என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எருக்குவாய் கண்டிகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா: வட்டார கல்வி அலுவலர் முரளிதரன் பங்கேற்பு
- பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது.
- மதியம் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், எருக்குவாய் கண்டிகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, எருக்குவாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கமலநாதன் தலைமை தாங்கினார். எருக்குவாய் கண்டிகை வார்டு உறுப்பினர் சி.தரணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் எம்.கம்சலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.கே. ரசூல்ராஜ் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினர்களாக கும்மிடிபூண்டி வட்டார கல்வி அலுவலர் டி.என்.முரளிதரன், கும்மிடிப்பூண்டி எஸ்.எஸ்.ஏ.மேற்பார்வையாளர் என்.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியை அமைப்பாளர் பி.எஸ்.நாகராஜன் சிறப்பாக தொகுத்து வழங்கினார், முடிவில், உதவி ஆசிரியர் பி.சதீஷ் நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள், தற்போது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.
மதியம் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதன் பின்னர், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எருக்குவாய் கண்டிகை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி-புதிய பாரதம் தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்