search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Girl Students"

    • 50 மாணவிகள் போலீசாரின் பணிகளை காண சென்று இருந்தனர்.
    • மாணவிகளுக்கு போலீசார் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் கூறினர்.

    ஆலங்குளம்:

    உலக பெண்கள் குற்ற தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 50 மாணவிகள் போலீசாரின் பணிகளை காண சென்று இருந்தனர்.

    அவர்களுக்கு போலீஸ் நிலையத்தை சுற்றிக் காண்பித்த போலீசார், அவர்களுக்கு சமுதாயத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், அச்சமின்றி சமுதாயத்தை எதிர்கொள்வது எப்படி? என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் கூறினர். தொடர்ந்து மாணவிகளின் எதிர்கால திட்டம் குறித்து இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

    அப்போது அங்கிருந்த மாணவிகளில் 4 பேர் காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதுதான் தனது குறிக்கோள் எனக் கூறினர். அவர்களை பாராட்டிய இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தனது இருக்கையில் அந்த மாணவிகளை அமர வைத்து அவர்களை புகைப்படம் எடுத்து உற்சாகப்படுத்தினார்.

    ×