search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெய்  சாரதா கல்வி குழுமத்தில்  29 - வது பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்
    X

    மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற காட்சி.

    ஜெய் சாரதா கல்வி குழுமத்தில் 29 - வது பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்

    • சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • ஆசிரியர்களுக்கு லாயல்டி விருதும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர் .

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் வரவேற்று பேசினார். பள்ளியின் முதல்வர் ஏ.எஸ் மணிமலர் ஆண்டறிக்கை வாசித்தார் . பள்ளியின் பொருளாளர் சுருதி கலந்து கொண்டு உரையாற்றினார். திருப்பூர் மாவட்ட சிறந்த மருத்துவருக்கான விருதினை பெற்றவரும் ஆதார் மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .பள்ளியில் பயின்ற மாணவர்களில் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சென்ற இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மாநில, மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் குறு மையம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும், பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களில் அனுபவம் நிறைந்த மூத்த ஆசிரியர்களுக்கு லாயல்டி விருதும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர் . பின்னர் மழலையர் பிரிவு முதல் மேல்நிலை பிரிவு வரை உள்ள மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நிகழ்வின் இடையிலும் திருமாலின் பத்து அவதாரமாக விளங்கும் தசாவதாரம் நிகழ்த்தப்பட்டது. கலை நிகழ்ச்சியின் மையமாக விளங்கிய நாட்டிய நாடகம் முதலிய பல நிகழ்ச்சிகள் காண்பவரை வியப்பில் ஆழ்த்தியது. முடிவில் பள்ளியின் துணை முதல்வர் நன்றி கூறினார்.

    Next Story
    ×