருஷ்ணன், இணை செயலாளர் லாவண்யா, மூத்த நிர்வாகி ரகுபதி, அணி செயலாளர்கள் தொழிற்சங்கம் சுரேஷ், நந்தகோபால், கலைவாணி, இளம்வழுதி, புஷ்பா, தொகுதி செயலாளர்கள் செந்தில் என்ற குமரவேல். தனவேலு, செல்ல என்ற தமிழ்செல்வன், ராமச்சந்திரன், முருகன், பரிதிமாற்கலைஞன், கலிய மூர்த்தி மற்றும் உழவர்கரை தொகுதி நிர்வாகி கள் லூர்து சாமி, சக்திவேல், சண்முகம், முத்துபாண்டி, கேசவன், அன்பு, பழனிவேல், மணி கண்டன், வினோத்குமார், சரளா, அமலா, சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு திருநாவுக்கரசர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செய்தார்
    • திருச்சி மாநகர் மாவட்டம் காங்கிரசார் ஏராளமானவர்கள் பங்கேற்பு

    திருச்சி,

    திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி ஜங்ஷன் ரெயில் நிலையம் எதிரில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பேட்டரிக் ராஜ்குமார், மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன்,மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ், சோபியா விமலா ராணி, பொருளாளர்கள் ராஜா நசீர், இளையராஜா,மாவட்டத் துணைத் தலைவர் பண்ணை கோபாலகிருஷ்ணன், கோட்டத் தலைவர்கள் ரவி, ஜோசப் ஜெரால்ட், பிரியங்கா பட்டேல், ஜ.என்.டி.யு.சி.மாவட்ட தலைவர் சரவணன்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் பூக்கடை பன்னீர்செல்வம், பட்டேல் சிவா, உறையூர் எத்திராஜ், அண்ணாசிலை விக்டர், செந்தமிழ் செல்வன், மலைக்கோட்டை சேகர், மணிவேல், உறந்தை செல்வம் மாவட்ட செயலாளர்கள் செவந்திலிங்கம், அனந்தபத்மநாதன், புத்தூர் அன்பழகன், பொன்னன், வக்கீல் விக்னேஷ்,முன்னாள் கோட்டத் தலைவர் ராஜ்மோகன், இளைஞர் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன், சேவாதள பிரிவு அப்துல் குத்தூஸ், ஜெகதீஸ்வரி சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜுபேர், பர்கத், பட்டதாரி அணி தலைவர் ரியாஸ்,மகளிர் அணி மாநகர மாவட்ட தலைவி ஷீலா செலஸ், சம்சுதீன், அமைப்பு சாரா தலைவர் முஸ்தபா, பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை, பழனியாண்டி, எஸ்சி பிரிவு தலைவர் பாக்யராஜ், சேகர்வார்டு தலைவர்கள் கண்ணன். பெல்ட் சரவணன், பாபு , சலீம்பாய், மணிவண்ணன், குங்கிங் செல்வம், லெட்சுமி அம்மாள் விஜய்பட்டேல், அல்லூர் பிரேம், தமிழ்மணி. ரவி, அய்யாகண்ணு, பொன்மலை பாலு, புத்தூர் மூர்த்தி, வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அல்லூர் எழிலரசன், சுப. கோவிந்தன்,அன்பில் ராஜேந்திரன், அர்ஜுன், பரணி, துவாக்குடி நகர தலைவர் ஆனந்தன், அந்தநல்லூர் வட்டார தலைவர் கனகராஜ், மணிகண்டம் வட்டார தலைவர் கருணாகரன், மணப்பாறை வடக்கு வட்டார தலைவர் சிவசண்முகம் மற்றும் ஆனந்த். குறத்தெரு விஸ்வநாதன், தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    • புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 138-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் மெர்சி ரம்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன்  டாக்டர் வை.முத்துராஜா எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜ்மோகன், கோட்டாட்சியர் முருகேசன், நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். 

    • திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20-ந் தேதி நடைபெற்று வருகிறது.
    • கவிஞர் ஆனந்த ராசன், தொழிலதிபர் பொற்செழியன், இளங்கோவன், ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20-ந் தேதி நடைபெற்று வருகிறது.

    அதுபோல் இந்த மாதம் நடந்த நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.

    நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து, செயலர் சீனு.மோகன்தாசு, துணைத் தலைவர் திருநாவுக்கரசு, பொருளாளர் அருள் செல்வம்,ஆட்சிக்குழு உறுப்பினர் தமிழ்மாமணி உசேன், ராஜா, என்ஜினீயர் சுரேசு குமார், சிவேந்திரன், கவிஞர் ஆனந்த ராசன், தொழிலதிபர் பொற்செழியன், இளங்கோவன், ஏகாம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • செந்தில் என்ற குமாரவேலு மற்றும் மூர்த்தி, மோகன், லூர்து சாமி, ழிபேர், உமா, சரளா, மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    காமராஜர் பிறந்தநாளையொட்டி புதுவை அ.ம.மு.க.சார்பில் அவரது சிலைக்கு தெற்கு மாநில செயலாளர் யூ.சி.ஆறுமுகம் மற்றும் வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், மாநில இணைச்செயலாளர் லாவண்யா, முத்தியால் பேட்டை பூக்கடை ராஜா, தொழிற்சங்கம் சுரேஷ், ஜெ.பேரவை காண்டீபன், எம்.ஜி.ஆர். மன்றம் சீத்தாராமன், இலக்கிய அணி செயலாளர் பாலு, சிறுபான்மை அணி செயலாளர் ஜான்சன், மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், மற்றும் தொகுதி செயலாளர்கள் தனவேல், செல்லா என்ற தமிழ்ச்செல்வன், பருதிமான் கலைஞர் கலியபெருமாள், ஏம்பலம் முருகன், ராமச்சந்திரன், செந்தில் என்ற குமாரவேலு மற்றும் மூர்த்தி, மோகன், லூர்து சாமி, ழிபேர், உமா, சரளா, மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திரை முழுநிலவு நாளையொட்டி கண்ணகி சிலைக்கு மரியாதை
    • தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு

    அரியலூர்,

    சித்திரை முழுநிலவு நாளையொட்டி அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரே திருச்சி சாலையிலுள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் தமிழ் வழிகல்வி இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சொல்லாய்வு அறிஞர் மா.சொ.விக்டர் தலைமையில், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு அமைப்புச் செயலர் நல்லப்பன், உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் சௌந்தராஜன், தமிழ்வழி கல்வி இயக்க புலவர் அரங்கநாடன், தமிழ்க் களம் இளவரசன், புகழேந்தி, பாரிவள்ளல், செல்லபாண்டியன், சகானா காமராஜ், சோபனா பன்னீர்செல்வம், வழக்குரைஞர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • மதுரை கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.
    • ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்து வழிபாடு நடந்தது.



    மதுரை

    மதுரையில் இன்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு 108 வடை மாலைகள் சார்த்தப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் கூடலழகர் பெருமாள் கோவில் அருகே தென்மாட வீதியில் உள்ள கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.

    இன்று கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடை, வெற்றிலை மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    இன்று இரவு ஆஞ்சநேயர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பூஜை ஏற்பாடுகளை கோவில் பட்டர் பாண்டுரங்கன் செய்திருந்தார்.

    தல்லாக்குளம், சிம்மக்கல், டி.எம்.கோர்ட்டு சந்திப்பு, திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

    • காரைக்குடியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு விழா நடந்தது.
    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காரைக்குடி

    அ.தி.மு.க.பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதில் மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திரா தேவி, நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், கவுன்சிலர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா, கனகவள்ளி, ராதா, ராம்குமார், நகர மகளிரணி செயலாளர் சுலோச்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை செயலாளர் பாலா, நிர்வாகிகள் திருஞானம், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமநாதன், தேவகோட்டை ரவிக்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், ரவி, மாவட்ட பிரதிநிதி மகேஷ், இளைஞர் பாசறை கண்ணதாசன், கணேசன், சதீஷ், ரேவதி, கல்லல் கவுன்சிலர் முருகேசன், பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×