search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை
    X

    அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை

    • அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் அம்பேத்கர் 132-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்திராநகர் அருகே உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் நகர செயலாளர் ராஜா முன்னிலையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கவுன்சிலர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, கோபி, அவைத்தலைவர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    தி.மு.க. சார்பில் நகரசெயலாளரும், நகர் மன்ற தலைவருமான துரைஆனந்த் தலைமையில் நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ராஜ பாண்டி, சரவணன், கார்த்தி கேயன் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் அ கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் பொதுக்குழு உறுப்பினர் சோணை, மதியழகன் வட்டார தலைவர், சிதம்பரம், வெள்ளைசாமி, உடையார், முன்னாள் கவுன்சிலர்கள் சண்முக ராஜன், மோகன்ராஜ், மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவர் சையதுஇப்ராஹீம்,, மாவட்ட மகளிர்தலைவி இமயமடோனா, விஜயகுமார், வள்ளியப்பன், லட்சுமணன், சீனிவாசன், மற்றும் பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்,

    தமிழ்நாடு கலை இலக்கியச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் இளங்கோ, மாநிலச் செயலர் செல்வ குமார், மாவட்டத் தலைவர் சரோஜினி, செயலர் குண சேகரன், துணைத்தலைவர் தமிழ்ச் செல்வம், கிளைத்தலைவர் ராசாமணி, கிளைச் செயலர் பிரபா கரன், குமரேசன், செந்தில் குமார், கருப்புச்சாமி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணகி, சிவகங்கை நகர செயலாளர் மருது, மாவட்ட துணைச் செயலாளர் கோபால், நகரத் துணைச் செயலாளர் பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னக் கருப்பு, மாதர் சங்க நிர்வாகிகுஞ்சரம் காசிநாதன், தொழிற்சங்க நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    Next Story
    ×