என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆலங்குளத்தில் சேறும் சகதியுமான சாலையில் மரக்கன்று நட்ட வியாபாரிகள்
- தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளன.
- பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் தத்தளித்து சென்றன.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளன.
மார்க்கெட் சாலை
இதில் குறிப்பன்குளம், குருவன்கோட்டை, நெட்டூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பிரதான சாலையாக ஆலங்குளம் தையல்நாயகி மார்க்கெட் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையில் காய்கறி மார்க்கெட் இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திவரும் மார்க்கெட் சாலையானது தொடர்மழையால் மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
மரக்கன்று நட்டினர்
அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் தத்தளித்து சென்றன. மேலும் சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் இருசக்கர வாகனங்களில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். சாலையின் இருபுறமும் இயங்கி வந்த சிறு வியாபாரிகளின் கடைகளுக்கும் பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் அந்த சாலையில் திடீரென மரக்கன்றுகளை நட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். பல ஆண்டுகளாக ஆலங்குளத்தில் இருந்து மார்க்கெட்டுக்கு செல்லும் சாலையானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
உடனடியாக நெடுஞ்சாலைத்துறை இதனை கவனத்தில் எடுத்து சாலையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்