search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பேத்கார்"

    • வக்கீல்.கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அம்பேத்காரின் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் மாலை அணிவித்தார்.
    • நாஞ்சிக்–கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ெதற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பாரதரத்னா டாக்டர் அம்பேத்காரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அம்பேத்காரின் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் மாலை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் லெட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணித்தலைவர் கலைச்செல்வன், சண்முகநாதன், நாஞ்சிக்கோட்டை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறியாளர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று நினைவு தினம்
    • நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில்:

    அம்பேத்கார் நினைவு நாளையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணை செயலாளர் அல்காலித் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தினகரன் மாலை அணிவித்தார்.

    தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை கழக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், துணை செயலாளர் பூதலிங்கம், ஆதி திராவிட அணி அமைப்பாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், செல்வன், பிராங்கிளின், மாநகர செயலாளர் ஆனந்த், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் மாலை அணிவித்தார். தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம்,பொன்சுந்தர்நாத், அணி செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன், மாநகர கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக் ஷயா கண்ணன், விவசாய அணி தலைவர் வடிவை மாதவன் மற்றும் சந்திரன், சந்துரு,சகாயராஜ், வெங்கடேஸ்,ரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்தனர். மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் மனோகரன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அஜித்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், அலெக்ஸ்,எஸ்.சி., எஸ்.டி.பிரிவு தலைவர் மணிகண்டன், ராஜபாண்டியன், டைசன், செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ×