என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Audi car"
- மும்பையில் உள்ள லோகந்த்வாலா சாலையில் தினமும் டீக்கடை அமைக்கப்படுகிறது.
- இன்ஸ்ட்ராகிராமில் வைரலாக பரவி வரும் வீடியோவை பார்த்த இணைய வாசிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
சொகுசு காரான ஆடி காரில் டீக்கடை நடத்தி வரும் மும்பை வாலிபர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடையை அமித் காஷ்யப் மற்றும் மண்ணுசர்மா ஆகியோர் நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள லோகந்த்வாலா சாலையில் தினமும் இந்த கடை அமைக்கப்படுகிறது.
வீடியோவில் அமித் காஷ்யப் மற்றும் மண்ணுசர்மா ஆகிய இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆடி காரை நிறுத்தி இருந்தனர். பின்னர் கார் டிக்கியை திறந்து தங்கள் ஸ்டாலை திறந்து டீ வியாபாரம் செய்வதை காண முடிந்தது.
இன்ஸ்ட்ராகிராமில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
- டேபிள் மீது அடுப்பு, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பார்கோடு போன்றவை வைக்கப்பட்டுள்ளன.
- வீடியோ வைரலாகும் நிலையில் தொழில் யுக்திக்காக இதுபோன்று செய்யலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆடி காரில் வைத்து வாலிபர் ஒருவர் டீ வியாபாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆடி காருக்கு அருகே டேபிள் ஒன்றை வைத்து வாலிபர் டீ வியாபாரம் செய்கிறார். அந்த டேபிள் மீது அடுப்பு, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பார்கோடு போன்றவை வைக்கப்பட்டுள்ளன. காரில் லக்கேஜ்களை வைக்க கூடிய பகுதி திறந்திருக்கிறது. அதில் சில பிளாஸ்குகள் உள்ளது. டீ விற்பனைக்காக இளைஞர் பயன்படுத்தும் கார் ஆடி ஏ6 கார் ஆகும்.
இது செடான் ரகத்தை சார்ந்தது. இதன் தற்போதைய ஆரம்ப விலையே ரூ.61.60 லட்சம் என ஆகும். இது எக்ஸ் ஷோரும் விலை மட்டுமே. ஆன்ரோடு விலையும் சேர்த்தால் இன்னும் சில லட்சம் கூடுதலாகும். இந்த வீடியோ வைரலாகும் நிலையில் தொழில் யுக்திக்காக இதுபோன்று செய்யலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்