search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் - 145 மரக்கன்றுகள் நடப்பட்டது
    X

    தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்ட போது எடுத்தபடம்.

    ஆலங்குளம் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் - 145 மரக்கன்றுகள் நடப்பட்டது

    • தி.மு.க. இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்
    • நெட்டூரில் உள்ள சமுதாய நல கூடத்தில் பெண்களுக்கு வளையல் அணிந்து சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே ஆ.மருதபுரத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 145 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், செல்வி மணிமாறன் தலைமை தாங்கினர். தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சக்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நெட்டூரில் உள்ள சமுதாய நல கூடத்தில் பெண்களுக்கு வளையல் அணிந்து சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யாமணிகண்டன், நெட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, தொழிலதிபர் மாரி துரை, அரசு ஒப்பந்ததாரர் மணிமாறன், ராமகிருஷ்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×