search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
    X

    ரேஷன் அரிசியுடன் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.


    ஆலங்குளம் அருகே லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

    • ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் பகுதியில் ஒரு தனியார் மில் வளாகத்தில் சிலர் லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்தி கொண்டிருந்தனர்.

    நெல்லை:

    ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் பகுதியில் ஒரு தனியார் மில் வளாகத்தில் சிலர் லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்தி கொண்டிருந்தனர்.

    உடனே அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் நெட்டூரை சேர்ந்த சண்முகநாதன்(வயது 42), குறிப்பன்குளத்தை சேர்ந்த முருகன் (48), வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த தங்கவேல் என்பதும் தெரியவந்தது.

    மேலும் தங்கவேல் ரைஸ்மில் உரிமையாளர் என்பதும், முருகன் வாகன உரிமையாளர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு வேன் மற்றும் 850 கிலோ ரேஷன் அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.



    Next Story
    ×