search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி ஆண்டு விழா
    X

    அரசு பள்ளி ஆண்டு விழா

    • அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள க.பெருமாள் பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 1972 ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா கள்ளர் சீரமைப்பு துறை கல்வி அலுவலர் ஜவகர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம், ஒன்றிய கவுன்சிலர் செல்வ பாண்டி, மாவட்ட கவுன்சிலர் ரெட் காசிமாயன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சரவண குமார் வரவேற்றார்.ஆண்டுவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.முன்னாள் மாணவர்கள் பிருத்வி, மலைச்சாமி, பிரகாஷ் ஆகியோர் நூலகத்திற்கு தேவையான பொருட்க பொருட்களை வழங்கினர்.

    உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கணேசன் விழாவை தொகுத்து வழங்கினர். முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×