search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி"

    • இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆடியின் புதிய எலெக்ட்ரிக் கார் பி.பி.இ. பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் டூயல் மோட்டார் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த கார் மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கியூ6 இ டிரான் மாடல் ஆடியின் முற்றிலும் புதிய டிசைன் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லைட் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த காரின் முன்புறம் க்ளோஸ்டு ஆஃப் கிரில், அழகிய தோற்றம் கொண்ட டி.ஆர்.எல்.கள், முன்புறம் அகலமான ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த காரில் ஆடியின் முற்றிலும் புதிய டிஜிட்டல் லைட் சிக்னேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த காரின் உள்புறம் பானரோமிக் டிஸ்ப்ளே, 11.9 இன்ச் ஆடி விர்ச்சுவல் காக்பிட், 14.5 இன்ச் MMI டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஸ்டீரிங் வீலில் பட்டன்களுக்கு மாற்றாக டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த எஸ்.யு.வி.-யில் ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.


     

    பவர்டிரெயினை பொருத்தவரை ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 382 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் டூயல் மோட்டார் செட்டப் உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள 100 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 625 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    • ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
    • இந்த எஸ்.யு.வி. இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    ஆடி நிறுவனம் தனது முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் மார்ச் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஆடியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.யு.வி. மாடல் முற்றிலும் புதிய PPE (பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக்) பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

    புதிய காரின் புகைப்படங்களை ஆடி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி கியூ4 மற்றும் கியூ8 இ டிரான் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி பல்கேரியன் பியர்டு கிரில் மூடப்பட்டு மெல்லிய லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    போர்ஷே மக்கன் மாடலை போன்றே புதிய கியூ6 மாடலிலும் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன. புதிய கியூ6 இ டிரான் உள்புறத்தில் இரட்டை டிஜிட்டல் ஸ்கிரீன்கள்- ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராக வழங்கப்படுகின்றன.

    புதிய ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 800 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த எஸ்.யு.வி. மாடல் 2-வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • வெற்றியை விரும்புவோர் காமாட்சியை விரும்பி வழிபடுவார்கள்.
    • மகப்பேறு, தொழில், அபிவிருத்தி, கல்வியில் தேர்ச்சி மற்றும் சகல செல்வங்களும் பெருகும்.

    பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் தான் அம்மனை அதிகம் வழிபடுகிறார்கள்.

    அதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கு இயற்கையாகவே அம்மன் மீது இருக்கும் ஈர்ப்பும், ஈடுபாடும் தான் காரணமாகும்.

    பெண்கள் இந்த ஆடி மாதத்தில் எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து

    காமாட்சி அம்மனுக்கு அணிவித்து வேண்டுதல் செய்தால் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    துன்பங்கள் நீங்க காமாட்சியை வழிபடுவது நல்லது.

    எல்லாத் தீமைகளையும் அழித்து எல்லாத் தடைகளையும் போக்கி நல்வாழ்க்கையைத் தருபவள் காமாட்சியே ஆவாள்.

    வெற்றியை விரும்புவோர் காமாட்சியை விரும்பி வழிபடுவார்கள்.

    சிவன், விஷ்ணு, பிரம்மன், யமன், இந்திரன், முதலான தேவர்களின் மகாசக்திகளின் ஒட்டு மொத்த வடிவமாக காமாட்சி விளங்குவதால் அவள் பல ரூபங்களை கொண்டவள்.

    அவளை நினைத்தாலும் அவளுடைய மகாமந்திரங்களை ஜபித்தாலும் நமக்கு ஏற்படக்கூடிய மரண பயம், இகலோக பயம், பரலோக பயம், அரவு பயம், சுருதி பயம், வேதனா பயங்கள்உள்ளிட்ட அனைத்து பயங்களும் ஓடி ஒளிகின்றன.

    ஆடி மாதம் முழுவதும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் காமாட்சியை வழிபடுவது சாலச்சிறந்தது.

    ஒருவருடைய ஜாதகத்தில் கிரக தோஷத்தால் திருமணத் தடைகள் ஏற்பட்டிருக்கலாம்.

    இதிலிருந்து நிவர்த்தி பெற காமாட்சிக்கு புடவை சார்த்தி எலுமிச்சம்பழ மாலை, செவ்வரளி மாலை அணிவித்து

    பசு நெய் அல்லது நல்லெண்ணையால் தன் வயது எண்ணிக்கையுள்ள தீபம் ஏற்றி குங்குமத்தால்

    அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள் நீங்கும்.

    மகப்பேறு, தொழில், அபிவிருத்தி, கல்வியில் தேர்ச்சி மற்றும் சகல செல்வங்களும் பெருகும்.

    அம்பாளுக்கு எலுமிச்சை பழம் மாலை சார்த்தும் போது 18, 27, 54, 108, 1008 எண்ணிக்கை உள்ள

    எலுமிச்சம் பழ மாலையைச் சாற்றுவதால் நமக்கு உண்டாகும் உக்கிரமமான நோய்கள், வயிற்று உபாதைகள் தணிகின்றன.

    தீராத துன்பங்கள் நீங்குகின்றன.

    காமாட்சி மற்றும் துர்க்கை அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படும் சிறப்புடையது எலுமிச்சம்பழம்,

    இதனை குறுக்குவாட்டில் இரண்டாக நறுக்கி சாற்றை பிழிந்துவிட்டு மூடியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு

    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வந்தால் அம்மனின் அருள் எளிதில் கிடைக்கும்.

    கன்னிப்பெண்கள் இவ்வாறு விளக்கேற்றி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து காமாட்சி அம்மனுக்கு அணியும் வழக்கமும் உள்ளது.

    இவ்வாறு செய்வதால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்.

    எலுமிச்சை ஜீவ கனி மட்டுமல்ல. வெற்றிக் கனியுமாகும்.

    அந்தக் காலத்தில் அரசர்கள் எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் முன்பாக காவல் தெய்வம்,

    எல்லைத் தெய்வம் சம்கார தெய்வங்களை எலுமிச்சை மாலை அணிவித்து, அந்த தெய்வங்கள் முன்பாக நின்று

    உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்பிறகு தங்களது படைகளை வழி நடத்திச் செல்வார்கள்.

    போரில் வாகை சூடி திரும்பி வந்த பின்பு மீண்டும் எலுமிச்சை மாலை சூடி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது.

    பில்லி, சூனியம், மாந்திரீகம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் காளி அம்மனுக்கு

    எலுமிச்சை மாலை சூடி வணங்கி வழிபடுவதை திருவக்கரை வக்கிர காளியம்மன், பட்டீஸ்வரம் துர்கையம்மன்

    உள்ளிட்ட பல முக்கிய ஆலய வழிபாடுகளில் பிராதானமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

    பொதுவாக பத்ரகாளி, துர்க்கை, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது

    எலுமிச்சை மாலை சாத்துவார்கள். இந்த மாலையை தயாரிக்கும் போது ஒரே அளவுள்ள

    மஞ்சள் நிறமுள்ள பழங்களை மாலையாக கோர்ப்பது நல்லது.

    பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    பழங்கள் காயாக இருக்கக்கூடாது.

    எலுமிச்சை மாலை சாத்தும் போது அத்தெய்வங்களை குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும்.

    கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

    • கருட பகவான் திருமாலின் பல லீலைகளில் சம்பந்தப்பட்டள்ளார்.
    • கருட ஜெயந்தியை முன்னிட்டு அனைவரும் கருடனை வணங்கி நலம் பெறலாம்.

    வைகானஸ ஆகமப்படி கருடனின் அவதார நாளை நட்சத்திர அடிப்படையில் ஆடி சுவாதியன்று கொண்டாடுவார்கள்.

    பாஞ்சராத்ர ஆகமப்படி திதியின் அடிப்படையில் கருட பஞ்சமியாகக் கொண்டாடுவார்கள்.

    கருட பகவானுக்கு ருத்ரா, கீர்த்தி என்று இரண்டு தேவிகள், இவர்களே அரங்கநாயகிக்கு இரு கண்களாகத் திகழ்கிறார்களாம்.

    கருட பகவான் திருமாலின் பல லீலைகளில் சம்பந்தப்பட்டள்ளார்.

    கஜேந்திர மோட்ச வைபவத்தில், கஜேந்தரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கவ்வி இழுக்க,

    கஜேந்திரன் திருமாலை "ஆதிமூலமே" என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன்

    வாயு வேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்த்தார்.

    ராமாயண காலத்தில் போர்க்களத்தில் ராம&லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப் போட,

    அவர்கள் மயங்கி விழுந்தபோது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி

    அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார்.

    கிருஷ்ணாவதாரத்திலும் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார்.

    கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார்.

    பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது,

    மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேற்றி பவனிவரச் செய்தான்.

    அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தான்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஒரே ஆசனத்தில் கருடனுடன் காட்சி அளிக்கிறான்.

    கருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிரந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல்,

    சர்ப்பதோஷ நிவர்த்தி ஆகிய அனைத்து நலன்களும் கிட்டும்.

    கருட ஜெயந்தியை முன்னிட்டு அனைவரும் கருடனை வணங்கி நலம் பெறலாம்.

    • ஆடி மாதம் குலதெய்வத்துக்கு மாவிளக்கு வழிபாடு செய்தால் குடும்ப நலன்களை ஒருங்கே பெற முடியும்.
    • மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் பொதுவாக சலிக்கப்படுவதில்லை

    ஆடி மாதம் எந்த அளவுக்கு அம்மனை வழிபடுகிறோமோ, அந்த அளவுக்கு குலதெய்வ வழிபாட்டையும் செய்தல் வேண்டும்.

    பெண்கள் ஆடி மாதம் குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தால் குடும்ப நலன்களை ஒருங்கே பெற முடியும்.

    இந்த மாவிளக்கு வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

    பச்சரிசி கால் கிலோ, பாகு வெல்லம் கால் கிலோ, ஏலக்காய் நாலு, ஐந்து, 50 கிராம், நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி ஆகியவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    பச்சரியை நன்கு களைந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும்,

    ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக்கவும்.

    மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் பொதுவாக சலிக்கப்படுவதில்லை என்றாலும் அவர்கள் அவர்கள் வீட்டு வழக்கத்திற்கு ஏற்ப மாறும்.

    நன்கு அரைத்து மாவாகிவிடும் வெல்லத்தைப் போட்டுக் கலந்தால் நன்கு கெட்டியாக உருட்டும் பதத்தில் வரவேண்டும்.

    பந்து போல் உருட்ட வேண்டும்.

    அவரவர் வீட்டு வழக்கப் படி ஒரு உருண்டை அல்லது இரண்டு உருண்டை பிடிக்க வேண்டும்.

    உருண்டையில் நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும்

    அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு நேரே அம்மன் சாப்பிட்டால் இலையை எப்படிப் போடுவோமோ

    அப்படி நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு மாவு உருண்டைகளை வைக்க வேண்டும்.

    குழி செய்த இடத்தில் ததும்ப நெய்யை ஊற்ற வேண்டும்.

    திரியை அந்தக் குழியில் விட்ட நெய்யில் வைத்துத் திரியை ஏற்றவும்.

    இப்போது பூவை மாலை போல் இரண்டு மாவிளக்குகளையும் சேர்த்துப்போடவும்.

    நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும்.

    பூவைத்திருக்கும் இடத்திலேயே வெற்றிலை, பாக்கு,வாழைப்பழம் வைத்துத் தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும்.

    திரி நன்கு எரியும்.

    நீளமான திரி எரிந்து முடியும் நேரத்தில், அந்தத் திரியை ஒரு கரண்டியில் அல்லது ஸ்பூனால் எடுத்து

    கோவிலில் இருக்கும் விளக்குகள் ஏதாவதொன்றில் அணையாமல் வைக்கவேண்டும்.

    பின்னர் தண்ணீர் சுற்றி நிவேதனம் செய்துவிட்டுக் கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு, ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவது விஷேச பலன்களை தரும்.

    • புடவையை வைத்து வழிபாடு செய்வதுதான் புடவைக்காரி வழிபாடு.
    • ஆடி மாதம்தான் மிகப் பெரிய திருவிழாவாகப் புடவைக்காரி வழிபாடு களை கட்டும்.

    ஒரு குடும்பத்தில் இளம் பெண் இறந்தாலோ, வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பெண்கள் இறந்தாலோ அந்தப் பெண்களைக் குல தெய்வமாக வழிபடுவது தமிழ்நாடு முழுவதும் அனைத்து தரப்பினரிடமும் வழக்கத்தில் உள்ளது.

    இதற்கு கன்னி தெய்வ வழிபாடு என்று பெயர்.

    சில மாவட்டங்களில் குறிப்பாக கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் இதற்கு புடவைக்காரி வழிபாடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த வழிபாட்டுக்காக கோவில் கூட கட்டுவார்கள்.

    மூலவர் சந்நிதியில் பொதுவாக சாமி சிலையை வைத்துப் பிரதிஷ்டை செய்வதற்குப் பதிலாகப்

    புடவையை வைத்து வழிபாடு செய்வதுதான் புடவைக்காரி வழிபாடு.

    குல தெய்வத்தை நினைத்துப் புடவை வைத்து சாமி கும்பிடும் குடும்பத்தினர் அந்தப் புடவையை

    ஒரு குடத்திலோ பேழைப் பெட்டியிலோ வைத்துக் கோவிலில் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.

    ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சாமி கும்பிடும் படலம் நடந்தாலும்,

    ஆடி மாதம்தான் மிகப் பெரிய திருவிழாவாகப் புடவைக்காரி வழிபாடு களை கட்டும்.

    பெண்கள், கன்னி தெய்வமாக மாறி, அந்த குடும்பத்தையே பாதுகாப்பதாக ஐதீகம்.

    எனவே ஆடி மாதம் பெண்கள் மறக்காமல், தவறாமல் இந்த கன்னி தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காட்டுவார்கள்.

    • ஆடி மாதம் முழுவதும் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
    • லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள்.

    ஆடி மாதம் முழுவதும் பெண்கள் தினமும் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

    ஆடி மழைக்காலத்தின் துவக்கமாகும்.

    பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு.

    எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.

    திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி,

    மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட

    நல்ல கணவன் அமைவார்கள்.

    மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால்,

    குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

    • நதியைப் பெண்ணாக கருதி வணங்கும் திருநாள் ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது.
    • நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    நதியைப் பெண்ணாக கருதி வணங்கும் திருநாள் ஆடிப்பெருக்கு என்று அழைக்கப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடி மாதம் தொடங்கியதும் மழை பெய்து காவிரி முதலான நதிகளில் வெள்ளம் பெருகியோடும்.

    இதில் ஆடி மாதத்தின், 18-ம் நாள் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது.

    அன்று பெண்கள் தம் குடும்த்தார் மற்றும் உறவினர்களுடன் புத்தாடை அணிந்து,

    சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று,

    நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    இந்த தினத்தில் பெண்களால் செய்யப்படும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.

    • இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.
    • பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அவை:

    தை மாதம் வரும் தை கிருத்திகை,

    கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை

    மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை

    இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.

    ஆடிக்கிருத்திகை தினத்தன்று பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று

    புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.

    குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    • பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான்.
    • மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.

    பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று தான்.

    இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும்

    பெண்கள் சகல தோஷங்களில் இருந்து விடுபட முடியும்.

    அதோடு அவர்களது மாங்கல்யம் பலம் பெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும்.

    நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள்.

    அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.

    • நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா.
    • அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா.

    "அரியும் அரனும் ஒன்றே" என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன்,

    அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள்.

    அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    திருமணம், மகப்பேறு வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி,

    ஈரப் புடவையுடன் கோவில் பிரகாரத்தில் படுத்து விடுவார்கள்.

    இரவு கனவில் அம்மன் அருள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.

    • திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
    • ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைபிடிக்கப்படுவது,

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.

    ஆடி செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து

    வழிபட்டால், பக்தர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    அம்மனுக்கு பிடித்தமான கூழ், கொழுக்கட்டையை படைத்து வழிபட்டால்

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

    மேலும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    துளசியை வழிபடுங்கள்...

    ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும்.

    ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துனமும் தவறாமல் துளசியை வழிபட்டு வந்தால்

    குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைபிடிக்கப்படுவது,

    இந்த தினத்தில் பெண்கள் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும்.

    அதேபோல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால்,

    பெண்களின் சாதகத்தில் காணப்படும் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

    ×