என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காளீஸ்வரி கல்லூரி ஆண்டு விழா
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
- மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 23-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி செயலர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு நிறைவின் பொழுது தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகள் நலன் கருதியும், சுற்று வட்டார கிராமப்புற குழந்தைகளின் நலன் கருதியும் இந்தகல்லூரி உருவாக்கப்பட்டது.
மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது வேலைவாய்ப்பை பெறுவதற்கான தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அலைபேசியில் நேரத்தை தேவையில்லாமல் செலவு செய்வதை விடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் பட்டப்படிப்பின் இறுதியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு, அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் முழுவதும் திரும்ப வழங்கப்படும் என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசன் குழும தலைவருமான அசோகன் பேசுகையில், இன்றைய சூழலில் மாணவர்கள் படிப்புடன் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்துல்கலாம் கூறியது போல கனவு காண வேண்டும். அந்த கனவை நினைவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
தொழில் முனைவோராக உருவெடுத்து பலருக்கு வேலை வழங்கும் நிலைக்கு மாணவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் அந்த தோல்வியை உங்கள் வெற்றியின் படிக்கட்டாக மாற்றி வாழ்வில் முன்னேற வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் மாணவர்கள் மனஉறுதியை கைவிடாமல் பெற்றோரின் நலனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு நளினி அசோகன் பரிசு வழங்கினார். விழாவில் ஆங்கிலத்துறை, வணிகவியல் துறை, தமிழியல் துறை பேராசிரியர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
முன்னதாக துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். முடிவில் வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) துறைத்தலைவர் நளாயினி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்