search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்ணகி சிலைக்கு மாலை அணிவிப்பு
    X

    கண்ணகி சிலைக்கு மாலை அணிவிப்பு

    • சித்திரை முழுநிலவு நாளையொட்டி கண்ணகி சிலைக்கு மரியாதை
    • தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு

    அரியலூர்,

    சித்திரை முழுநிலவு நாளையொட்டி அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரே திருச்சி சாலையிலுள்ள கண்ணகி சிலைக்கு தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் தமிழ் வழிகல்வி இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சொல்லாய்வு அறிஞர் மா.சொ.விக்டர் தலைமையில், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு அமைப்புச் செயலர் நல்லப்பன், உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் சௌந்தராஜன், தமிழ்வழி கல்வி இயக்க புலவர் அரங்கநாடன், தமிழ்க் களம் இளவரசன், புகழேந்தி, பாரிவள்ளல், செல்லபாண்டியன், சகானா காமராஜ், சோபனா பன்னீர்செல்வம், வழக்குரைஞர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×