search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Town panchayath president"

    • பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.

    ஆலங்குளம்:-

    ஆலங்குளம் பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியில், ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.

    ஆலங்குளம் பேரூராட்சி, 11-வது வார்டு, அண்ணாநகர் 3-வது தெரு 3-வது சந்து பகுதியில், 15-வது மானியக்குழு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் ஏ.சுதா மோகன்லால் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில், 11-வது வார்டு உறுப்பினர் வென்சிராணி, 12-வது வார்டு உறுப்பினர் எஸ்.டி.சாலமோன்ராஜா, தொழிலதிபர் ஏ.மோகன்லால், சீதாராமன், பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் அருள்ராஜ், செல்வின், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஆறுமுகநேரி பேயன்விளை ஐயன்நகர் பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை இருந்து வந்தது. அங்கு புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
    • ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேயன்விளை ஐயன்நகர் பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அங்கு புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஆறுமுகநேரி உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் வழிகாட்டுதலில் ரூ.9.3 லட்சம் மதிப்பில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.

    இதன் தொடக்க விழா ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் அ.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. உதவி மின் பொறியாளர் ஜெபஸ் சாம் முன்னிலை வகித்தார். போர்மேன் திரவியம் வரவேற்று பேசினார்.

    ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார். 8-வது வார்டு கவுன்சிலர் புனிதா சேகர், நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன், காமராஜ், அஜித், விஜய், ராஜன், மகாராஜன், முத்துசூர்யா, வனகார்த்திக், வேல் குமார், பேச்சிமுத்து, மாயாண்டி, மாரியப்பன், ராமமூர்த்தி, ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×