search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை தெற்கு  மாவட்ட காங்கிரஸ் சார்பில் அம்பேத்காரின் நினைவு தினம் அனுசரிப்பு
    X

    டாக்டர் அம்பேத்காரின் சிலைக்கு மாலை அணிவிப்பு.

    தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அம்பேத்காரின் நினைவு தினம் அனுசரிப்பு

    • வக்கீல்.கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அம்பேத்காரின் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் மாலை அணிவித்தார்.
    • நாஞ்சிக்–கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ெதற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பாரதரத்னா டாக்டர் அம்பேத்காரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அம்பேத்காரின் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் மாலை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் லெட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணித்தலைவர் கலைச்செல்வன், சண்முகநாதன், நாஞ்சிக்கோட்டை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறியாளர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×