search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amman Temples"

    • அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் நடைபெற்றது

    கரூர்

    புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது

    • மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
    • கேழ்வரகு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில் அன்னதானமும், கேழ்வரகு கூழ் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார்நகர் முத்துமாரியம்மன் கோவில், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் உட்பட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

    அனைத்து அம்மன் கோவில்களும் வேப்பிலை தோரணம், வாழை கம்பங்கள், பூமாலை அலங்காரத்துடன், விழாக்கோலம் பூண்டிருந்தன. பல்லடம், ஸ்ரீ பொங்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வழிபாடுகள் நடந்தன. திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஓம் சக்தி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.

    மஞ்சள் காப்பு அலங்காரத்தில் திருப்பூர் போலீஸ் லைன் மாரியம்மன். வனபத்ரகாளியம்மன் அலங்காரத்தில் வாலிபாளையம் ஸ்ரீமாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 

    • அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம், மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பல்லடம் வட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதன்படி, பல்லடம் வடுகபாளையம் மாகாளியம்மன் கோவிலில், தாமரைப் பூக்களால் மாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், கரடிவாவி மாரியம்மன் கோவில், பல்லடம் அங்காளம்மன் கோவில், ராசாகவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவில், மற்றும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

    ஈரோடு:

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்ப ட்டது. கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதேபோல், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி 2-ம் வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலையிலே நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானி கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கோபிசெட்டிபாளையம் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

    சாரதா மாரியம்மன் கோவில், அந்தியூரில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடந்தது
    • தா.பேட்டை பகுதியில் இருந்து ஆடிவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

    திருச்சி :

    தா.பேட்டை பகுதிகளில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    ஆடி வெள்ளியை முன்னிட்டு தா.பேட்டையில் பிள்ளாதுரை பெரியமாரியம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோன்று செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ஸ்ரீ ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருளினார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் தா.பேட்டை பகுதியில் இருந்து ஆடிவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

    • ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடத்தப்படும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

    இந்நிலையில், இன்று ஆடி மாத முதல் வெள்ளி க்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பி க்கப்பட்டது.

    ஈரோடு கருங்கல்பாளையம் சோளீ ஸ்வரர்கோயிலில் வில்வே ஸ்வரர், புஷ்பநாயகி அம்ம னுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்த னர்.

    இதேபோல், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன், எல்லை மாரியம்மன் வீரப்பன் சத்திரம் மாரிய ம்மன், ராஜாஜிபுரம் மாகாளிய ம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆடி முதல் வெள்ளியையொட்டி இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.

    பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோல் சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலிலும் இன்று ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில் பவானியில் கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் சாரதா மாரியம்மன் கோவில் அந்தியூரில் உள்ள பத்தி ரகாளி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    கோபிசெட்டிபாளையம் கடைவீதியில் உள்ள சாரதா மாரியம்மன் கோவிலில் காலை 6 மணி அளவில் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    இதைத் தொடர்ந்து அம்மனுக்குஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    மேலும் கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், கொளப்பலூர் பச்சை நாயகிஅம்மன் கோயில், அளுக்குளி செல்லாண்டி யம்மன் கோவில், காசிபாளையம் கரிய காளியம்மன் கோவில், கோபி புதுப்பாளையம் மகா மாரியம்மன் கோவில், சீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன் கோவில், மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

     ஈரோடு:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில், ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

    ஈரோடு கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவிலில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதேபோல், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது.

    இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானி கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் கோபியில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று அம்மனை வழிபட்டனர். இதேபோல் சாரதா மாரியம்மன் கோவில் அந்தியூரில் உள்ள பத்தரகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 

    பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாக அருள்பாலிக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரியின் ஆலயம், திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாக அருள்பாலிக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரியின் ஆலயம், திருச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி உள்ளது. ஆலய முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும் மகா மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்தின் நடுவே கொடி மரமும், பஞ்சமுக பலிபீடமும், சிங்க வாகனமும் இருக்கின்றன. இங்கு இருக்கும் பலிபீடம் ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இதேபோல் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

    அடுத்து சிம்ம வாகனம் உள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் முருகப்பெருமான், கிழக்கில் பைரவர், வட கிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். வலதுபுறம் விராட் விஸ்வபிரம்மன் வீற்றிருக்கிறார். திருச்சுற்றில் மேற்கில் துர்க்கை அம்மன் 18 கரங் களுடன் அருள்புரியும் அழகு நம்மை சிலிர்க்க வைக்கக்கூடியது. இந்த துர்க்கை அஷ்ட தசபுஜ துர்க்கை என அழைக்கப்படுகிறாள். கன்னிமூலை கணபதி, ஆஞ்ச நேயர், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருமேனிகளும் உள்ளன.

    அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலில் துவார சக்திகள் அருள்பாலிக்க, அடுத்து கருவறையில் அன்னை காளிகா பரமேஸ்வரி அமர்ந்த நிலையில் முகத்தில் இளநகை தவழ கருணை ததும்பும் கண்களுடன் அமர்ந்துள்ளாள். காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த அன்னைக்கு, நான்கு கரங்கள். கரங்களில் டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை சுமந்து காட்சி தரும் அன்னையின் கழுத்தில் திருமாங்கல்யம் இருப்பது மிகவும் சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. விக்கிரகத்தின் அமைப்பிலேயே தாலிச் சரடு இருப்பது எங்கும் காண இயலாத அற்புத அமைப்பு என்கின்றனர் பக்தர்கள்.

    அன்னையிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ளும் வழக்கம் இங்கு உள்ள பெண்களிடம் உள்ளது.

    இந்த ஆலயத்தின் தலபுராணம் அன்னை இங்கு வந்த கதையை சொல்கிறது.

    நிராலம்ப மகரிஷி பாரத தேசத்தில் பல இடங்களில் தவம் செய்த பின், கடைசியாக இவ்வூருக்கு வந்தார். இங்கு காவிரி நதியின் தென் கரையில் பூமியில் பாதம் படாதபடியும், அந்தரத்தில் எந்தவொரு பிடிமானமும் இல்லாமலும் நின்று, அந்தர்யோக முறையில் அன்னையை நோக்கி தவம் செய்யத் தொடங்கினார். அவரது தவத்தைக் கண்டு மனம் இளகிய பராசக்தியானவள், ஸ்ரீகாளிகா பரமேஸ்வரியாக அவருக்கு அந்தரத்தில் காட்சி தந்தாள்.

    அந்த காட்சியை கண்டுகளித்த நிராலம்ப மகரிஷியிடம் என்ன வரம் வேண்டுமென அன்னை வினவினாள்.

    “ஜெகன் மாதாவாகிய தாங்கள் இந்தக் கலியுகத்தில் மனித குலம், சத்தியம், தர்மம், நீதி, நேர்மை, ஒழுக்கம் முதலான நன்னெறிகளில் இருந்து விலகி பாவச் செயல்களைச் செய்து, பஞ்ச மாபாதகங்களால் பீடிக்கப்பட்டு, நிம்மதியும், சுகமுமின்றி வேதனையோடு நரக வாழ்க்கை வாழும் போது அவர்களை கருணையோடு பார்த்து தாயுள்ளத்தோடு அவர்களது பாவங்களை எல்லாம் போக்க வேண்டும். அவர்களை அன்போடு அரவணைத்து அவர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் வழங்கி அவர்களை வாழ வைக்க வேண்டும்” என்று நிராலம்ப மகரிஷி வேண்ட, அன்னை காளிகா பரமேஸ்வரியும் “அப்படியே அருள்கிறேன்” என அனுக்கிரகம் செய்தாள்.

    நிராலம்ப மகரிஷிக்கு அம்பாள் காட்சி கொடுத்த இடமே இந்த ஆலயம் உள்ள இடம். உலகில் எங்கும் காண இயலாத பலிபீடம் இங்குள்ள பஞ்சமுக பலிபீடமாகும். ஐந்து முகங்களைக் கொண்ட இந்த பலிபீடம், நிராலம்ப மகரிஷியால் அற்புத சிற்ப வேலைப்பாடுகளுடன் இவ்வையகத்து மக்கள் அன்னையின் கருணையால் வளமாக வாழ வேண்டி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

    இங்கு அன்னையின் சன்னிதியின் முன் மாத அமாவாசை தோறும் சூலினி பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெறுகிறது. இதில் பலநூறு பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் பில்லி, சூனியம் விலகும் என்பதும், கடன் பிரச்சினையில் இருந்து விடுபடலாம் என்பதும் நம்பிக்கை.

    சுமார் 800 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இரவு நேரங்களில், நடுநிசியில் சன்னமான கொலுசு சப்தத்தை இந்த பகுதி மக்கள் கேட்டதுண்டு. கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அன்னை இரவில் உலா வருவதால் ஏற்படும் சப்தம் இது என்கின்றனர் கேட்டவர்கள்.

    இங்குள்ள அஷ்டதச புஜ துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் அபிஷேகம் செய்து வழிபட, தடைபட்ட திருமணம் விரைவாக நடைபெறும் எனவும், மழலைச் செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

    இந்த ஆலயம் தேசிய ஒருமைபாட்டின் சின்னமாய் விளங்குகிறது என்று சொல்வது மிகையாகாது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    தன்னை நாடுவோரின் துயர் நீக்கி அவர்களை வளமுடனும் மகிழ்வுடனும் வாழவைப்பதில் அன்னை காளிகா பரமேஸ்வரிக்கு நிகரில்லை என்பது உண்மையே.

    அமைவிடம் :

    திருச்சியின் மத்தியப் பகுதியில் பெரிய கம்மாளத் தெருவில் உள்ளது இந்த ஆலயம். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கு, நகரப்பேருந்தில் மரக்கடை மற்றும் காந்தி மார்க்கெட் வரை பயணித்து, அதன்பிறகு நடந்தே சென்று விடலாம்.

    ஜெயவண்ணன்
    ஆலமரத்தில் மணியைக் கட்டி அம்மனை வழிபடும் கோவிலாக, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.
    ஆலமரத்தில் மணியைக் கட்டி அம்மனை வழிபடும் கோவிலாக, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.

    தல வரலாறு

    எட்டுக்கெட்டு என்று அழைக்கப்பெற்ற குடும்பத்தின் தலைவர், வயலுக்குத் தேவையான விதை நெல் வாங்குவதற்காகப் படகு ஒன்றில் ஆலப்புழை சென்றார். அங்கே ஒரு சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருப்பதைக் கண்டார். விதை நெல்லை வாங்கிக் கொண்டு உடனே ஊர் திரும்ப வேண்டும் என்பதால், அந்தச் சிறுமியைக் கண்டுகொள்ளாமல் சென்றார்.

    விதை நெல்லை வாங்கிக் கொண்டு திரும்பி வந்த போதும், அதே இடத்தில் அந்தச் சிறுமி அழுது கொண்டிருந்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட அவர், சிறுமியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார். அந்தச் சிறுமியைத் தன் வீட்டிலேயேத் தங்க வைத்து வளர்த்துப் பின்னர் திருமணமும் செய்து கொடுத்தார்.

    சில தலைமுறைகளுக்குப் பின்பு, அவரது குடும்பத்தின் மரபுரிமையினருக்குக் கடுமையான நோய் ஒன்று ஏற்பட்டது. அதனால் அவர்கள் துன்பத்தில் தவித்தனர். ‘தங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் இப்படி ஒரு நோய் வருவது ஏன்?’ என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பிய அவர்கள், ஒரு ஜோதிடரை அழைத்துக் காரணம் கேட்டனர். அந்த ஜோதிடர், ‘முந்தையக் காலத்தில் அக்குடும்பத்தின் தலைவர் அழைத்து வந்த சிறுமி, இந்த உலகைக் காக்கும் தேவி’ என்றும், ‘அவளைப் பிற்காலத்தில் வந்தவர்கள் மறந்து போய்விட்டதால், அக்குடும்பத்தினருக்கு நோயும் துன்பமும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது’ என்றும் கூறினார்.

    உடனே அந்தக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்தப் பகுதியில் ஒரு சிறிய கோவிலை உருவாக்கி, அதில் தேவியின் சிலையை நிறுவி வழிபடத் தொடங்கினர். அதன் பிறகு, அந்தக் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு வந்த நோய் நீங்கியதுடன், அவர்கள் வாழ்வில் வளமும் செல்வமும் அதிகரிக்கத் தொடங்கின என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் அமைப்பு

    ஒரு பகுதியில் அரபிக்கடல். மறுபகுதியில் திருவனந்தபுரத்தில் இருந்து சோரனூர் செல்லும் கால்வாய். இவை இரண்டுக்கும் இடையில் ஒரு தீவு போன்று இருக்கும் பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலில் பத்ரகாளி நின்ற நிலையில் காட்சி தருகிறார். மேக்கத்தில் எனப்படும் வனப்பகுதியில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எனவே இத்தல தேவியை ‘காட்டில் மேக்கத்தில் தேவி’ என்றும், ‘காட்டில் மேக்கத்தில் பத்ரகாளி’ என்றும், ‘காட்டில் மேக்கத்தில் அம்மா’ என்றும் அழைக்கின்றனர்.

    கோவில் வளாகத்தில் நாகராஜா, கணபதி, சுடலை மாடன், யோகீஸ்வரர் மற்றும் யட்சி சன்னிதிகளும் உள்ளன. கடற்கரையில் இக்கோவில் அமைந்திருந்தாலும், கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் இரு கிணறுகளில் மிகவும் சுவையான நல்ல தண்ணீர் கிடைக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் இந்த நீரைப் புனித நீராகப் பெற்று அருந்திச் செல்கின்றனர்.

    இயற்கை அழகு நிறைந்த பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மணிக்கெட்டு, அருநாழி, புடவை சமர்ப்பித்தல், புஷ்பாஞ்சலி என்பது போன்ற சில சிறப்பு வழிபாடுகளும் நடத்தப் பெறுகின்றன. கார்த்திகை மாதம் ‘12 விளக்கு உற்சவம்’ என்று அழைக்கப்படும் 12 நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொள்கின்றனர். இவ்விழாக் காலத்தில் கோவிலைச் சுற்றிலும் பக்தர்கள் தங்கிப் பஜனைப் பாடல்களைப் பாடி அம்மனை வழிபடுகின்றனர். இவ்வழிபாட்டிற்காகக் கோவிலுக்கு அருகில் ஆயிரத்துக்கும் அதிகமான கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    மணி கட்டி வழிபடும் ஆலமரம்

    ‘மணிக்கெட்டு’ வழிபாடு

    ஆலய வளாகத்தில் உள்ள ஆலமரத்தில் மணியைக் கட்டி வழிபட்டால், பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. இதனை ‘மணிக்கெட்டு’ என்றும், ‘மணிச்சூடல்’ என்றும் அழைக்கின்றனர். இந்த ‘மணிகெட்டு’ வழிபாடு நடைபெறுவதற்கு, இக்கோவிலில் நிகழ்ந்த ஒரு சம்பவமே காரணமாக அமைந்திருக்கிறது.

    ஒரு சமயம், தேவியின் சன்னிதிக்கு எதிரே இருக்கும் கொடிமரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளில் ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அதனைக் கண்டெடுத்த பக்தர் ஒருவர், அதைப் பக்தியுடன் எடுத்து, ஆலய வளாகத்தில் இருந்த ஆலமரக் கிளை ஒன்றில் கட்டித் தொங்க விட்டிருக்கிறார். அப்போது, அவருக்குள் மிகுந்த பக்தியும், இறையுணர்வும் தோன்றி இருக்கிறது. அதற்குப் பின்னர், அவருடைய கோரிக்கைகள் அனைத்தும் தேவியின் அருளால் நிறைவேறி இருக்கின்றன.

    இதற்கிடையே கொடிமரத்தில் இருந்த மணி கீழே விழுந்ததால் அதற்கான பரிகார பூஜை செய்ய தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் தனக்கு மணிகளைக் காணிக்கையாக்கி இந்த ஆலமரத்தில் கட்டினால், தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தேவி தெரிவித்தாள். அதனைத் தொடர்ந்து, கோவிலில் இருக்கும் ஆலமரத்தில் மணிகளைக் கட்டும் வழிபாடு, முதன்மை வழிபாடாகி விட்டது என்கின்றனர்.

    இதற்காக சிவப்பு நிறத்திலான கயிற்றில் கட்டப்பட்ட, 15 முதல் 20 கிராம் எடையுள்ள சிறிய அளவிலான மணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மணிகளை வாங்கி, ஆலமரத்தினை ஏழு முறை வலம் வந்து மரத்தின் விழுது அல்லது கிளையில் அந்த மணியைக் கட்டிவிட்டு, அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும், நூறு பக்தர்களாவது மணியைக் கட்டி வழிபடுகிறார்கள். சிறப்பு விழாக்களின்போது இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

    ஒளியாக காட்சி தந்த தேவி

    திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, ஒரநாடு ராஜா என்பவரைச் சந்தித்துவிட்டு, கடல் வழியாகக் கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தார். கப்பலின் மேற்பரப்பில் நின்றிருந்த அவருக்கு, கடற்பரப்பின் மேலே திடீரென்று ஒரு ஒளி தோன்றி, மீண்டும் கடலினுள் சென்று மறைவது தெரிந்தது. தைப்பூச நாளில் தனக்குக் காட்சியளித்த அந்த ஒளி என்னவென்று தெரியாமல், அதை வணங்கியபடி நாடு திரும்பினார்.

    அதன் பிறகு, ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய தேவி, கடலில் ஒளியாகத் தோன்றி மறைந்தது தானே என்றும், அங்கிருக்கும் கோவிலில் தான் பத்ரகாளியாக இருப்பதையும் தெரிவித்தாள். உடனே மன்னர், அந்தக் கோவிலுக்குச் சென்று தேவியை வழிபட்டார். அங்கு தேவியானவள், மன்னனுக்கு சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மும்மூர்த்திகளின் வடிவில் காட்சியளித்தாள்.

    அதன் பின்னர், மன்னன் அந்தக் கோவிலை விரிவுபடுத்திக் கட்டியதுடன், அவ்வப்போது அங்கு வந்து தேவியை வழிபட்டுச் சென்றார். மன்னர் இக் கோவில் வழிபாட்டுக்கு வரும் போது தங்குவதற்காகச் சிறிய அரண்மனை ஒன்றும் கட்டப்பட்டது. அந்த அரண்மனையை அங்குள்ளவர்கள் ‘கொட்டாரக்கடவு’ என்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், காயங்குளம் எனும் ஊரிலிருந்து 26 கிலோ மீட்டர், கருநாகப்பள்ளி எனும் ஊரிலிருந்து 17 கிலோ மீட்டர், சவரா எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்லப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஜாநகர் என்னும் இடத்திலிருந்து கோவிலுக்குச் செல்ல இலவசப் படகு வசதியும் செய்யப் பட்டிருக்கிறது.

    தேனி மு.சுப்பிரமணி

    பச்சைப்பசேல் வயல் வெளிகள், தென்றல் வருடும் நெற்கதிர்கள், மெல்லிய ரீங்காரத்துடன் அசைந்தாடும் கரும்புத் தோட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் ஊரின் நடுவே அமைந்துள்ளது இந்த அழகிய காமாட்சிபுரம் ஆலயம்.
    ஒரு சமயம் ஏதோ காரணமாக இறைவனுடன் அன்னை காமாட்சி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.

    இறைவியின் வாக்குவாதம் இறைவனுக்குப் பிடிக்கவில்லை. கோபமடைந்த இறைவன் இறைவியை பூலோகம் செல்லும்படி சபித்தார். வேதனையடைந்த இறைவி, இறைவனிடம் “நான் தங்களை வந்தடைவது எப்போது?” எனக் கேட்டாள்.

    கோபம் தணிந்த ஈசன் “பந்தணைநல்லூருக்கு அருகே நான் விசுவநாதர் என்ற நாமத்துடன் கோவில் கொண்டுள்ளேன். அங்கு வந்து நீ என்னை பூஜிப்பாயாக!” என அருளினார்.

    இதையடுத்து இறைவி, இத்தலம் வந்து இறைவனை நோக்கி தவமிருந்து பூஜை செய்தாள்.

    மனம் குளிர்ந்த இறைவன், அன்னை காமாட்சியை தன்னுடன் இணைத்துக் கொண்டார். அந்தத் தலம் ‘காமாட்சிபுரம்’ என அன்னையின் பெயராலேயே அழைக்கப்படலாயிற்று.

    பச்சைப்பசேல் வயல் வெளிகள், தென்றல் வருடும் நெற்கதிர்கள், மெல்லிய ரீங்காரத்துடன் அசைந்தாடும் கரும்புத் தோட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் ஊரின் நடுவே அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம்.

    சிறிய கோபுரத்துடன் கூடிய அழகிய முகப்பு மண்டபம், நம் கண்களைக் கவரும். கிழக்கு திசை நோக்கி அமைந்த பழமையான இந்த ஆலயத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே சென்றால், விசாலமான பிரகாரம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் இறைவி விசாலாட்சி நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். இறைவியின் கருவறை நுழைவு வாசலின் இருபுறமும் துவாரபாலகியரின் சுதை வடிவத் திருமேனிகள் உள்ளன. இத்தலத்தின் பெயருக்குக் காரணமான அன்னை காமாட்சியை, இறைவி விசாலாட்சியின் கோஷ்டத்தில் தரிசிக்கலாம்.

    விசுவநாதர், விசாலாட்சி

    அர்த்த மண்டபத்தின் முன் நந்தியும், பலி பீடமும் இருக்கிறது. நுழைவு வாசலின் இருபுறமும் துவாரபாலகர்களின் அழகிய திருமேனிகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. கருவறையில் இறைவன் காசி விசுவநாதர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி தன்னைத் தானே பூஜை செய்து கொண்டவர் என பக்தர்கள் கூறுகின்றனர்.

    பிரகாரத்தின் மேற்கு திசையில் விநாயகர், முருகன், வள்ளி- தெய்வானை, மகாலட்சுமி கஜலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. கிழக்கில் சனீஸ்வரனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. எனவே இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. பைரவர், சூரியன் திருமேனிகளும் கிழக்குப் பிரகாரத்தில் உள்ளன.

    தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது. சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி மாதம், சோம வாரம், கார்த்திகை போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுணர்மியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

    ஊடல் காரணமாக கணவனைப் பிரிந்த இறைவி, மீண்டும் அவருடன் சேர்ந்த தலம் இது. எனவே பிரிந்து வாழும் தம்பதியர் இத்தலத்து இறைவன் - இறைவியை பிரார்த்தனை செய்தால் மீண்டும் அவர்கள் இணைந்து வாழ்வர் என்பது நம்பிக்கையாக திகழ்கிறது.

    தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்துத் தடத்தில் பந்தநல்லூருக்கு வடமேற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது காமாட்சிபுரம்.
    கரிக்ககம் என்ற இடத்தில் உருவானது தான் ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆதி பரம்பொருளான சிவபெருமான் படைத்து அருள்பாலித்து வரும் இந்த பூவுலகில், பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அந்த கால கட்டத்தில் பாண்டிய மன்னர்களும், சோழ மன்னர்களும் போட்டிபோட்டு ஆலயங்களை அமைத்து வழிபட்டனர். சேரநாட்டிலும் சிவன் கோவில்கள் அமைந்தன. இருப்பினும் மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படும் பரசுராமர், 108 சிவாலயங்களையும், சக்தி சொரூபிணியான பரமேஸ்வரியின் 108 பகவதியம்மன் கோவில்களையும் அமைத்தார். அதுவே கேரள தேசம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கின்றன.

    அவர் அமைத்த ஆலயங்களை, பிற்கால மன்னர்கள் அந்தந்த ஊர்களின் பெயரிலேயே திருப்பணி செய்து போற்றி பராமரித்தனர். இப்படி கரிக்ககம் என்ற இடத்தில் உருவானது தான் ‘தேவி கரிக்கத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி கோவில். பிற்கால சேர மன்னனான அனுஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான இந்த ஆலயத்தில், உக்கிரமாக இருக்கும் ரத்த சாமுண்டி சத்தியத்தை நிலைநாட்டும் அன்னையாக அருள்பாலித்து வருகிறாள்.

    திருவிதாங்கூர் மன்னனின் படைவீரர்கள் களரிச் சண்டை பயிற்சி பெறும் களமாக விளங்கிய இடம் என்பதால், இந்தப் பகுதிக்கு ‘களரிக்களம்’ என்று பெயர் வந்தது. பின்னர் அருவே மருவி ‘கரிக்ககம்’ என்றானதாக கூறப்படுகிறது.

    தல வரலாறு

    வேத விற்பன்னரும் தெய்வீக அருள்பெற்றவருமான ஒரு வேதிகர், பராசக்தியை தவறாது வழிபட்டு வந்தார். அவர் மந்திர தந்திரங்களை நன்கு கற்று அருள் பெற்றிருந்த ஒரு தந்திரியை தன் சீடனாக ஆக்கிக் கொண்டு அவருக்கு அறிவுரைகளும், அருள்வாக்கும் வழங்கினார். அந்த சீடரும், குருவைப் போலவே பராசக்தியை வழிபட்டு வந்தார். அவர்கள் இருவர் முன்பாகவும் அன்னை, சிறுமி வடிவத்தில் தோன்றினாள். பின்னர் அம்மனுடன் அவர்கள் தற்போது ஆலயம் இருக்கும் பகுதிக்கு வந்தனர். அங்கு சிறிய பச்சை பந்தல் அமைத்து அம்மனை குடியமர்த்தினர். சிறுமியாக வந்த அன்னை, அவர்களுக்கு அருளாசி வழங்கி மறைந்தாள்.

    இந்த ஆலயத்தில் ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது சிறப்புக்குரியதாகும். ஸ்ரீசாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று வடிவங்களில் அன்னை வணங்கப்படுகிறாள். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி ஆகிய அம்மன்கள் சுவர் சித்திரமாகவே இருக்கின்றனர். இந்த சன்னிதிகளில் சிலை வடிவம் கிடையாது. அருள் சுரப்பது சாமுண்டி தேவி, அநீதியை முறியடிப்பது ரத்த சாமுண்டிதேவி, ஐஸ்வரியம் வழங்குவது பால சாமுண்டிதேவி.

    முன் காலத்தில் இந்த ஆலய சாமுண்டி தேவி, வெள்ளி முகத்துடன், கலைமான் கொம்பில் வீற்றிருப்பது போன்று இருந்தது. பிரசன்னம் பார்த்ததில், பக்தர்களுக்கு தேவியின் உருவத்தைப் பார்த்து வணங்கி பிரார்த்தனை செய்ய, விக்கிரக பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது தெரியவந்தது. தொடர்ந்து சாஸ்திர முறைப்படி பழைய கருவறையில், அதே அளவில் சிலை அமைக்கப்பட்டது. தேவியை பஞ்சலோக விக்கிரகமாக பிரதிஷ்டை செய்தனர். அமைதியான வாழ்வுக்கும், தீராத நோய் நீங்கவும் பக்தர்கள் இந்த அன்னையை வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் உள்ள சாமுண்டி தேவிக்கு ஒரு நேர பூஜை வழிபாடு செய்யப்படுகிறது. இது ‘தேவி நடை பூஜை’ என்று அழைக்கப்படுகிறது. கடும்பாயசம் தான் அன்னையின் விருப்பமான நைவேத்தியம். ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகம், புடவை சாத்துதல், பிடிபணம் வாருதல் ஆகியவை இந்த அம்மன் சன்னிதியில் நடைபெறும் வழிபாடுகளாகும். காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்படும்.

    நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற, தொடர்ந்து 13 வெள்ளிக்கிழமை ரத்த புஷ்பார்ச்சனை செய்து வருவது நல்லது. நித்திரையில் வரும் கெட்ட கனவுகளைக் கண்டு பயப்படாமல் இருக்கவும், வேறு தோஷங்களில் இருந்து விடுபடவும் இந்த சன்னிதியில் கறுப்புக் கயிறு தரப்படுகிறது. இது தாயத்து எழுதி தேவி பாதங்களில் 21 தினங்கள் பூஜை செய்து தரப்படுவதாகும்.

    ரத்த சாமுண்டி தனி சன்னிதியில் சுவர் சித்திரமாக இருக்கிறாள். நீதியை நிலைநாட்ட இந்த சன்னிதியில் வந்து சத்தியம் செய்வது பழங்கால வழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சன்னிதியை திறந்து சத்தியம் செய்வதற்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் முக்கிய பூஜை ‘சத்ரு சம்ஹார பூஜை’ ஆகும். இது பகையை அழிக்கும் பூஜை. சுப காரிய தடை நீங்கவும், கண் திருஷ்டி அகலவும், ஜாதக தோஷம், பகைவர்கள் மூலம் ஏற்படும் சதித் திட்டங்கள் விலகவும் இங்கு பரிகார பூஜை செய்யப்படுகிறது. ரத்த சாமுண்டிக்கு கடும் பாயசம், சிவப்பு நிற பட்டு பாவாடை, தெற்றி பூ மாலை, கோழி, ஆடு தானம், தங்கம், வெள்ளி போன்றவற்றால் ஆன பொருட்களை சமர்ப்பிக்கலாம்.

    சாந்த சொரூபிணியான பால சாமுண்டி தேவியும் தனி சன்னிதியில் சுவர் சித்திரமாகவே அருள்கிறாள். அம்மன் அழகும், அமைதியும் நிறைந்து காட்சி தருகிறாள். இந்த அன்னையை குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்கள் வழிபடுகிறார்கள். நோய் நீங்குவதற்கு நடையை திறந்து வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இதற்கும் சிறிய தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த சன்னிதியில் உள்ள அன்னைக்கும் கடும் பாயசம், பட்டு, முல்லைப் பூ, பிச்சிப்பூக்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது. தங்கம், வெள்ளியால் ஆன குழந்தை உருவங்கள், தொட்டில்கள், விளையாட்டுப் பொருட்களை இந்த அன்னைக்கு சமர்ப்பிக்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த அன்னையின் தரிசனம் பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

    இந்த ஆலய வளாகத்தில் மகா கணபதி, யக்‌ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, குரு மந்திரம், நாகர்காவு, அன்னபூர்ணேஸ்வரி ஆகிய சன்னிதிகளும் உள்ளன.

    தேவியின் நட்சத்திர தினமான பங்குனி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    சத்தியம் காக்கும் சன்னிதி :

    சேர மன்னன் காலத்தில், ஒரு நாள் அரசியின் விலைஉயர்ந்த காதணி காணாமல் போய்விட்டது. அந்தப்புரத்தில் காவல் பணியில் ஈடுபட்ட ஒரு காவலாளி மீது சந்தேகம் கொண்டு, அவனைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.

    அதே சமயத்தில் அந்த காவலாளியின் காதலியும், அரசியின் தோழியுமான ஒரு பெண் ஓடி வந்து, தன்னை தண்டிக்கும்படியும், காவலாளியை விடுவிக்கும்படியும் கூறினாள். காவலாளியோ, “இல்லை.. நான் தான் குற்றவாளி. எனக்கே தண்டனை கொடுங்கள்” என்றான்.

    மன்னனுக்கு வியப்பு ஏற்பட்டது. யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினான். அப்போது அமைச்சர்கள் ஒரு ஆலோசனை கூறினார்கள். அதன்படி காவலாளியையும், அவனது காதலியையும், கரிக்ககம் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்ய வைப்பது என்று முடிவானது. பொய் சத்தியம் செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். காவலாளியும், அவனது காதலியும் ஆலயக் குளத்தில் நீராடி ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதிக்கு வந்தனர்.

    அப்போது அரசியின் துணியை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடி வந்தாள். அவர் “சலவைக்கு போட்ட துணியில், அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். ரத்த சாமுண்டியின் அசரீரி வாக்குப்படி, அதனை ஒப்படைக்க இங்கே ஓடி வந்தேன். காவலாளியும், அந்தப் பெண்ணும் நிரபராதிகள்” என்று கூறி காதணியைக் கொடுத்தாள்.

    மகிழ்ச்சியடைந்த மன்னன், காவலாளியையும், அவனது காதலியையும் விடுவித்தான். அதோடு அரசியின் காதணியை, ஆலயத்தில் உள்ள அன்னைக்கே சமர்ப்பித்தான்.

    கேரளத்தில் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து இன்று வரை கரிக்ககம் சாமுண்டி தேவி சன்னிதானத்தில், பல சிக்கலான வழக்குகள், சத்தியம் செய்வதன் மூலம் நிரூபிக்கப்பட்டு வந்திருக்கின்றன. குற்றம் சாட்டியவரும், குற்றவாளியும் ஆலய குளத்தில் நீராடி சாமுண்டி அம்மன் முன் காணிக்கை செலுத்தி விளக்கேற்றி, தீபச் சுடரின் மேல் சத்தியம் செய்ய வேண்டும். பொய் சத்தியம் செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைத்துவிடும் என்று அனைவரும் நம்புவதால் எவரும் பொய் சத்தியம் செய்வதில்லை.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்  :

    திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் கரிக்ககம் சாமுண்டி கோவில் அமைந்திருக்கிறது.
    திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்
    திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த லிங்கமநாயக்கர் என்பவர் தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊரை விட்டு புறப்பட்டு பாண்டியநாடு (மதுரை) செல்ல நினைத்து பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நடை பயணமாக பல மைல்களை கடந்து வந்தார். வழியில் பச்சை பசுமையான மலைக்காடுகள் சூழ்ந்த வனப்பகுதிகளை பார்த்ததும் லிங்கமநாயக்கர் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இனி தென்திசையை நோக்கி செல்ல வேண்டாம் என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

    இதனால் லிங்கமநாயக்கர் அந்த காட்டுப்பகுதியிலேயே தங்கினார். தனது அறிவுத்திறமையால் அந்த காட்டுப்பகுதியை ஒரு குட்டி நாடாக மாற்றினார். பின்னர் கோட்டை, கொத்தளங்களை அமைத்தார். மானாவாரி பயிர்களை விளைவித்தார். விளைந்த தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கினார். தான் வாழும் பகுதிக்கு “இரசை” என்று பெயரிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த திருமலை நாயக்கர், லிங்கமநாயக்கரை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் “இரசை” நகரின் சிற்றரசராக லிங்கமநாயக்கர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இரசை நகர்ப்பகுதியை லிங்கமநாயக்கர் நீதியுடனும், நேர்மையுடனும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்தார். அப்போது அரண்மனையின் தேவைக்கு, அங்குள்ள பண்ணையில் இருந்த பசும்பால் போதவில்லை. இதனால் பக்கத்து ஊரில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி தினமும் ஒரு பணியாளர் பால் கறந்து, குடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஒரு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த பணியாளர் பால்குடத்தை கீழே வைத்துவிட்டு, நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கி களைப்பு தீர படுத்துத்தூங்கினார். திடீரென காலில் கட்டெறும்பு கடித்ததும், கண் விழித்த அவர் பால்குடத்தை பார்த்தார். ஆனால் அதில் பால் இல்லாமல் வெற்றுக்குடமாக இருந்தது. இதே போல பல நாட்கள் அந்த மரத்தடி அருகே வரும்போது பால் மாயமாகி வந்தது. இதனால் அரண்மனையில் பசும்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே பணியாளரை கூப்பிட்டு மன்னர் விசாரித்த போது, அரசே நீங்களே ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து விட்டு, பின்னர் என்னை தண்டியுங்கள், என்று பரிவாக கெஞ்சினார்.

    பணியாளரின் அந்த கோரிக்கையை பரிசீலித்த மன்னர், மீண்டும் அவரிடமே பால் நிரம்பிய குடத்தை கொடுத்து அதே மரத்தடியில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை மன்னர், அரண்மனை பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தனர். சிறிது நேரம் கழித்து மன்னரும், மற்றவர்களும் போய் அந்த பால் குடத்தை கவனித்தனர். அப்போது அனைவரும் வியப்படையும் வகையில் பால்குடம், வெறும் குடமாக காட்சி அளித்தது. இதனால் அனைவரும் திகைத்தனர். உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்க்க லிங்கமநாயக்கர் உத்தரவிட்டார்.

    அதன்படி அந்த பகுதியை பணியாளர்கள் தோண்டும் போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டன. கடப்பாரையால் ஓங்கி குத்தியபோது பூமிக்கு அடியில் இருந்து ரத்தம் பீறிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. தொடர்ந்து மண்ணை அகழ்ந்து பார்த்தபோது கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருந்ததை கண்டு லிங்கமநாயக்கர் ஆச்சரியம் அடைந்தார். அம்மனின் தோளில் கடப்பாரை பட்டதால் ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்ததும் தெரியவந்தது.

    சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நிற்கவே, அதே இடத்தில் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீராட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது மேகம் திரண்டு பலத்த மழை (மாரி) பெய்தது. இதனால் ‘மாரி’ அம்மன் என்று அழைக்கப்பட்டு மன்னரும், மக்களும் வணங்கத்தொடங்கினார்கள். சிற்றரசன் லிங்கமநாயக்கர், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் அம்சமான மாரியம்மனுக்கு கும்பம் இல்லாமல் விமான அமைப்பில் கோவில் கட்டினான். ‘ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்’ என்று அழைக்கப்பட்டது நாளடைவில் மருவி ‘நத்தம் மாரியம்மன்’ என்று அழைக்கப்பட்டது. பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றுவதுடன், நித்தம் அருள் தரும் நத்தம் மாரியம்மனுக்கு பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் உள்ளனர்.

    அம்மனை போற்றும் படியாக மிகச்சிறப்பாக நடைபெறும் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

    நோய்களை தீர்க்கும் அபிஷேக தீர்த்தம்

    ந த்தம் மாரியம்மன் கோவில் வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.

    பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன்

    தெ ன் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலத்தில், பக்தர்கள் காப்பு கட்டுதல், 15 நாட்கள் விரதமிருத்தல், அக்னிசட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் என்று பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள். பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனாக மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கோவில் நடை திறப்பு

    நத்தம் மாரியம்மன் கோவிலில் தினந்தோறும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப் படும்.

    பஸ் வசதி

    நத்தம் மாரியம்மன் கோவில் மதுரையில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல் லில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த 2 நகரங்களில் இருந்தும் கோவில் திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    ×