search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டு விழா"

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வழங்கினார்
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் 102-வது ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவுக்கு கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபரான பங்கு தந்தையும், பள்ளி தாளாளருமான உபால்டு தலைமை தாங்கினார். விழாவில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் முன்னாள் விஞ்ஞானியும், இணை இயக்குனருமான குமார், பள்ளி தலைமை ஆசிரியை பிரசன்னா, உதவி தலைமை ஆசிரியர் ஜாண் சுகிலன், முன்னாள் தலைமை ஆசிரியர் டாக்டர் ரெம்ஜியூஸ் பரதராஜ், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் கடந்த கல்வியாண்டில் அதிக தேர்ச்சி சதவீதம் காட்டிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை உதவி தலைமை ஆசிரியர் சாந்தா ஜெயராணி விஜயா, இடைநிலை ஆசிரியர் டீபர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் ஆசிரியர் அஜாஸ் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள்
    • ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனை கள் செய்துள்ளனர்

    நாகர்கோவில், நவ. 22-

    டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை 58-வது ஆண்டுவிழா கொண்டா டப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர்கள் தேவ பிரசாத் ஜெயசேகரன், சாபு சேகரன், ரெஞ்சித் ஜெய சேகரன் தெரிவித்த தாவது:- மருத்துவமனையில் விபத்து காப்பு பிரிவு, இரு தயப்பிரிவு, மகளிர் நலம் மற்றும் மக ப்பேறு பிரிவு, உடல் எடை குறைக்கும் பிரிவு, சர்க்கரை நோயா ளிகள் பிரிவு, செயற்கை கருத்தரித்தல் பிரிவு, பிசியோ தெரபி பிரிவு, சிறுநீரக பிரிவு என எண்ணற்ற பிரிவுகள் குமரி மாவட்டம் மற்றும் இல்லாமல் அண்டை மாவ ட்டம், மாநில மக்களும் பயன் பெறுகின்ற னர்.சமீபகாலமாக 24 மணி நேரமும் இயங்கும் இருதய பிரிவில் தலை சிறந்த இதய நோய் மருத்துவ நிபுணர்கள், ஓபன் ஹார்ட் சர்ஜரி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு மருத்துவ சாதனைகள் செய்துள்ளனர் என அவ ர்கள் தெரிவித்தனர். விழா வில் சிறப்பு விருந்தி னராக முன்னாள் இந்திய தபால் துறை ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர், கவுரவ சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்நாடு காவ ல்துறை தலைவர் சைலே ந்திர பாபு, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஆசீர் பாக்கிய் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். 20 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக பணி புரிந்துவரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சில துறைகள் புதிதாக திறக்கப்பட்டது மற்றும் சில துறைகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. மருத்துவர்கள் நினோ ஜார்ஜ், பாலா வித்யா சாகர், திரவியம் மோகன், சந்திர சேகர் இம்மானு வேல், தீபக் டேவிட், கீதா ஆகியோர் அவரவர் துறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

    • நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா தலைமை தாங்கினார்.
    • மாணவ - மாணவிகளின் பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மார்த்தாண்டம் :

    வில்லுண்ணிக்கோணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 44-வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி சிவகலா முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் சேம் பிரின்ஸ் குமார் அனைவரையும் வரவேற்றார். திருவட்டார் யூனியன் சேர்மன் ஜெகநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுனு, முன்னாள் மாணவர் சோழராஜன் ஆகியோர் பேசினர். மாவட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.சிந்து குமார் பரிசு வழங்கினார்.தமிழ் ஆசிரியர் சிவகாமி நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியை லிஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ - மாணவிகளின் பல்சுவை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • தர்மபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் கணேசன் பரிசுகள் வழங்கினார்
    • மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    என். ஜி. ஓ. காலனி, நவ.15-

    ஈத்தாமொழி பாரதி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 50-வது ஆண்டு தீபாவளி தின விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியில் பா.ஜ.க. முன்னாள் குமரி மாவட்ட தலைவரும், தர்மபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான டாக்டர் கணேசன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊர் தலைவர் சுப்பையன், செயலாளர் சிதம்பரதாணு, பொருளாளர் வேலு, துணைத் தலைவர் ஆறுமுகம், இணைச்செயலாளர் வி.டி.ராஜா, பாரதி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் வசந்த், செயலாளர் ஹரிபிரசாத், பொருளாளர் ஜெகன், மன்ற ஆலோசகர் ராஜா, மற்றும் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
    • விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மணவாளக்குறிச்சி :

    கூட்டுமங்கலம் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தாளாளர் ரெஜீஷ் கிருஷ்ணன் மற்றும் முதல்வர் தங்கசுவாமி முன்னிலை வகித்தனர்.

    நாகர்கோவில் அய்யப்பா மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் அஞ்சனா, ஏ.டி.எஸ்.பி.க்கள் சகாயஜோஸ், மதியழகன், டி.எஸ்.பி. நாராயணன், தனியார் பள்ளி டி.இ.ஒ. முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். பெங்களூரூ தனியார் நிறுவன டைரக்டர் அஷ்வின் ராம்நாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பத்மஸ்ரீ, ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் பொன்னுலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூவலிங்கம், துணை தலைவர் கிரி, சட்ட ஆலோசகர் பிரேம்ஜித் கவுதம், அஜய்குமார், சாய்கு மார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நடந்தது
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்

    நாகர்கோவில் ;

    சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் கவின் நுண்கலை மன்ற ஆண்டு விழா நடைபெற்றது. குழித்துறை கத்தோலிக்க மறை மாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பேராசிரியை சிமிமோள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாரதி கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தமிழ்மொழி சிறப்பு குறித்தும், அனைவருக்கும் படிப்பு முதன்மையாக இருக்கவேண்டும் என்றும் எடுத்து கூறினார். கல்லூரியின் முன்னாள் மாணவரும் மலையாள திரைநட்சத்திரமுமான நலீப் ஜீயோ விழாவில் கலந்துகொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் கல்லூரி தாளாளர் மரியவில்லியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கலைபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள். விழாவில் கவின் நுண்கலை மன்ற மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பேராசிரியர் ெஜய சுரேண்ராஜ் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மரியவில்லியம், முதல்வர் மகேஸ்வரன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

    • குலுக்கலில் பெண்ணுக்கு முதல் பரிசு ஸ்கூட்டர்
    • கடந்த 25-ந் தேதி இரவு 7 மணி வரையிலும் கூப்பன் வழங்கப்பட்டது.

    திருவட்டார் :

    குலசேகரம் பகுதியில் உள்ள பாரம்பரியம் மிக்க நகைகடை ராஜா ஜூவல் லர்ஸ். 4 தலைமுறை கண்ட இந்த நிறுவனம் தனது 74- ம் ஆண்டில் கால்பதித்துள்ளது. இதனை முன்னிட்டு இந்நிறுவ னம் தனது வாடிக்கையா ளர்களுக்கு குலுக்கல் பரிசு திட்டம் அறிவித்தது.

    அதன் படி கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி முதல் நகை வாங்கிய வாடிக்கையா ளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 25-ந் தேதி இரவு 7 மணி வரையிலும் கூப்பன் வழங்கப்பட்டது.

    இதற்கான பரிசு குலுக்கல் குலசேகரம் ராஜா ஹேசலில் உள்ள ராஜா பெங்கட் ஹாலில் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முதல் பரிசு யமஹா ஸ்கூட்டி பேச்சிப்பாறை, கடம்ப மூடு பகுதியை சேர்ந்த பாப்பா என்பவருக்கு கிடைத் தது. 2-ம் பரிசு 5 பேருக்கு தங்க மோதிரம் வழங்கப் பட்டது. இதனை ஆண்டிஏலா விஜயகுமார், திருவரம்பு சுனிதா ராணி, பேச்சிப்பாறை தன்யா, குளச்சவிளாகம் சுரேஷ், தச்சூர் ஸ்டெல்லா ஆகியோர் பெற்றனர். 3-ம் பரிசு வைர மோதிரம். தேம்பாற அடி பகுதியை சேர்ந்த சுஜா என்பவருக்கும், 4-ம் பரிசாக 10 பேருக்கு தங்க நாணயங்களும் வழங்கப் பட்டது. மேலும் 100 பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப் பட்டது. பரிசு குலுக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ராஜா ஜுவல்லர்ஸ் மற்றும் ராஜா குழுமத்தின் உரிமையா ளர் தொழிலதிபர் ராஜகோ பால், இயக்குனர்கள் சார் லெட் பென்னி, டாக்டர் அருண், பொறியாளர் கிரன், சோனி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழா பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
    • அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் அ.தி.மு.க. வின் 52-வது ஆண்டு விழா கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும், மதுரை கிழக்கு மாவட்ட செயலா ளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் 16 நாள் மண்டபத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் பாண்டுரங்கன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், இளைஞர் அணி வேல்ராஜ், வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், பாலமுருகன், எம்.ஆர்.குமார், முத்து கிருஷ்ணன், நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 32-வது ஆண்டு விழா கல்லூரி வெள்ளி விழா கலையரங்க த்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
    • படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம், காவல்கிணறு சந்திப்பில் உள்ள ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரியின் 32-வது ஆண்டு விழா கல்லூரி வெள்ளி விழா கலையரங்க த்தில் 3 நாட்கள் நடைபெ ற்றது. விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் சிறப்புகளை பற்றி பாராட்டியதோடு, கல்லூரி நிறுவனர் டாக்டர் ராஜா தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மாணவ-மாணவிகளிடையே கல்விப்பணியை ஆற்றி ஒரு கல்விப்புரட்சியை ஏற்படுத்தினார் என்று குறிப்பிட்டார். மேலும் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    விழாவில் ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வி ஞ்ஞானி டாக்டர் மஞ்சு கலந்துகொண்டு மாணவ-மாணவிகள் ஆராய்ச்சித்து றையில் மேற்படிப்பினை தொடர வேண்டும் அறிவுறு த்தினார்.

    விழாவில் ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஜேக்கப் ராஜா தலைமை உரையாற்றினார். நிர்வாக இயக்குனர் சபீனா ஜேக்கப் சிறப்புரை யாற்றி னார். கல்லூரி இயக்குனர் டாக்டர் பாக்கியராஜ், கல்லூரி முதல்வர் டாக்டர் அலெக்ஸ் மேத்யூ முருப்பல் மற்றும் துணை மற்றும் உதவி முதல்வர்கள், பேராசி ரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். கடந்த 30-ந்தேதி நடை பெற்ற கல்லூரி விழாவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், டி.வி. புகழ், டாக்டர் ஸ்ரீதர் சேனாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • திருக்குறள் பேரவை 9-ம் ஆண்டு விழா நடந்தது.
    • சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை 9-ம் ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.

    பேரவையின் பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    செயலாளர் நல்லாசிரியர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.

    விழா தொடக்கத்தில் துறை சந்தானலெட்சுமி தமிழ் தாய் வாழ்த்தும், வழக்கறிஞர் கிருட்டிணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

    காரைக்கால் அரசு மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர் வண்டார்குழலி தொடக்க உரையாற்றினார்.

    வஃக்பு வாரிய தலைவரும், முன்னாள் எம்.பி.யும்மான அப்துல் ரகுமான் மகிழ்உரையும், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத்கஸ்பர் நிறைவு பேருரையாற்றினார்.

    அப்போது திருக்குறளை படித்து அதன்படி நடந்து கொண்டால் உலகத்தில் உள்ள அனைத்தையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.

    திருக்குறளின் பெருமைகளை புகழ்ந்து பேசினர்.

    பின்னர் உலக திருக்குறள் இயக்கம் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    பள்ளியில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் சங்கத் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ், பேரவை துணைத் தலைவர் செல்லத்துரை, தேசிய நல்லாசிரியர் மனோகரன், கொள்கை விளக்க செயலாளர்கள் குரளன்பன், ராமலிங்கம், உள்ளீட்ட ஏராளமான தமிழ் பற்றாளர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் முத்துக்கன்னியன் நன்றி கூறினார்.

    • உபகரணங்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி அடுத்த பையூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சாலை பணியாளர் சங்கத்தின் 24-ம் ஆண்டு விழா செய்யாறு கோட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் சங்கத் தலைவர் மனோகரன் பங்கேற்று சாலை பணியாளர் சங்க கொடியை ஏற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

    மேலும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    இதில் அரசு ஊழியர்கள் வட்ட தலைவர் பாஸ்கரன்,வட்டக் கிளைச் செயலாளர் பரசுராமன்,ஓய்வூதிய சங்க தலைவர் அமர்தலிங்கம் மற்றும் கோட்டை நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    இறுதியில் சாலை பணியாளர் சங்க நிர்வாகி எழிலன் நன்றி கூறினார்.

    • 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசு
    • சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவை நினைவு கூறும் உலக சகோதரத்துவ தினவிழா

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் மற்றும் விவேகானந்த கேந்திர வித்யாலயா சார்பில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த 53-வது ஆண்டு விழா, 1893-ம் ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற சர்வ தர்ம சபையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவை நினைவு கூறும் உலக சகோதரத்துவ தினவிழா ஆகிய இருபெரும்விழா விவேகானந்தபுரம் விவேகானந்தகேந்திர வளாகத்தில் நடந்தது. கேந்திர உதவித்தலைவர் அனுமந்த ராவ் தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் சரிகா வரவேற்றுப் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகானந்த கேந்திராவில்10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேலும் கேந்திர வித்யாலயா பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் விவேகானந்தர் கேந்திர வித்யாலயா பள்ளி உதவி முதல்வர் சஞ்சீவி ராஜன் நன்றி கூறினார். பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது

    ×