search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alangulam"

    • பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.

    ஆலங்குளம்:-

    ஆலங்குளம் பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியில், ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.

    ஆலங்குளம் பேரூராட்சி, 11-வது வார்டு, அண்ணாநகர் 3-வது தெரு 3-வது சந்து பகுதியில், 15-வது மானியக்குழு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில், 11-வது வார்டு உறுப்பினர் வென்சிராணி, 12-வது வார்டு உறுப்பினர் எஸ்.டி.சாலமோன்ராஜா, தொழிலதிபர் ஏ.மோகன்லால், சீதாராமன், பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் அருள்ராஜ், செல்வின், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளி கட்டிடத்தில் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
    • புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 13-ந் தேதி நடைபெற்றது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக தனியார் பள்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆலங்குளம்- தென்காசி சாலையில் கழுநீர்குளம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் 16 ஏக்கர் நிலத்தில், புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.11.33 கோடி ஒதுக்கீடு செய்தது.

    இதையடுத்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 13-ந் தேதி நடைபெற்று, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலர் சிவபத்மநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டிட பணிகளை தரமாக அமைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

    கீழப்பாவூர் ஒன்றியக் குழுத் தலைவர் காவேரி சீனிதுரை, ஆலங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலர்கள் செல்லத்துரை, அன்பழகன், கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க. செயலர் சீனிதுரை, கழுநீர்குளம் ஊராட்சித் தலைவர் முருகன், நகர செயலர்கள் ஆலங்குளம் நெல்சன், கீழப்பாவூர் ஜெகதீசன், தொழிலதிபர் மணிகண்டன் பொறி யாளர்கள் சரத்குமார், நல்லசிங் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • 50 மாணவிகள் போலீசாரின் பணிகளை காண சென்று இருந்தனர்.
    • மாணவிகளுக்கு போலீசார் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் கூறினர்.

    ஆலங்குளம்:

    உலக பெண்கள் குற்ற தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 50 மாணவிகள் போலீசாரின் பணிகளை காண சென்று இருந்தனர்.

    அவர்களுக்கு போலீஸ் நிலையத்தை சுற்றிக் காண்பித்த போலீசார், அவர்களுக்கு சமுதாயத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், அச்சமின்றி சமுதாயத்தை எதிர்கொள்வது எப்படி? என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் கூறினர். தொடர்ந்து மாணவிகளின் எதிர்கால திட்டம் குறித்து இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

    அப்போது அங்கிருந்த மாணவிகளில் 4 பேர் காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதுதான் தனது குறிக்கோள் எனக் கூறினர். அவர்களை பாராட்டிய இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தனது இருக்கையில் அந்த மாணவிகளை அமர வைத்து அவர்களை புகைப்படம் எடுத்து உற்சாகப்படுத்தினார்.

    • ரூ.17 கோடி செலவில் நெட்டூர் சாலை அமைக்கும் போது இந்த 400 மீட்டர் பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.
    • பேவர் பிளாக் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் காய்கனி மார்க்கெட் சாலையை வியாபாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    ரூ.17 கோடி செலவில் நெட்டூர் சாலை அமைக்கும் போது இந்த 400 மீட்டர் பகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் கலெக்டர், நெடுஞ்சாலைத்துறையினர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

    இதையடுத்து அதனை பேவர் பிளாக் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணி தொடங்கப்பட்டு கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறமும் சில அடி இடைவெளி விட்டு அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி அமைத்தால் மழை நீர் தேங்கி வெளியேற இயலாது, விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சாலை முழுவதும் பேவர் பிளாக் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காய்கனி சந்தை வியபாரிகள் முற்றுகையிட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.

    தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பூமிநாதன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில்தான் சாலை அமைக்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வியாபாரிகள் தரப்பில் இதற்கு ஒப்புக்கொள்ளாததால் தென்காசி கலெக்டரிடம் புகார் அளித்து தீர்வு காண முடிவு செய்தனர்.

    • ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை 4 வழிச்சாலை விரிவாக்கத்தின் காரணமாக அகற்றப்பட உள்ளது
    • தற்போது உள்ள காமராஜர் சிலையை சேதம் அடையாமல் அகற்றி புதிய இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நெல்லை:

    ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை 4 வழிச்சாலை விரிவாக்கத்தின் காரணமாக அகற்றப்பட உள்ளதால், பெருந்தலைவர் காமராஜர் சிலையை பாதுகாத்து மாற்று இடத்தில் அமைப்பதற்காக நான் அதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு செய்தேன். அப்போது ஆலங்குளம் வட்டம் ஆலங்குளம் கிராமம் எண் 424-ல் ஒரு சென்ட் இடம் ஒதுக்கி தந்து காமராஜர் சிலையை அமைப்பதற்கு விரைவில் ஆவன செய்ய, நடந்து முடிந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது நான் எழுப்பிய வினாவின்அடிப்படையில், அந்த இடம் காமராஜர் சிலை அமைப்பதற்கு ஓதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்.

    மேலும் தற்போது உள்ள காமராஜர் சிலையை சேதம் அடையாமல் அகற்றி புதிய இடத்தில் காமராஜர் சிலையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சென்னல்தா புதுக்குளம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நடராஜன் பல்பை கழட்டிவிட்டு புதிய பல்பு மாட்டிக்கொண்டிருந்தார்
    • அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள சென்னல்தா புதுக்குளம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 62). இவர் தனது வீட்டில் எரியாமல் இருந்த பல்பை கழட்டிவிட்டு புதிய பல்பு மாட்டிக்கொண்டிருந்தார்.

    அப்போது அவரது உடலில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை பாவூர்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்ட ர்கள் தெரிவித்துவிட்டனர்.

    • அனைத்து துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த திட்ட முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.
    • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், குத்தப்பாஞ்சான் ஊராட்சி, காளத்திமடம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாமின் மூலமாக அனைத்து துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த திட்ட முகாம், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாமினை பற்றி, பொதுமக்களுக்கு திட்ட உரையினை விளக்கி பேசினார்.

    மேலும் குத்தப்பாஞ்ச் சான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைகளின் மூலமாகவும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ், யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் குத்தபாஞ் ளசான் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணிகுமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்பு பசுபதிதேவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுதா சின்னத்தம்பி, ஒப்பந்ததாரர் கணேஷ் பாண்டியன், அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் என பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்
    • நெட்டூரில் உள்ள சமுதாய நல கூடத்தில் பெண்களுக்கு வளையல் அணிந்து சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே ஆ.மருதபுரத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 145 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், செல்வி மணிமாறன் தலைமை தாங்கினர். தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சக்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நெட்டூரில் உள்ள சமுதாய நல கூடத்தில் பெண்களுக்கு வளையல் அணிந்து சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யாமணிகண்டன், நெட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, தொழிலதிபர் மாரி துரை, அரசு ஒப்பந்ததாரர் மணிமாறன், ராமகிருஷ்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • முகப்பு விளக்கில் கரும்பு நிற ஸ்டிக்கர் ஒட்டாததால் எதிர்வரும் வாகன ஒட்டிகளுக்கு அதிக விபத்துகள் ஏற்பட காரணமாகிறது.
    • முகப்பு விளக்குகளில் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு .

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் காவல்துறையுடன் சேர்ந்து சிவகார்திகேயன் நற்பணி மன்றத்தினர் வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாகனத்தின் முகப்பு விளக்கில் கரும்பு நிற ஸ்டிக்கர் ஒட்டாததால் எதிர்வரும் வாகன ஒட்டிகளுக்கு இடையூராக இருந்து அதிக விபத்துகள் ஏற்பட காரணமாகிறது. இதனை தவிர்க்கும் விதமாக ஆலங்குளம் போலீசாருடன் இணைந்து சிவகார்திகேயன் நற்பணி மன்றத்தினர் முகப்பு விளக்குகளில் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்வினை ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தொடங்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் சிவகார்திகேயன் நற்பணி மன்ற தலைவர் ராஜா, பசுமை இயக்க தலைவர் சாமுவேல் பிரபு, பூ உலலை காப்போம் மன்றத்தின் ஆலோசகர் இளங்கோ , மன்ற செயலாளர் தர்மேந்திரன், பொறுப்பாளர்கள் சங்கர், முருகன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளன.
    • பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் தத்தளித்து சென்றன.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளன.

    மார்க்கெட் சாலை

    இதில் குறிப்பன்குளம், குருவன்கோட்டை, நெட்டூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பிரதான சாலையாக ஆலங்குளம் தையல்நாயகி மார்க்கெட் சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலையில் காய்கறி மார்க்கெட் இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திவரும் மார்க்கெட் சாலையானது தொடர்மழையால் மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    மரக்கன்று நட்டினர்

    அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் தத்தளித்து சென்றன. மேலும் சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் இருசக்கர வாகனங்களில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். சாலையின் இருபுறமும் இயங்கி வந்த சிறு வியாபாரிகளின் கடைகளுக்கும் பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் அந்த சாலையில் திடீரென மரக்கன்றுகளை நட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். பல ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து மார்க்கெட்டுக்கு செல்லும் சாலையானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    உடனடியாக நெடுஞ்சாலைத்துறை இதனை கவனத்தில் எடுத்து சாலையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சோனாத்துக்கும் 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சோனாத் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் சோனாத்(வயது 21). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை கடந்த 2 வருடமாக அமல்ராஜ் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிறுமியை நேரில் பார்த்து பேசவேண்டும் என்று கூறி அமல்ராஜ் அவரை நேரில் அழைத்துள்ளார். அதனை நம்பிய சிறுமி ஆலங்குளத்திற்கு சென்றுள்ளார். அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சோனாத், ஆசை வார்த்தை கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சோனாத்தை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சோனாத்திடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

    • ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் பகுதியில் ஒரு தனியார் மில் வளாகத்தில் சிலர் லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்தி கொண்டிருந்தனர்.

    நெல்லை:

    ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் பகுதியில் ஒரு தனியார் மில் வளாகத்தில் சிலர் லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்தி கொண்டிருந்தனர்.

    உடனே அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் நெட்டூரை சேர்ந்த சண்முகநாதன்(வயது 42), குறிப்பன்குளத்தை சேர்ந்த முருகன் (48), வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த தங்கவேல் என்பதும் தெரியவந்தது.

    மேலும் தங்கவேல் ரைஸ்மில் உரிமையாளர் என்பதும், முருகன் வாகன உரிமையாளர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வேன் மற்றும் 850 கிலோ ரேஷன் அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.



    ×