search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடந்தது
    • தா.பேட்டை பகுதியில் இருந்து ஆடிவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

    திருச்சி :

    தா.பேட்டை பகுதிகளில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    ஆடி வெள்ளியை முன்னிட்டு தா.பேட்டையில் பிள்ளாதுரை பெரியமாரியம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோன்று செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ஸ்ரீ ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருளினார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் தா.பேட்டை பகுதியில் இருந்து ஆடிவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

    Next Story
    ×