search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anniversary"

    • ஹெப்ரோன் பள்ளியில் 21-வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை தாளாளர் எபனேசர் பால்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹெப்ரோன் மேல்நிலைப்பள்ளியில் 21-வது ஆண்டு விழா நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சிமணியரசு, கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார், பள்ளியின் முன்னாள் மாணவர் அலெக்ஸ்ராய் ஜெயவெஸ்லி, டாக்டர் பில்லி ஜோசப், டாக்டர் திலீப் குமார், டாக்டர் லியா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் எபனேசர் பால்ராஜ், முதல்வர் விஜயா எபனேசர் மற்றும் அறங்காவலர்கள் சாமுவேல்ராஜ், ஜாய்ஸ் தேவநேசம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாவட்ட கல்வி அலுவலர் பேச்சு
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சி.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

    தலைமை ஆசிரியர் நம்பெருமாள், தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சந்திரசேகர், கீழ்பெண்ணாத்தூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வேல்முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் ஆசிரியர் பயிற்றுனர் தமிழ்நேசன், வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நளினி, கலந்து கொண்டு பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சிறு வயது முதலே நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து படிக்க நல்ல புத்தகங்கள் தான் மாணவர்களின் நல் வழிகாட்டி மேலும் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது, அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    தொலைக்காட்சி பார்ப்பது நிறுத்த வேண்டும். ஆகியவற்றை நிறுத்தி மாணவர்களுக்கு நல்வழி காட்ட பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

    படிப்பு தான் மாணவர்கள் எதிர்காலம் ஆகவே படிப்பில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஒரு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று பேசினார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்லிப்புத்தூர்

    ஸ்ரீவில்லிப்புத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. டிரஸ்டி டாக்டர் அக்சயா வரவேற்றார். பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த முதல்வர் முருகதாசன், முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற கவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் தொழிலதிபர் ராம்சிங்கும், விருந்தினராக ராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாமும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களை ஆங்கிலத்துறை ஆசிரியை இந்திரா ரபீந்திரன் அறிமுகம் செய்தார்.

    பள்ளி குழுமத்தலைவர் குமரேசன் விருந்தினர்களை கவுரவித்தார். சிறப்பு விருந்தினர்கள் பேசினர். முதல்வர் அனுசுயா ஆண்டறிக்கை வாசித்தார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி நன்றி கூறினார்.

    • ராஜபாளையம் அருகே ஸ்ரீராம் மழலையர் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே முறம்பில் உள்ள ஸ்ரீராம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளியின் 34-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் ராம்கோ சிமெண்ட் துணை மேலாளர் முத்துக்குமார், சத்யா வித்யாலயா பள்ளி குழுமங்களின் தாளாளர் குமரேசன், எல்.ஐ.சி. கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். டாக்டர் பிரியதர்ஷினி முத்துக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் கவுசல்யா வரவேற்று பேசினார்.

    விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல் மற்றும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. எல். கே.ஜி., யு.கே.ஜி. பயிலும் அரும்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைவரது மனதையும் கவர்ந்தது. முடிவில் சித்ராதேவி நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ராமராஜ், பெற்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • ராஜபாளையத்தில் சாலையோர சிறு வியாபாரிகள்-தொழிலாளர்கள் சங்க 13-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.
    • உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கத்தில் விருதுநகர் மாவட்ட சாலையோர சிறுவியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது.

    தமிழ்நாடு சாலையோர வியாபார தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மகேஷ்வரன் தலைமை தாங்கி பேசினார். தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். சங்க பொதுசெயலாளர் கணேசன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில், ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் திட்டங்களை ராஜபாளையம் நகராட்சிக்கு கொண்டு வந்து சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்து பேசினார். உணவு பாதுகாப்பு பற்றி உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார்.

    தமிழ் மாநில சிறு வணிகம் மற்றும் தள்ளுவண்டி சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுந்தர் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை சங்க பொதுசெயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 17-ம் ஆண்டு விழா மற்றும் உலக நுகர்வோர் தினவிழா நேற்று சேலம் அஸ்தம்பட்டி சண்முகா மருத்துவமனை கலையரங்கத்தில் நடந்தது.
    • நுகர்வோர் குரல் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    சேலம்:

    சேலம் நுகர்வோர் குரல் அமைப்பின் 17-ம் ஆண்டு விழா மற்றும் உலக நுகர்வோர் தினவிழா நேற்று சேலம் அஸ்தம்பட்டி சண்முகா மருத்துவமனை கலையரங்கத்தில் நடந்தது. நுகர்வோர் குரல் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

    ஜெய்ராம் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத், சேலம் வக்கீல்கள் சங்க செயலாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சண்முகா மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும். சேலம் முள்ளுவாடி கேட் மேம்பால பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக உணவு பாதுகாப்பு மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியி டப்பட்டது. நுகர்வோர் குரல் துணைச்செயலாளர் துரைராஜ், விழா வரவேற்பு குழு துணைத்தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் அழகிரி நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 23-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி செயலர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு நிறைவின் பொழுது தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகள் நலன் கருதியும், சுற்று வட்டார கிராமப்புற குழந்தைகளின் நலன் கருதியும் இந்தகல்லூரி உருவாக்கப்பட்டது.

    மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது வேலைவாய்ப்பை பெறுவதற்கான தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அலைபேசியில் நேரத்தை தேவையில்லாமல் செலவு செய்வதை விடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் பட்டப்படிப்பின் இறுதியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு, அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் முழுவதும் திரும்ப வழங்கப்படும் என்றார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசன் குழும தலைவருமான அசோகன் பேசுகையில், இன்றைய சூழலில் மாணவர்கள் படிப்புடன் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்துல்கலாம் கூறியது போல கனவு காண வேண்டும். அந்த கனவை நினைவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.

    தொழில் முனைவோராக உருவெடுத்து பலருக்கு வேலை வழங்கும் நிலைக்கு மாணவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் அந்த தோல்வியை உங்கள் வெற்றியின் படிக்கட்டாக மாற்றி வாழ்வில் முன்னேற வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் மாணவர்கள் மனஉறுதியை கைவிடாமல் பெற்றோரின் நலனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு நளினி அசோகன் பரிசு வழங்கினார். விழாவில் ஆங்கிலத்துறை, வணிகவியல் துறை, தமிழியல் துறை பேராசிரியர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    முன்னதாக துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். முடிவில் வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) துறைத்தலைவர் நளாயினி நன்றி கூறினார்.

    • பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.
    • மதியம் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், எருக்குவாய் கண்டிகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, எருக்குவாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கமலநாதன் தலைமை தாங்கினார். எருக்குவாய் கண்டிகை வார்டு உறுப்பினர் சி.தரணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் எம்.கம்சலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.கே. ரசூல்ராஜ் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினர்களாக கும்மிடிபூண்டி வட்டார கல்வி அலுவலர் டி.என்.முரளிதரன், கும்மிடிப்பூண்டி எஸ்.எஸ்.ஏ.மேற்பார்வையாளர் என்.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியை அமைப்பாளர் பி.எஸ்.நாகராஜன் சிறப்பாக தொகுத்து வழங்கினார், முடிவில், உதவி ஆசிரியர் பி.சதீஷ் நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள், தற்போது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.

    மதியம் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதன் பின்னர், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எருக்குவாய் கண்டிகை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி-புதிய பாரதம் தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • ராஜபாளையம் ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் 60-வது ஆண்டு விழா நடந்தது.
    • இதில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழில் நுட்பக் கல்லூரியின் 60-வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா தலைமை தாங்கினார். ராம்கோ கல்வி குழுமங்களின் முதன்மை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை முதல்வர் சீனிவாசன் சமர்பித்தார். மாணவர் தலைவர் நிர்தேவ் குமார் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும், மதுரை கோட்ட ரெயில்வே மூத்த முதுநிலை பொறியாளருமான வில்லியம் ஜாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள திருப்பாலைக்குடி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 87-வது ஆண்டு விழா கிராமத்தலைவர் தமிழ்கண்ணன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார வள மைய அலுவலர் சுரேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜூ வரவேற்றார். யூனியன் தலைவர் ராதிகாபிரபு, பேரூராட்சி தலைவர் மவுசூர்யா கேசர்ஹான், ரோட்டரி கிளப் மாவட்டத்தலைவர் பார்த்திபன், செயலாளர் கூரிதாஸ், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி ஆகியோர் பேசினர்.

    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.ஒன்றிய கவுன்சிலர் காளியம்மாள், கிராமச்செயலாளர் அதிரை மன்னன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தலைவர் சசி கனி,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி, ஆலோசனைக்குழு தலைவர் சின்னராஜா, முன்னாள் மாணவர் சங்கம் பால்கனி, உதயவேல் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அன்பின் அமலன் நன்றி கூறினார்.

    • பள்ளியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், பெரியமோட்டூர் ஊராட்சி, பூனைக்குட்டிபள்ளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் உயர்நிலைப்பள்ளி தரமாக உயர்த்தப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் பெங்களூர் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் பள்ளியின் அருகே உள்ள ஒரு ஏக்கர் சொந்த நிலத்தை உயர்நிலைப்பள்ளி கட்டிடம் அமைக்க இலவசமாக கொடுப்பதற்கு முன் வந்தார்.

    இதனை அடுத்து பள்ளியின் 25-ம் ஆண்டு விழா மற்றும் பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். அமுதா தலைமை தாங்கினார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அ. சுப்பிரமணி வரவேற்றார். பெரிய மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் என். கமலநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எம் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ் சத்யா சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் அமைக்க ஒரு ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு இலவசமாக கொடுத்த வடிவேலை அனைவரும் பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்தனர்.

    இறுதியில் பள்ளியின் ஆசிரியை ஜி. ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

    • முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 43-வது ஆண்டு விழா கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் சேக்தாவூது ஆண்டறிக்கை வாசித்தார். விழாவையொட்டி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    சாதனை படைத்த முதல், 2-ம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு சென்னை கே.வி.எஸ். தொழிற்சாலை நிர்வாக இயக்குநரும், தொழில் அதிபரும், முன்னாள் மாணவருமான வெற்றிசெழியன் பரிசு வழங்கினார். கல்லுாரி முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்று பேசினார். எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

    கல்லூரி துணை முதல்வர் சேக் தாவூது, அமைப்பியல் துறை தலைவர் (பொறுப்பு) செந்தில்ராஜன், எந்திரவியல் துறைத்தலைவர் டாக்டர் கணேஷ்குமார், மெரைன் துறை தலைவர் (பொறுப்பு) சுதேவ், மின்னியல் துறை தலைவர் (பொறுப்பு) நாகராஜன், கணினி துறை தலைவர் (பொறுப்பு) நாகராஜன் மற்றும் முதலாம் ஆண்டு துறை தலைவர் (பொறுப்பு) உமையாள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில் அனைத்து துறை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×