search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accusation"

    • அருப்புக்கோட்டை நகராட்சியில் பா.ஜ.க. பிரமுகர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    • நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    தி.மு.க. கவுன்சிலர் மணி முருகன்:- ெரயில்வே பீடர் ரோட்டில் புதிது புதிதாக தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன. இதனால் அந்த பகுதியில் அதிகாலை முதலே மதுபானங்கள் விற்பனை நடப்பதாகவும், மது பிரியர்கள் மதுபானங்களை குடித்துவிட்டு அந்த சாலையிலேயே போட்டு விட்டு சென்று விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    எஸ்.பி.கே. பள்ளி செல்லும் பாதையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து கறிக்கடை நடத்தி வருகிறார். அவர் குப்பைகளை ரோட்டில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகிறார். இதுபற்றி கேட்டால், நான் பி.ஜே.பி.க்காரன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்.

    இதற்கு பா.ஜனதா கவுன்சிலர் முருகானந்தம் எதிர்ப்பு தெரிவித்தார். பா.ஜனதா கட்சியினரை அவன், இவன் என்று ஒருமையில் கூற வேண்டாம். உங்கள் குறைகளை கூறுங்கள். ஒருமையில் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், 2 கவுன்சிலர்களையும் அமைதியாக இருக்கும்படி கூறினார்.

    பின்பு கவுன்சிலர்கள் கூறிய கோரிக்கை கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நகரசபை தலைவர் உறுதி அளித்தார்.

    • சரிவர பணிக்கு செல்வதில்லை என எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
    • மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கூரத்தாங்குடி ஊராட்சி மேலநாகலூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி (வயது44).

    இவர் கூரத்தாங்குடி ஊராட்சி செயலராக பணியில் இருந்த நிலையில், சரிவர பணிக்கு செல்வதில்லை என எழுந்த குற்றச்சாட்டு காரணமாக கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த அவரது மனைவி வீட்டிற்கு திரும்பி வந்தபோது மாசிலாமணி தூக்கு மாட்டி

    இறந்திருப்பது கண்டு அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாசிலாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மின்கம்பத்திலிருந்து செல்லக்கூடிய மின்கம்பிகளும் மிகவும் தாழ்ந்த நிலையில் தொட்டு விடும் தூரத்தில் தான் செல்கிறது.
    • அரசு அலுவலர்கள், பயனாளிகள் சென்று வரக்கூடிய சூழலில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா அலுவலகம் அருகே உள்ள மின் கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது .

    அதிலிருந்து செல்லக்கூ டிய மின் கம்பிகளும் மிகவும் தாழ்ந்த நிலையில் தொட்டு விடும் தூரத்தில் தான் செல்கிறது. தினமும் இந்த பகுதியில் சுமார் 100 முதல் 150 பேர் சென்று வருகின்றனர். இதில் அங்கு பணி புரியும் அரசு அலுவலர்கள் பயனாளிகள், தெருவில் வசிப்பவர்கள், அனைவரும் சென்று வரக்கூடிய சூழலில், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.இது குறித்துபலமுறைபுகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம்சா ட்டுகின்றனர்.எனலே அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறும் முன்னர் உடனடியாக மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு வணிகர்களின் கோரிக்கைகளை பிரதமர் மோடி கேட்பதில்லை எனவும், பெரும் தொழில் அதிபர்களுக்கு மட்டுமே அவர் செவிசாய்ப்பார் என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #ParliamentElection #RahulGandhi #PMModi
    திருச்சூர்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கேரளாவில் பிரசாரம் தொடங்கினார். இதற்காக மாநிலம் முழுவதும் ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசினார்.

    அந்தவகையில் திருச்சூர் அருகே உள்ள திரிப்ரயார் பகுதியில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் தேசிய மீனவர் பாராளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மீனவர்கள் ராகுல் காந்தியிடம் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

    இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    மீனவர்கள் விவகாரத்தில் என்னுடைய உறுதி என்னவென்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றிபெறும் தருணத்தில், நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களும் டெல்லியில் தங்களுக்கான தனி அமைச்சகத்தை பெறுவார்கள். இதற்கு தாங்கள் தகுதியானவர்கள் என்பதை தினந்தோறும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.



    நான் மோடியை போல பொய் வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன். எனது உரையை நீங்கள் கவனித்துப்பாருங்கள். நான் ஒரு விஷயத்தை கூறுகிறேன் என்றால், அது குறித்து முடிவு செய்தே பேசுவேன்.

    இன்றைய மத்திய அரசில் அனில் அம்பானி அல்லது நிரவ் மோடிக்குத்தான் ஏராளமான செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை 10 வினாடிக்குள் நிறைவேற்ற முடிகிறது. அதை சத்தம் போட்டும் கேட்கவேண்டாம், ரகசியமாக கேட்டாலே கிடைத்து விடுகிறது.

    ஆனால் மீனவர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட எளிய மனிதர்கள், தங்களை கவனிக்குமாறு அரசுக்கு முன் நின்று கத்துகிறார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை மோடி கேட்பதில்லை. தொழிலதிபர்களுக்கு மட்டுமே அவர் செவிசாய்ப்பார்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    முன்னதாக காசர்கோட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான கிரிபேஷ், சரத்லால் ஆகியோரின் வீட்டுக்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்தகுமாரின் வீட்டுக்கும் அவர் சென்றார்.

    இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களால் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் சுகைபின் குடும்பத்தினரை கண்ணூர் விமான நிலையத்தில் ராகுல் காந்தி சந்தித்தார். சுமார் ½ மணி நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்த அவர், அவர்களுக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி வழங்கும் என உறுதியளித்தார்.

    ராகுல் காந்தியின் இந்த பயணத்தின் போது கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  #ParliamentElection #RahulGandhi #PMModi
    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பிரிவினை பேசி அரசியல் லாபம் பெற்றவர் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். #TamilisaiSoundararajan #Vaiko
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    5 மாநில தேர்தலில் நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சியை கொடுத்துவிட்டு தான் வாக்கு சேகரித்து உள்ளோம். கருத்துக்கணிப்புகள் எப்படி இருந்தாலும் தெலுங்கானா தவிர்த்து மற்ற மாநிலங்களில் தேர்தலில் வெற்றிப் பெறுவோம். பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது . பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் பிரதமர் மோடிக்கு பங்கு உள்ளது.



    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பிரிவினை பேசி அரசியல் லாபம் பெற்றவர். அவர் ஆக்கப்பூர்வமற்ற வகையில் நிலை தடுமாறி பேசி வருகிறார்.

    மத்திய நீர்வளத்துறை ஆணையரே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது.

    தலைகீழாக நடந்தாலும் தாமரை மலராது என்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதற்கு தமிழிசை கூறியதாவது:

    தாமரை மலர தலைகீழாக நடக்க தேவையில்லை. நேர்மையாக நடந்தால் போதும். இடதுசாரிகள் ஒரு மாநிலத்தில் தான் ஆட்சியில் உள்ளனர். ஆனால் பா.ஜனதா 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. காவியை பற்றி சிவப்புகள் கவலைப்பட வேண்டாம். மக்கள் வாழ்விற்காக தான் தாமரை மலர வேண்டும் என்கிறோம். தி.மு.க. கூட்டணி பலவீனமான கூட்டணி, எங்கள் கூட்டணியை பற்றி முத்தரசன் கவலைப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Vaiko
    பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பல லட்சம் பேரின் வாழ்க்கையை அழித்த தற்கொலை தாக்குதல் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #Demonetisation #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இந்தியா எத்தனையோ சோகங்களை கண்டுள்ளது. அவையெல்லாம் வெளிநாட்டு எதிரிகள் நமக்கு இழைத்தவை. ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை தனித்துவம் வாய்ந்தது.



    அது, நமக்கு நாமே தேடிக்கொண்ட சோகம். பல லட்சம் பேரின் வாழ்க்கையையும், ஆயிரக்கணக்கான சிறு தொழில்களையும் அழித்த தற்கொலை தாக்குதல்.

    அந்த நடவடிக்கை, மோசமாக வகுக்கப்பட்டு, தவறாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கை. ஆனால், நன்கு திட்டமிடப்பட்ட குற்றவியல் பொருளாதார ஊழல் ஆகும்.

    இதுதொடர்பான முழு உண்மைகள் இன்னும் வெளியாகவில்லை. அது வெளியாகும்வரை இந்திய மக்கள் ஓய மாட்டார்கள். அரசு எவ்வளவுதான் மறைத்தாலும் நாடு கண்டுபிடிக்கும். தகுதியற்ற நிதி மந்திரி உள்ளிட்டவர்கள், இந்த குற்றவியல் கொள்கைக்கு முட்டுக்கொடுக்கும் வேலையில் இறங்கி உள்ளனர்.

    பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. வெறும் பேரழிவாகவே முடிந்து விட்டதாக உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

    இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நாள், ஒரு மோசமான நாளாக இந்திய வரலாற்றில் எப்போதும் நினைவில் நிற்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். #Demonetisation #Congress #RahulGandhi
    வழக்கை வாபஸ் பெற பணம் தருவதாக பேராசிரியர் தரப்பினர் மிரட்டுகின்றனர் என்று திருவண்ணாமலை கல்லூரி மாணவி குற்றம் சாட்டியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வரும் சென்னை மாணவி, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

    விடுதியின் பெண் காப்பாளர்களான பேராசிரியைகள் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். இது சம்மந்தமாக நீதிபதி மகிழேந்தியிடம் மாணவி வாக்கு மூலம் அளித்தார். அதன் அடிப்படையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகம் சார்பிலும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருமாறு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த மாணவி தனது பெற்றோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா விசாரணை நடத்தினார். அப்போது பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளனர்.

    மேலும் மாணவியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்தும் போலீசார் அந்த மாணவியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் வாங்கினர். விசாரணை முடிந்து அந்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் சுமார் 5 மணி நேரம் கழித்து அங்கிருந்து வெளியே வந்தனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி நிருபர்களிடம் கூறுகையில்:-

    பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரில் போலீஸ் விசாரணை தனக்கு திருப்தி அளிக்கவில்லை, இது ஒருதலைப்பட்சமாக உள்ளது. என் மீது தவறு உள்ளது போலவே என்னை குறிவைத்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சார்பில் இருந்து வழக்கை வாபஸ் பெறக்கோரியும், இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் மிரட்டுகின்றனர் என்றார்.

    ‘‘முதலில் இந்த சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்தை மறைப்பதற்காக போலீசார் செயல்பட்டனர். ஆனால் இதில் நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் போலீசார் இந்த சம்பவத்தில் தீவிரம் காட்டி உள்ளனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

    இந்நிலையில், இது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையில் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    5 பேர் கொண்ட குழுவினர் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் விடுதி வார்டன்கள் உதவி பேராசிரியர்கள் மைதிலி மற்றும் புனிதா ஆகியோரிடமும் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளிடமும் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடித்து வெளியே வந்த உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் எந்த தப்பும் செய்யவில்லை. என்னை ஊடகங்கள் தவறாக சித்தரித்து விட்டதால் நான் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளேன் என்றார்.

    மாணவி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதாவிடம் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் பேராசிரியைகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. #ChennaiStudentharassment #AgriCollege

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் குற்றச்சாட்டி உள்ளது. #Thoothukudishooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1994-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்புகளில் இருந்த காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா கட்சியும் வேதாந்தா நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்தன. ஸ்டெர்லைட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் போது, வேதாந்தா நிறுவனத்தை பாதுகாத்தவர்களும் இக்கட்சியின் தலைவர்களே.

    இக்கட்சிகளின் முன்னாள்- இந்நாள் தலைவர்களும், உள்ளூர் தலைவர்களும், 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் இயங்குவதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது மட்டுமல்ல இந்த ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கும், புற்றுநோய்க்கு ஆளாகி மக்கள் கொல்லப்படுவதற்கும், 2018 மே 22 அன்று 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டிய முதற் குற்றவாளிகள் ஆவார்கள்.

    1994-ம் ஆண்டு முதல் 2018 வரை வேதாந்தா நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க, அ.தி.மு.க தலைவர்கள் இன்று “ஸ்டெர்லைட்டை மூடு” என்றும், “ஸ்டெர்லைட்டை மூடிவிட்டோம்” என்றும் நாக்கு கூசாமல் பேசுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் நிதியுதவி அளித்து தங்களுடைய குற்றச் செயல்களில் இருந்து தப்பிக்க வழி தேடுகின்றனர்.

    தி.மு.க.வுடனும், காங்கிரசுடனும் கூட்டணி அமைத்துள்ள ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் இக்குற்றவாளிகளோடு கூடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு நாடகமாடுகின்றன. வரப்போகும் தேர்தலில் மக்கள் சாவுகளை முன் வைத்து அரசியல் ஆதாயம் தேடவும் முயல்கின்றன.



    தூத்துக்குடி மக்கள் கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்ததால் 28-ந்தேதி இந்த ஆலைக்கு நிரந்தரமாக பூட்டுப் போடுகிறோம் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஆலை தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மக்கள் முனைப்பாக இருக்கின்றனர். சட்டமன்றத்தின் மூலம் அதற்கான சிறப்பு சட்ட வடிவத்தை நிறைவேற்றாமல், அரசாணை என்ற மழுப்பல் அறிக்கை என்பது வேதாந்தா நிறுவனத்தை பாதுகாக்கவே வழி வகுக்கும்.

    நிலம், நீர், காற்று, கடல் என தூத்துக்குடியின் சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் சீரழித்த பெருங்குற்றத்திற்காக வேதாந்தா தலைவர் அனில் சந்தீப் அகர்வாலும், ஸ்டெர்லைட் உயரதிகாரிகளும் கடுமையான குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசுகள் அனுமதியளித்ததால் பல்லாண்டுகளாக சீரழிக்கப்பட்ட இயற்கை வளங்களை சீரமைக்க வேண்டியதும், துப்புரவுப்படுத்த வேண்டியதும் அரசுகளின் கடமையாகும்.

    எனவே சீரமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் பெருஞ்செலவுகளுக்காக வேதாந்தா நிறுவனத்தின் அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஸ்டெர்லைட்டால் சீரழிக்கப்பட்ட தூத்துக்குடி வட்டாரத்தில் சீர்கேடுகளை ஆய்வு செய்ய உண்மை அறியும் குழுவை நியமிக்கவும், அதில் எதிர்ப்பு இயக்கம் சார்பாக அறிவியலாளர்கள் (விஞ்ஞானிகள்) பங்கேற்கவும் அரசு வழி செய்ய வேண்டும். தூத்துக்குடி வட்டாரத்தில் வாழும் மக்களின் உடல்நிலையை கண்டறிய உயர் மருத்துவக் குழுவை நியமித்து அரசின் முழுப்பொறுப்பிலான சிறப்பு மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்.

    முற்றுகை போராட்டத்தில் கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்குவது மட்டும் தீர்வல்ல. சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் தோல் நோய், மூச்சிளைப்பு நோய், புற்றுநோய் என இதுவரை பாதிக்கப்பட்டவர்களையும் கண்டறிந்து அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையும் அரசு வழங்க வேண்டும்.

    துப்பாக்கிச் சூட்டில் மக்களை குறிபார்த்து சுடும் அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்த திட்டமிட்டவர்கள் யார்? அதற்கான நடவடிக்கையில் அமைச்சரவையின் பங்களிப்பு என்ன? என்பது பற்றி அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

    மேலும் அதற்கான ஆணிவேராக, மூளையாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்த வெங்கடேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மகேந்திரன், டி.எஸ்.பி செல்வ நாகரத்தினம், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் ஆகிய உயரதிகாரிகளின் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thoothukudishooting

    ரஜினிகாந்துக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்க பார்க்கிறார் என்று தமிழருவி மணியன் குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை:

    காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரஜினிகாந்த் மக்கள் போராட்டத்துக்கு எதிரானவர் என்பதை போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் கமல்ஹாசன் ஈடுபட்டிருப்பதை அவருடைய கருத்து தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்-அமைச்சர் கனவு கலைந்துவிடக்கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும், சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தை திட்டமிட்டு சிதைக்க முற்படும் நேரத்தில் கமல்ஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும்.

    ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்த போராட்டத்துக்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதார போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது. ரஜினிகாந்த் சொந்த கருத்தை சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில் அவருடைய அந்தரங்க நோக்கம் தெளிவாகவே முகம் காட்டுகிறது. சொந்த கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல்ல அடையாளம்.

    ஆனால் எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினிகாந்த் தன் சொந்த கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவர் இல்லை. ரஜினிகாந்துக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்க பார்ப்பது வருந்தத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபை குற்றம் சாட்டி உள்ளது.
    மதுரை:

    தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏராளமானோர் தானமாக நிலங்களை வழங்கியுள்ளனர். கோவில் நிர்வாகத்தின் மெத்தனத்தால் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

    மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் எதிரே சுமார் 50 ஏக்கர் நிலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுப்பையா என்பவரால் தானமாக வழங்கப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி ஆகும்.

    இந்த நிலங்களை போலி ஆவணங்கள் தயாரித்து பெயர் மாற்றம் செய்து பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஒரு வருடத்திற்கு முன்பே கோவில் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் சொத்துக்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதே போல் தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனை மீட்க வேண்டும்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×