என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ambedkar"
- அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
- நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
சிவகங்கை
சிவகங்கையில் அம்பேத்கர் 132-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்திராநகர் அருகே உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் நகர செயலாளர் ராஜா முன்னிலையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கவுன்சிலர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, கோபி, அவைத்தலைவர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தி.மு.க. சார்பில் நகரசெயலாளரும், நகர் மன்ற தலைவருமான துரைஆனந்த் தலைமையில் நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ராஜ பாண்டி, சரவணன், கார்த்தி கேயன் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் அ கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் பொதுக்குழு உறுப்பினர் சோணை, மதியழகன் வட்டார தலைவர், சிதம்பரம், வெள்ளைசாமி, உடையார், முன்னாள் கவுன்சிலர்கள் சண்முக ராஜன், மோகன்ராஜ், மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவர் சையதுஇப்ராஹீம்,, மாவட்ட மகளிர்தலைவி இமயமடோனா, விஜயகுமார், வள்ளியப்பன், லட்சுமணன், சீனிவாசன், மற்றும் பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்,
தமிழ்நாடு கலை இலக்கியச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் இளங்கோ, மாநிலச் செயலர் செல்வ குமார், மாவட்டத் தலைவர் சரோஜினி, செயலர் குண சேகரன், துணைத்தலைவர் தமிழ்ச் செல்வம், கிளைத்தலைவர் ராசாமணி, கிளைச் செயலர் பிரபா கரன், குமரேசன், செந்தில் குமார், கருப்புச்சாமி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணகி, சிவகங்கை நகர செயலாளர் மருது, மாவட்ட துணைச் செயலாளர் கோபால், நகரத் துணைச் செயலாளர் பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னக் கருப்பு, மாதர் சங்க நிர்வாகிகுஞ்சரம் காசிநாதன், தொழிற்சங்க நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
- அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
- சங்க செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் தலைமையில் பா.ம.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் அக்கிம், மாவட்ட தலைவர் சந்தானதாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மாவட்ட பசுமை தாயகம் செயலாளர் கர்ண மகாராஜா முன்னிலை வகித்தார்.கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி வரவேற்றார்.
மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட பசுமை தாயகம் தலைவர் திருஞானம், கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர்,மாவட்ட இளைஞர் சங்க தலைவர் பாலா,மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ்,மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் செரீப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி:
நந்திவரம் கூடுவாஞ்சேரி அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞர் கேசவலு தலைமையில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கவுன்சிலர்கள் ஆர்.கலைச்செல்வன், தேவி தனசேகரன், எம்.கண்ணன், முன்னாள் கவுன்சிலர் என்.சரவணன் நிர்வாகிகள் பார்கவி வெங்கடேசன், பெருமாள், டெய்லர் கன்னியப்பன், டி.பிரபு, ஆர்.முருகன், அருள் குமரன், பப்பு, அசோகன், குமரன், செல்வராஜ், அரவிந்தராஜா, ஆதித்தன், எம்.கோதண்டம், கே.எஸ்.விஜயகுமார், பினகபாணி, எஸ்.நட்ராஜ், என்.மாணிக்கவாசகம், சுந்தரம், தங்கவேல், வி.கார்த்திக், எம்.கே.முனியாண்டி, மகேஷ், மாரி, தணிகாச்சலம், தனசேகர், அருண், மணிகண்டன், பிரவின், தினேஷ், நித்தியானந்தம், ராஜ்குமார்,சூர்யா,எஸ்.வினோத், வி.விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+2
- ஏ.டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை கல்வீசி விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டதால் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலைக்கு பல்வேறு தரப்பினரும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இரவில் முளைப்பாரி எடுத்து வானவேடிக்கை முழங்க பலர் ஊர்வலமாக வந்தனர். அப்போது யார் முதலில் சென்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவது என்பதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டதால் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன்பிறகு இருதரப்பினரும் கலைந்து சென்றபோது போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்கினர். அப்போது போலீஸ் நிலையத்தில் காவலர்கள் இல்லாததால் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், போலீஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் கல்வீசி தாக்கியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரையும் அந்த கும்பல் கல்வீசி தாக்கினர். ஏ.டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை கல்வீசி விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் பலத்த காயமடைந்தனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபினவ்குமார், மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஸ்டோங்கரே வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இரவு முழுவதும் விடியவிடிய தேடுதல் வேட்டை நடத்தி கலவரத்தில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் போலீசாரிடம் ஒருதரப்பை சேர்ந்தவர்களை மட்டுமே அதிகளவில் கைது செய்திருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தனர்.
கல்வீச்சு சம்பவத்தால் பெரியகுளத்தில் பதட்டமான சூழல் உருவானதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இன்றும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் முக்கிய இடங்களில் பேரிகார்டுகளை போட்டு பிரச்சினை ஏற்படாத வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு அம்பேத்கார் பிறந்தநாள்விழாவில் இதேபோன்று மோதல் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வந்தனர் என்றும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த ஆண்டு இரவு நேரத்தில் பிரச்சினைக்குரிய இடத்தில் அதிகளவு மக்களை அனுமதித்தால் கலவரம் வெடித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
- அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
- ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அம்பேத்கர் சிலையை இன்று மதியம் 2 மணியளவில் திறந்து வைக்கிறார்.
இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஸ்தூபியை நிர்மாணித்த பிறகு, சிலையின் பாகங்கள் டெல்லியில் தயாரிக்கப்பட்டு ஐதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டன. கனரக கிரேன்களின் உதவியுடன் அவை முறையாக நிறுவப்பட்டுள்ளன.
இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வலிமையான உலோகப் பொருட்கள் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பாகத்தில் இருந்து, சிலையை முழுவதுமாக கண்டுக்களிக்க படிக்கட்டு மற்றும் சாய்வுதளத்துடன் 15 பேர் அமரக்கூடிய 2 லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்படுகிறது.நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வைக்கப்பட உள்ளது. சிலையின் கீழ், தூணில் உள்ள நினைவு கட்டிடத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான முக்கிய நிகழ்வுகள் அடங்கிய அருங்காட்சியகம் மற்றும் புகைப்படத் தொகுப்பு இங்கு நிறுவப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே ஆடியோ காட்சி அறைகள் உள்ளன.
நினைவிடத்திற்கு வெளியே பசுமைக்காக. 2.33 ஏக்கர் காலி நிலம். ராக் கார்டன், லேண்ட்ஸ்கேப்பிங், தோட்டம், நீர் ஊற்று உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 450 கார்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 750 பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 50 ஆயிரம் பேர் உட்காருவதற்கு வசதியாக நாற்காலிகள் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
- சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப் போக்கை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
- அசோக் நகரில் உள்ள 'வெளிச்சம்' அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
சென்னை:
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனநாயகம் காப்போம் சிறுத்தைகள் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப் போக்கை கண்டித்து இந்த அணிவகுப்பு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை நடைபெறுகிறது.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்று கூடி அணிவகுப்பாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.
சென்னையில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை அணிவகுப்பு நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எல்.ஜி. சாலை வரை மத்திய அரசுக்கு எதிராக அணிவகுத்து செல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, ரவிசங்கர், வி.கோ.ஆதவன், அன்பு செழியன், அம்பேத் வளவன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள 6 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிகிறார்கள்.
முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் மணிமண்ட பத்தில் நாளை திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் அசோக் நகரில் உள்ள 'வெளிச்சம்' அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
தொடர்ந்து கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
- அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை:
சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் காவி உடை அணிவது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவரை அவமதித்த இந்து மக்கள் கட்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
இந்து மக்கள் கட்சியினர் அண்ணல் அம்பேத்கரை வேண்டும் என்றே அவமதிப்பதாகவும், வரலாற்றை மாற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களையும் இதே போல் இழிவுபடுத்தும் வகையில் அந்த அமைப்பு செயல்படுவதாகவும் இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
இதே போல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
- வக்கீல்.கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அம்பேத்காரின் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் மாலை அணிவித்தார்.
- நாஞ்சிக்–கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை ெதற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பாரதரத்னா டாக்டர் அம்பேத்காரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அம்பேத்காரின் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் லெட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணித்தலைவர் கலைச்செல்வன், சண்முகநாதன், நாஞ்சிக்கோட்டை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறியாளர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் தாக்கியதாக கூறி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்றவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டபட்டி கிராமத்தில் உள்ள காலனியில் புதிதாக அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. உரிய அனுமதி பெறாமல் வைக்கபட்ட சிலையை அகற்ற காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலித் அமைப்புகள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சிலையின் முன்பாக அமர்ந்து, சிலையை எடுத்தல் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அப்போது அங்கு வந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு வந்து பேசினார். ஆனால், அவரது பேச்சை யாரும் கேட்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை அகற்றி எடுத்து செல்லப்பட்டது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களை சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சிலை விவகாரம் பிரச்சனை ஓய்ந்ததால், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டு, ஓமலூரில் கொண்டு வந்து விடப்பட்டனர்.
இந்தநிலையில், இளம்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர் சமுராய்குருவை மட்டும் தனியாக வாகனத்தில் அழைத்து சென்றதாகவும், இதுபற்றி அவர் கேட்டபோது, மேச்சேரி இன்ஸ்பெக்டர் அவரை தாக்கியதாகவும் கூறி ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டெல்லியில் இன்று ‛அம்பேத்கரும் மோடியும்' என்ற புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.
- பிரதமர் மோடி பாபாசாகேப்பின் தொலைநோக்குப் பார்வையை மெய்ப்பிக்கிறார்.
டெல்லியில் இன்று 'புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' என்ற நிறுவனம் சார்பில், 'அம்பேத்கரும் மோடியும்- சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும்' என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான இளையராஜா அணிந்துரை எழுதியிருந்தார். ஆனால் இளையராஜா இந்த விழாவில் கலந்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.
புத்தகத்தில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு, இந்தியா குறித்த அவரின் தொலைநோக்குப் பாா்வையை விவரிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் தொலைநோக்குப் பாா்வை திறம்பட அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்ட பிரதமா் மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகத்தை டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
பின்னர் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது:-
அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு தலைவரான பாபாசாகேப், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை அப்போது நிராகரித்தார். ஆனால், சிக்கலான சம்பவங்களுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அது பாபாசாகேப்பின் விருப்பத்திற்கு எதிராக இருந்தது.
ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்த ஏற்றத்தாழ்வு, மோடி அரசின் முயற்சியைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2019-ல் நீக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த உத்தரவு பாபாசாகேப்பின் லட்சியங்களை நிறைவேற்றுகிறது. இந்திய ஜனாதிபதி என்ற முறையில் இந்த உத்தரவில் கையெழுத்திடும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
சுதந்திரப் போராட்டத்தின் போது, நாடு வகுப்புவாதத்தின் கோரப்பிடியில் இருந்தது. அப்போது, மக்களை மத ரீதியில் பார்க்கக் கூடாது என்று மூத்த தலைவர்களிடமிருந்து பரிந்துரைகள் இருந்தன.
பெரும்பாலான தலைவர்கள் நாம் முதலில் இந்தியர்கள் என்றும் பின்னர்தான் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்றும் சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
ஆனால் பாபாசாகேப்பின் சிந்தனை உயர்ந்த மட்டத்தில் இருந்தது. முதலில் நாம் இந்தியர்கள், பின்னர் இந்தியர்கள் மற்றும் இறுதிவரை இந்தியர்கள் என்று சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியத்தன்மையே நமது உண்மையான அடையாளம், மதம், ஜாதி, பிரிவு ஆகியவற்றுக்கு இங்கு இடமில்லை என்றும் அவர் கூறினார்.
அதுபோல், பிரதமர் மோடியும் இந்தியாதான் முதல் என்று கூறுகிறார். மோடி பாபாசாகேப்பின் தொலைநோக்குப் பார்வையை மெய்ப்பிக்கிறார். மோடி அம்பேத்கரின் உண்மையான சீடர் என்பதற்கு இன்று வெளியாகியுள்ள புத்தகமே சாட்சி.
அம்பேத்கர் வகுத்த கொள்கைகளின்படி, நல்லாட்சிக்காகவும், சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் பிரதமர் பல முயற்சிகளை எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்