search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரம்"

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
    • வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் பகுதிகளில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

    இந்த வாரச்சந்தைக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    சாதாரண நாட்களில் நடைபெறும் வாரச்சந்தையில் ரூ.2 கோடி ரூபாய்க்கும், பண்டிகை காலங்களில் நடைபெறும் ரூ.5 கோடி ரூபாய் வரையிலும் வர்த்தகம் நடைபெறும். வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததால் ரூ.50 ஆயிரம் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று இரவு கூடிய வார ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

    தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வெளி மாநில வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இன்று வார ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இதற்கு அஞ்சி வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக சிறு குறு வியாபாரிகள் ரொக்க பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து வருவதில் சிரமம் உள்ளதால், இரவு நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

    இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், சில்லரை வர்த்தகம் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவித்த வியாபாரிகள். இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்றும், வியாபாரிகளுக்கு தேர்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த 20நாட்களாக மார்கெட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் மார்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • வரக்கூடிய நாட்களில் மெல்ல மெல்ல பூ விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    போரூர்:

    கோயம்பேடு, பூ மார்கெட்டுக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 60-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் முகூர்த்தம், விஷேச நாட்கள், திருவிழாக்கள் ஏதும் இல்லை. இதனால் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது மேலும் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் தினசரி 20முதல்30டன் அளவிலான சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகி குப்பையில் கொட்டப்படுகிறது இதனால் பூ வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறியதாவது:

    புரட்டாசி தொடங்கியது முதலே கடந்த 20நாட்களாக மார்கெட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் மார்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் பூக்கள் தேவை குறைந்து உள்ள நிலையில் கோயம்பேடு சந்தைக்கு வரும் பூக்கள் வரத்து வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அதை வாங்கி செல்ல வியாபாரிகள் யாரும் வரவில்லை.

    இதனால் அதிகளவிலான பூக்கள் தேக்கமடைந்து குப்பையில் வீசபடுகிறது. வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அமாவாசை மறுநாள் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது அதன்பிறகு ஆயுதபூஜை வர உள்ளது. எனவே வரக்கூடிய நாட்களில் மெல்ல மெல்ல பூ விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
    • மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது

    திருப்பூர்

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து முறையிட்டனர்.

    மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பொங்கலூர் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் நிதிக்கான ரூ.10 லட்சம் காசோலையை கலெக்டர் வழங்கினார்.

    • பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது.
    • வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

     திருப்பூர்:

    திருப்பூரை தேடி வரும் வெளி மாநிலத்தினர், வெளி மாவட்ட மக்கள் பனியன் ஆடை வாங்க வேண்டும் என்றாலே காதர்பேட்டை நம்பிக்கையான இடமாகத் தெரிகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் வர்த்தகம் செய்யும் விற்பனையாளர் என 1,500 கடைகள் மூலம் இங்கு மொத்த வர்த்தகம் நடைபெறுகிறது. அதே சமயம் சில்லரை விற்பனையாளர் குறைவு. ரோட்டோரம் இருந்த வியாபாரிகள் ஒருங்கிணைந்து பனியன் பஜார் அமைத்து, சில்லரை வியாபாரம் செய்து வந்தனர். அங்கு நடந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாயின. மீண்டும் ஒருங்கிணைந்த பனியன் பஜார் உருவாகுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

    பனியன் வியாபாரிகளின் கோரிக்கைப்படி நிரந்தரமான கடை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.இதன் எதிரொலியாக குறு, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பனியன் வர்த்தகத்தை வளர்க்கவும் வசதியாக மாநகராட்சி நிர்வாகம் அதற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளது. பனியன் விற்பனை கடைகள், ெரயில் நிலையம் அருகாமையில் இருந்தால் மட்டுமே வெளி மாவட்ட மக்களும், வியாபாரிகளும் கொள்முதல் செய்ய வசதியாக இருக்கும்.

    பனியன் வியாபாரிகளின் 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறும் வகையில் காதர்பேட்டை பகுதியில் நிரந்தர கடைகள் அமைக்க உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடைகளை இழந்து நிர்கதியாய் நிற்கும் வியாபாரிகளுக்கு, தற்காலிகமாக கடைகளை அமைத்து கொடுக்கும் பணியும் வரும் வாரங்களில் துவங்குமென நம்பிக்கை பிறந்துள்ளது.

    மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து பார்க்கிங் வசதியுடன் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, வியாபாரிகள் பனியன் வியாபாரத்தை துவக்க வசதியாக, தற்காலிக கடைகள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. போக்குவரத்து குறைவான, அகலமான ரோட்டின் ஒரு பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

    • ராஜபாளையத்தில் சாலையோர சிறு வியாபாரிகள்-தொழிலாளர்கள் சங்க 13-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.
    • உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கத்தில் விருதுநகர் மாவட்ட சாலையோர சிறுவியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது.

    தமிழ்நாடு சாலையோர வியாபார தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மகேஷ்வரன் தலைமை தாங்கி பேசினார். தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். சங்க பொதுசெயலாளர் கணேசன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில், ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் திட்டங்களை ராஜபாளையம் நகராட்சிக்கு கொண்டு வந்து சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்து பேசினார். உணவு பாதுகாப்பு பற்றி உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார்.

    தமிழ் மாநில சிறு வணிகம் மற்றும் தள்ளுவண்டி சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுந்தர் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை சங்க பொதுசெயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, அந்த ரப்பட்டி, கணக்கம்பட்டி, தேசியமங்கலம் ஆகிய இடங்களில் விவசாயிகள் விளை நிலங்களில் பரவலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போது மாசி மாதம் அறுவடை சீசன் துவங்கப் பட்டுள்ளது. மேலும், கிழங்கு செடிகளில் வளர்ச்சி அடைந்ததால் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேவை என்பதால் விவசாயிகள் அறுவடை செய்து உள்ளூர் காய்கறிகள் விற்கும் கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாயிகள் மகசூல் செய்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    • மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து அவற்றின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
    • மேய்ச்சலுக்கு நிலம் ஒதுக்கி தர வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாநக ராட்சி பகுதிகளில் பொதும க்களுக்கு இடையூறா கவும், போக்குவரத்து இடையூ றாகவும் சாலை களில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அபாரதம் விதிக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கும் பணி தொடங்கியது.

    பிடிப்படும் மாடுகள் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டன. அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்திய பிறகு மாடுகள் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாடுகள் பிடித்து அபராதம் விதிக்க ப்படுவதால் பாதிக்க ப்படுகிறோம் எனக் கூறி இன்று 40-க்கும் மேற்பட்ட மாடுகளுடன் அவற்றின் உரிமையாளர்கள் தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு அண்ணா சிலை அருகே திரண்டனர்.

    பின்னர் அங்கு மாடுகளுடன் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம், தஞ்சை மாநகராட்சியில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன.

    நாங்கள் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து அவற்றின் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது சுற்றி திரியும் மாடுகள் பிடித்து அபராதம் விதிக்கப்படுவதால் எங்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளது.

    பகல் நேரங்களில் மேய்ச்சலுக்காக சாலை களில் கால்நடையாக செல்லும் மாடுகளை பிடிக்கக் கூடாது.

    இரவு நேரங்களில் சுற்றி திரியும் மாடுகளை வேண்டுமானால் பிடிக்கலாம்.

    அந்த காலத்தில் மேய்ச்சலுக்காக தரிசில் இருந்தது.

    தற்போது அவை கிடையாது. எனவே மேய்ச்சலுக்கு நிலம் ஒதுக்கி தர வேண்டும். தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று மாடுகள் வளர்ப்போர் கூறினர்.

    இதையடுத்து உங்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுங்கள். தற்போது கலைந்து செல்லுங்கள் என போலீசார் எடுத்துக் கூறினர்.

    இதனை ஏற்றுக் கொண்டு உரிமையாளர்கள் தங்களது மாடுகளை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

    இந்த திடீர் போராட்ட த்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • சிறிய கடை வைத்திருப்பவர்களில் சிலர் வெளியே கொட்டி வைத்து வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது.
    • வெளியே காய்கறி வியாபாரம் செய்வதால் பொதுமக்களுக்கு இடையூறு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்டப்பட்டது.

    ரூ.20.26 கோடி செலவில் 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன.

    கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.

    நேற்று முன்தினம் முதல் கடைகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தன. தொடர்ந்து காய்கறி வியாபாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மார்க்கெட்டில் சிறிய கடை வைத்திருப்பவர்களில் சிலர் காய்கறிகளை கடைக்குள் வைத்து வியாபாரம் செய்யாமல் வெளியே கொட்டி வைத்து வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது.

    இதனால் மற்ற பெரிய கடைகளில் வியாபாரம் செய்பவர்கள், தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுபோல் வெளியே காய்கறி வியாபாரம் செய்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

    எனவே இதுபோன்ற செயல்களில் சிறிய கடை வியாபாரிகள் சிலர் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.

    இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பூக்கட்டி தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    • பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதே மார்க்கெட்டில் கடை நடத்த அழைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தஞ்சை பூச்சந்தை பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பூக்கார தெருவில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான பூ மார்க்கெட் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த மார்க்கெட்டில் சுமார் 60 கடைகளும், மார்க்கெட்டின் வெளியே 70 மாலைக் கடைகளும் செயல்பாட்டில் உள்ளது.

    500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பூக்கட்டி தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சில வியாபாரிகள் சில காரணங்களால் வெளியே சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இவர்களை திரும்பவும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதே மார்க்கெட்டில் கடை நடத்த அழைக்க வேண்டும்.

    மேலும் வியாபாரிகளுக்குள் நல்ல இணக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும்.

    அதையும் மீறி வெளியில் சென்ற வியாபாரிகள் வராத பட்சத்தில் பூச்சந்தையை நம்பி உள்ள குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே பூச்சந்தையை நம்பி உள்ள குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனா ஊரடங்கால் கடைகள் வியாபாரம் இன்றி பூட்டப்பட்டிருந்தது.
    • கால அவகாசம் கேட்டபோது அவகாசம் இன்றி கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் உள்ளது.

    இதில் கடந்த சில வாரத்துக்கு முன்பு 12 கடைகளுக்கு வாடகை நிலுவை இருப்பதாக நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    இந்நிலையில் சீர்காழி பழைய பஸ் நிலைய நகராட்சி வர்த்தக சங்கத்தின் சார்பில் கால அவகாசம் இல்லாமல் கடைகளுக்கு சீல் வைத்ததை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சீர்காழி பழைய பஸ் நிலையம், காமராஜர் வீதி ஆகிய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகளை வர்த்தகர்கள் பூட்டி கடையடைப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது குறித்து பழைய பஸ் நிலைய வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கொரோனோ காலக ட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உத்தரவால் கடைகள் வியாபாரம் இன்றி பூட்டப்பட்டிருந்தது.

    இதனால் கடைகளுக்கு வாடகை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    இது குறித்துநகராட்சி நிர்வாகத்திடம் கால அவகாசம் கேட்டபோது இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு மாதத்திற்கு மட்டு மே வாடகை விலக்கு அளித்தனர்.

    மீதமுள்ள வாடகை தொகையை மொத்தமாக கால அவகசம் இன்றி கட்ட கூறியதால் தங்களால் கட்ட இயலவில்லை.அதற்கு கால அவகாசம் கேட்டபோது அவகாசம் இன்றி கடைகளுக்கு சீல் வைத்தனர் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    • செவ்வாய்பேட்டை போலீசார் குகை ஆற்றோரும் வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • அப்போது அந்த வீட்டில் இருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் டவுன் உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் உதவி கமிஷன் வெங்கடேசன் மற்றும் செவ்வாய்பேட்டை போலீசார் குகை ஆற்றோரும் வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வீட்டில் இருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அங்கு வசித்து வந்த லோகேஸ்வரன் (வயது 32) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (27) ஆகியோரை கைது செய்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விசைத்தறி, பனியன், கோழி வளர்ப்பு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. இந்த நிலையில், வருடம் தோறும் தீபாவளி பண்டிகை யை முன்னிட்டு சுமார் ஒரு வார காலத்திற்கு பல்லடத்தின் ஒரே கடைவீதியான என்.ஜி. ஆர். ரோடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், நகைகள் என வாங்குவதற்கு மக்கள் ஆர்வமுடன் கடைவீதியில் கூடுவார்கள். வியாபாரிகளும் தங்களது கடைகள் முன்பு அலங்கார பந்தல்கள் அமைத்து, பொது மக்களை கவரும் வண்ணம் புதிய ஆடைகளை பார்வைக்கு வைத்து வியாபாரம் செய்வார்கள்.

    இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. விசைத்தறி தொழில், பனியன் தொழில்கள் முடங்கிப் போய் உள்ளதாக பேச்சு நிலவுகிறது. கடந்த 2 நாட்களாக திடீர் என மழை பெய்வதால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்னும் பல நிறுவனங்களில் போனஸ் வழங்கப்படவில்லை. எனவே கடைசி நேர விற்பனையை எதிர்பார்த்து பல்லடம் வியாபாரிகள் காத்திருக்கின்றனர்.

    ×